Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெஹிவளையில் வெள்ளைவானில் இளைஞர் கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெஹிவளையில் வெள்ளைவானில் இளைஞர் கடத்தல்

Sunday, 22 June 2008

சுற்றாடல் அமைச்சில் சுற்றாடல் அதிகாரியாகப் பணிபுரிபவரும் ஊடகவியலாளருமான தி.திருக்குமரன் கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையில் வைத்து நேற்றிரவு 8.45 மணியளவில் இனந்தெரியாத ஆயுதபாணிகளால் வெள்ளைவானில் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். தெஹிவளை எபனேசர் வீதியிலுள்ள தொடர்மாடி இல்லத்தில் வைத்தே இவர் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருக்கின்றார்கள்.

சுற்றாடல் அதிகாரியாக தற்போது பணிபுரியும் திருக்குமரன் முன்னர் சக்தி தொலைக்காட்சியிலும் பின்னர் தினக்குரல் பத்திரிகையிலும் ஒரு ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர். 30 வயதான திருக்குமரனுக்கு ஒரு குழுந்தையும் இருக்கின்றது. தெஹிவளையிலுள்ள இவரது தொடர்மாடிப் பகுதி நேற்றிரவு 8.00 மணியளவில் காவல்துறையினரால் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டது. தெஹிவளை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களே இந்த சோதனையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்மாடிக் குடியிருப்பிலுள்ள நான்கு மாடிகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போது திருக்குமரன் தங்கியிருந்த இல்லமும் சோதனையிடப்பட்டது. சோதனையை முடித்துக்கொண்டு காவல்துறையினர் திரும்பிச் சென்ற சில நிமிட நேரத்தில் ஆயுத பாணிகளான நால்வர் திருக்குமரனின் இல்லத்துக்கு வந்துள்ளார்கள். இவ்வாறு சந்தவர்களுள் முன்னர் சோதனை நடவடிக்கைக்கு வந்த இரண்டு காவல்துறையினரும் காணப்பட்டனர்.

திருக்குமரனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், அதற்காக கீழே வருமாறும் அவர்கள் அழைத்துள்ளார்கள். அப்போது திருக்குமரனின் தந்தையாரும் அவர்களுடன் கீழே சென்றுள்ளார். கிழே சிவில் உடையில் ஆயுதபாணிகளாக பலர் நின்றுள்ளார்கள். கீழே சென்ற திருக்குமரனை அங்கு நின்ற வெள்ளை வான் ஒன்றில் ஏற்றுவதற்கு அவர்கள் பலவந்தமாக முயன்ற போது அவரது தந்தை அதனைத் தடுப்பதற்கு முற்பட்டார். அதனால் ஆயுத பாணிகள் தந்தையை கடுமையாகத் தாக்கி தள்ளிவிழுத்திவிட்டு திருக்குமரனை வெள்ளை வானில் ஏற்றிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெஹிவளை காவல்துறையில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்த போது இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது பற்றி மக்கள் கண்காணிப்புக் குழுவுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

http://www.ajeevan.ch/content/view/3573/1/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.