Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலைஞர் கருணாநிதியும் இலங்கைத் தமிழ் அகதிகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணாநிதியும் இலங்கைத் தமிழ் அகதிகளும்

[29 - June - 2008]

தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் எந்தவொரு சொத்துக்களையும் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக மூண்டிருக்கும் யுத்தத்தால் வட, கிழக்கிலிருந்து தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக சென்றுள்ளதுடன் தற்போதும் அவர்களின் படகுப் பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு வட, கிழக்குத் தாயகத்திலிருந்து மட்டுமல்லாமல் 1983 இனக்கலவரத்தின் பின்னர் மலையகம் மற்றும் கொழும்பிலிருந்தும் கூட தமிழ் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர். இவர்களில் கணிசமான தொகையினர் மீண்டும் திரும்பிவந்துவிட்டபோதும் மீதிப்பேர் தமிழ் நாட்டிலேயே தங்கிவிட்டனர். அதேநேரம், வடக்கே மன்னார் மற்றும் தீவுப் பகுதிகளிலிருந்தும் கணிசமான தமிழர்கள் படகுகள் மூலம் தமிழ் நாட்டிற்கு சென்று அங்குள்ள அகதிமுகாம்களில் அவல வாழ்வை நடத்திக்கொண்டிருக்கின்றனர். இவர்களில் சிறிய தொகையினர் வெளிநாடுகளிலுள்ள தமது உறவினர்களின் உதவியுடன் முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருவதுடன் சிறு சிறு தொழில் முயற்சிகளிலும் ஈடுபட்டு தமது ஜீவனோபாயத்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

இந்த மக்களின் கனவும் எதிர்பார்ப்பும் தமது பிறந்த மண்ணிற்கு எப்போது திரும்பிச் செல்வது என்பதும் தொலைந்த உறவுகளுடன் எவ்வாறு மீண்டும் சேர்வது என்பதும் தாயகத்திலே சுயகௌரவத்துடன் இயல்பு வாழ்வை மேற்கொள்வது என்பது பற்றியது மட்டுமேயாகும். சொல்லொணா துன்பத்திலும் மன அழுத்தத்திலும் சிக்கியுள்ள அந்த அகதி மக்களுக்கு பேரிடியாக அவர்கள் எந்தச் சொத்தும் வைத்திருக்க முடியாது என்ற உத்தரவு தமிழக முதல்வரிடமிருந்து பிறந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது புலம்பெயர்ந்துவாழும் உலகத் தமிழர்களுக்கும் பேரதிர்ச்சியையும் விசனத்தையும் வார்த்தை கொண்டு வர்ணிக்க முடியாத கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. தமிழ் நாட்டில் அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுடன் முகாம்களுக்கு வெளியேயுள்ள இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அவர்கள் வைத்திருக்கும் உடமைகளின் விபரம் கணக்கிடப்படும் பணி ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இதற்கான உத்தரவு உலகத் தமிழர்களின் தலைவரென்ற மதிப்பையும் கௌரவத்தையும் பெற்றிருக்கும் முதுபெரும் தலைவரான கலைஞர் கருணாநிதியிடமிருந்து பிறந்திருக்கின்றதே என்பதுதான் உலகத் தமிழர்களுக்கு குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தீராக் கவலையாகும்.

?வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்? என்று கலைஞரே வாயாராக் கூறி திருப்தியடைந்ததை அறிந்திருக்கிறோம். சொந்த வீட்டில் பிறந்த மண்ணில் இருக்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாக்குநீரிணையைக் கடந்து சென்ற இந்த அகதிகளுக்கு இருந்த ஒரேயொரு சிறிய நம்பிக்கை அக்கறையில் எமது தொப்புள் கொடி உறவுகள் எம்மை அரவணைத்து பாதுகாக்கும் என்பது மட்டுமே. அதிலும் தமிழ் நாட்டின் பலம் பொருந்திய அரசியல் அதிகாரம் கொண்டவராக விளங்குபவரும் தமிழுக்காக தமிழருக்காக தனது உயிரையும் தியாகம் செய்ய தயங்கமாட்டேன் என்று சூளுரைத்து வருபவரான கலைஞர் எப்போதுமே நேசக்கரம் நீட்டி அபயம் அளிப்பார் என்ற உறுதியான நம்பிக்கை எப்போதுமே பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இருந்து வருகிறது. ஆனால், அந்தக் கனவு இப்போது கலைந்துவிட்டது போன்றே எண்ணத்தோன்றுகிறது. 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து மேற்கு நாடுகளுக்கும் கணிசமான தொகை தமிழர்கள் சென்று வாழ்ந்து வருகின்றனர். பலருக்கு அந்நாடுகள் பிரஜாவுரிமை வழங்கி சொந்த மக்களாக ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், மேற்குலகு செய்யாதவொரு கைங்கரியத்தை கருணாநிதி செய்திருப்பதன் மூலம் உலகத் தமிழர்களின் தலைவன் என்ற அந்தஸ்திலிருந்தும் கீழ் இறங்கிவிட்டார் என்று இந்த விடயம் தொடர்பாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

