Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோசமான நிலையில் மனித உரிமை மீறல்கள். ஸ்ரீகாந்த எம்.பி

Featured Replies

முன்னொரு போதுமில்லாதவாறு இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக இடம் பெறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறந்து பேசுவதற்கு அஞ்சும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் சர்வதேசத்தின் கண்ணில் மண்ணை தூவுவதற்கான இராஜதந்திர நடவடிக்கையே சாட்சிகளை பாதுகாப்பும் சட்ட மூலமாகும். என த.தே.கூட்டணியின் பா.உ வான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

அரசின் சட்சிகளை பாதுகாப்பதற்கான சட்டமூலம் சர்வதேச சமூகத்தை முட்டாள் ஆக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். இது வெட்கக்கேடான செயற்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் நேற்று இடம் பெற்ற குற்றச் செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் : அரசு தரப்பு காலியாசனங்கள் இந்த சட்டமூலம் தொடர்பில் அரசு கொண்டுள்ள அக்கறையை தெளிவாகக் காட்டுகின்றன.

ஜெனிவாவில் அண்மையில் இடம் பெற்ற ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் உறுப்புரிமை பெறுவதற்கான தேர்தலில் இலங்கை மனித உரிமைகளின் நிலைவரம் தொடர்பின் சர்வதேச சமூகம் தெளிவாக தனது நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

சாவதேசத்தின் கண்ணில் மண்ணை தூவுவதற்கான இராஜதந்திர நடவடிக்கையாகவே இந்த குற்றச் செயல்களுக்கும் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கமான உதவி மற்றும பாதுகாப்பு சட்ட மூலத்தை நாம் நோக்குகின்றோம்.

ஸ்ரீமாவோ ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்த சட் விரோத மனித உரிமை மீறல்கள் ஜே.ஆர். ஆட்சிகாலத்தல் புதிய பரிமாணத்தை எடுத்து 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் மனித உரிமைகளை பறிக்கும் நிலைக்கு விஸ்வரூபமெடுத்தது.

தை மாதம் 1ம் திகதி முதல கடந்த 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 128 பேர் கடத்தபட்டு;ளளதாக அரசின் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவிததுள்ளார்.

முன்னொரு போதுமில்லாதவாறு இந்த அரசின் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக இடம் பெறுகின்றன.

மக்கள், ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் ஏன் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட வாய் திறந்து பேச அஞ்சுகின்ற சூழிநிலை காணப்படுகின்றது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சிகளையும் பாதுகாப்பதற்காகவே இந்த சட்ட மூலத்தை கொண்டு வந்ததாக அரசு கூறும் காரணததைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

இது ஒரு வெட்கக்கேடான செயற்பாடாகும். சர்வதேச சமூகத்தை முட்டாளாக்குவதற்கு மேற்கொள்ளபடடும் முயற்சியாகவே இதனை கருதுகின்றோம்.

ஈராக், ஆப்கானில் நடைபெறுவதைப் போன்று இங்கு எதுவும் இடம் பெறவில்லை என அரசு தரப்பு வாதிடுகின்றது.

நீண்ட காலமாக துன்பங்பளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும்; உள்ளாக்கபட்டு, தமது துன்பத்துக்காக அழக்கூட முயாத நிலையில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்காகவே இங்கு குரல் எழுப்புகின்றோம்.

அரசு தமிழ் மக்கள் மத்தியில் தனது நம்பகத் தன்மையை இழந்து விட்டது. சர்வதேச அரங்கில் இலங்கைக்கு சீன அரசு சார்பாக உள்ளது.

சீனா திபெத்தியர்களை ஆயுதக் கரங் கொண்டு ஒடுக்கி அவர்களை துன்புறுத்துவதோடு, அங்கு மனித உரிமை மீறல்கள் பாரியளவில் இடம் பெறுகின்றன.

அரசு இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும், இனப்பிரச்சினை தொடர்பாபகவும் மீள்பரிசீலனை செய்ய வேண்டும. போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு அரசைக் கேட்டுக் கொள்கின்றேன். என்றார்.

நன்றி வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.