கருணாநிதி ஏன் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டார் என்பது உண்மையிலேயே வியப்புக்குரிய விடயமாகும். தமிழக மாநில நிர்வாகம் அவரின் கரங்களிலேயே தற்போது உள்ளது. அதனை விட இந்திய மத்திய அரசில் அவரின் தி.மு.க. பலம் பொருந்திய கூட்டணிக் கட்சியாக விளங்குகின்றது. இந்நிலையில் தமிழ் நாட்டில் தங்கியிருக்கும் சுமார் ஒரு இலட்சம் மக்களின் உடமைகளை கணக்கெடுத்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை என்ன? என்பதே புரியாத புதிராக உள்ளது. அவரின் பிரதான அரசியல் எதிரியான அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட தமது ஆட்சிக் காலத்தில் இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுத்திராதபோது கலைஞருக்கு தற்போது எழுந்திருக்கும் தேவை என்ன? என்பதே மர்மமாக உள்ளது. தமிழ் நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளுமே இலங்கைத் தமிழர் பால் மிகுந்த அன்பும் கரிசனையும் கொண்டவையாக இருக்கின்றன. இலங்கையில் தமது உறவுகள் அனுபவிக்கும் துன்பங்களைக் கண்டு அக்கட்சிகளின் தலைவர்கள் மிகுந்த துன்பத்துடன் குரல் கொடுத்து வருகின்றார்கள். இலங்கைத் தமிழர்கள் தமது மண்ணில் சுயகௌரவத்துடன் அமைதியான வாழ்வை முன்னெடுக்க தமிழக அரசும் இந்தியாவும் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டுமென்றே அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அதேவேளை, கலைஞரும் இலங்கைத் தமிழர் சமாதான சகவாழ்வை முன்னெடுக்க வேண்டுமென்ற பெருவிருப்புக்கொண்டவராகவே இருந்து வந்தவர். அவர்களுக்கான அரசியல் தீர்வு இரு தேசங்கள் ஒன்றிணைந்த கூட்டுச் சம்மேளனமாக அமையவேண்டும் என்று கூட ஒரு தடவை கூறியவர். இலங்கை அகதிகளின் பிள்ளைகளின் கல்விக்காக அதிகப்படியான வசதி வாய்ப்புகளையும் செய்துகொடுத்தவர். இத்தகைய உயர்ந்த மனிதாபிமானம் கொண்ட அவரின் தற்போதைய நடவடிக்கைகளுக்கான மனமாற்றத்திற்கான காரணம் என்ன என்பதுதான் புதிராக உள்ளது. அத்துடன், இலங்கைத் தமிழ் அகதிகளின் பிரச்சினை அவருடையதும் அவரின் குடும்பத்தவர்களினதும் அரசியல் நடவடிக்கைகளுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பையோ அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது என்பது நிச்சயமாகும். இந்நிலையில் கலைஞர் இலங்கை அகதிகள் தொடர்பாக எடுத்திருக்கும் சில கடினமான தீர்மானங்களில் தளர்வுப் போக்கை கடைப்பிடித்து அவர்களின் தாயகத்தில் அமைதி திரும்பி அவர்கள் திரும்பிச் செல்லும் வரையிலாவது அவர்கள் தமிழ் நாட்டில் அமைதியுடன் அடிப்படை வசதிகளுடன் வாழ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

http://www.thinakkural.com/news/2008/6/29/...l_page53498.htm

இதுசம்பந்தமாக பல இணையத்தளங்கள் உட்பட பலர் உண்மைக்குப் புறிம்பான செய்திகளையே பரப்பி வருகின்றார்கள். பொய்யான ஆவணங்களை வைத்து தமிழகத்தில் சொத்து வாங்கியோர் மீதே நடவடிக்கை எடுப்பதற்காகவே தமிழகத்தில் சொத்து வாங்கிய இலங்கைத் தமிழர்களின் விபரங்கள் திரட்டப்படுவதாகவே கலைஞர் குறிப்பிட்டுள்ளார். அப்படி பொய்யான ஆவணங்களை வைத்து சொத்து வாங்கியிருந்தால் அது சட்டப்படி குற்றம் தானே. அதில் நடவடிக்கை எடுப்பதில் என்ன தவறு. எதிர்காலத்தில் ஆட்சி மாறி ஒருவேளை ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவ்விடயத்தை வைத்தே கலைஞர் புலிகளுக்கு தமிழ்நாட்டையே விற்றுவிட்டார் என்று துள்ளிக்குதித்து அறிக்கை விட ஆரம்பித்து விடமாட்டாரா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.