Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை பிடியில் 1080 மீனவர்கள் : வழக்கம்போல் அரசு மவுனம்

Featured Replies

ராமேஸ்வரம்

புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதாக கூறி 270 விசைப் படகுகளையும்இ அதில் இருந்த 1080 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து கொண்டு சென்றதையடுத்து ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று காலை 270 படகுகளில் 1080 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். பிற்பகல் 3 மணியளவில் அவர்கள் கச்சத்தீவு அருகேமீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை 40 க்கும் மேற்பட்ட படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவர்கள் படகுகளில் இறங்கி சோதனையிட்டனர். அப்போது பல மீனவர்கள் தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகளும் சேதப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து அனைத்துப் படகுகளையும் துப்பாக்கி முனையில், தலைமன்னாருக்கு கடற்படையினர் கொண்டு சென்று, 1080 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.

இரவு 8 மணியளவில்தான் ராமேஸ்வரத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்திற்கும், மண்டபத்தில் உள்ள கடலோரக் காவல் படை முகாமுக்கும் இதுகுறித்து இலங்கை கடற்படை தகவல் தெரிவித்தது.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து தாங்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை திமிர்த்தனமான விளக்கத்தை அளித்துள்ளது.

மேலும் தாங்கள் சிறைப் பிடித்த மீனவர்களையும், படகுகளையும் ஒவ்வொருவராக விடுவித்து வருவதாகவும் அது கூறியுள்ளது. தாங்கள் பிடித்துச் சென்ற மீனவர்களில் 1076 பேரை விடுவித்துள்ளதாகவும், 4 பேரை தலைமன்னார் சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இதுவரை இல்லாத அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கடத்திச் சென்றுள்ளது ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், கண்ணீரும், கம்பலையுமாக கடற்கரையில் தவித்தபடி நிற்கின்றனர்.

இது குறித்து முதலமைச்சர் கருணாநிதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய மீன்வர்களின் குடும்பத்தினர், அவர் வழக்கம்போல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை தவிர வேறு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளமாட்டார் என்றும் ஆவேசமாக குறிப்பிட்டனர்.

மேலும் " மத்திய அரசும் கொஞ்சம் கூட சொரணையில்லாமல், அளவில் சுண்டைக்காயாக இருக்கும் இலங்கைஇ இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வதையும், கடத்திச் செல்வதையும் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கும்.

நம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அணுசக்தி ஒப்பந்தம்தான் பெரிதாக தெரிகிறதே தவிர இதுபோன்று தமிழக மீனவர்களை இலங்கை துன்புறுத்தும் விஷயங்களிலெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை.

மாறாக நமது பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் போன்றவர்களை இலங்கைக்கு அனுப்பி அவர்களுக்கு எந்த விதத்தில் உதவுவது என்பது குறித்துதான் அவர் கவனம் செலுத்துவார்.அவர்கள் நம்மிடமே உதவி பெற்றுவிட்டுஇ அந்த உதவி மூலமாகவே ஆயுதங்களை வாங்கி நமது மீனவர்களை சுட்டுக் கொல்வார்கள்.உலகத்தில் எந்த ஒரு நாடும் இப்படி 'அண்டை நாடு...., நட்பு நாடு' என வசனம் பேசிக் கொண்டு மழுங்கிக் கொண்டிருக்காது

அதைவிட நமது நாராயணன் போன்றவர்களுக்கு தமிழர்கள் என்றாலே இளப்பம்தான்.அது இந்திய தமிழர்கள் என்றாலும் சரி, இலங்கை தமிழர்கள் என்றாலும் சரி....! " என பொங்கி தீர்த்தனர் அவர்கள்.

நன்றி : யாகூதமிழ்(மூலம் - வெப்துனியா)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1,000 ‌மீனவ‌ர்க‌ள் ‌சிறைபிடி‌த்து சரமா‌‌ரியாக தா‌க்‌கிய சி‌றில‌ங்கா கடற்படை!

ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 1000 பேரை ‌நடு‌க்கட‌லி‌ல் சி‌றி‌‌ல‌ங்கா கட‌ற்படை‌யின‌ர் ‌சிறை‌ப்‌பிடி‌த்து சரமா‌ரியாக தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமே‌ஸ்வர‌‌த்தை சே‌ர்‌ந்த மீனவர்கள் 600 ‌விசை படகுக‌‌ளி‌ல் கச்சத்தீவு பகுதியில் நே‌ற்று மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது, அ‌ங்கு வ‌ந்த ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் து‌ப்பா‌க்‌கியா‌ல் வான‌த்தை நோ‌க்‌கி சு‌ட்டன‌ர். இதனா‌ல் அ‌‌‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் அ‌ங்‌கிரு‌ந்து கரை‌க்கு படகை செலு‌த்‌தின‌ர். ‌சில படகுக‌ள் நடு‌க்கட‌லி‌ல் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்தது.

இதனா‌ல் ஆ‌த்‌திர‌ம் அடை‌ந்த ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌யின‌ர், 1000 பேரை சுற்றி வளைத்து ‌சிறை‌‌பிடி‌த்து சரமா‌ரியாக தாக்கினர்.

இதை பா‌‌ர்‌த்து அ‌தி‌ர்‌ச்‌சி அடை‌ந்த ம‌ற்ற மீனவர்கள் உ‌யிரை கை‌யி‌ல் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டு படகுகளை வேகமாக செலு‌த்‌தி கரைக்கு வந்து சேர்ந்தனர்.

இத‌ற்‌கிடையே ‌சிறை‌ப்ப‌ிடி‌த்த 1000 மீனவர்களை து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌யின‌ர் தலைமன்னாருக்கு கொ‌ண்டு சென்றனர். ‌பி‌ன்ன‌‌ர் அவ‌ர்க‌ள் அனைவ‌ரையு‌ம் எ‌ச்ச‌ரி‌க்கை செ‌ய்து ‌சி‌றில‌ங்கா கட‌ற்படை‌யின‌ர் ‌விடு‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் ராமே‌ஸ்வர‌ம் பகு‌தி‌யி‌‌ல் பரபர‌ப்பு‌ம் பத‌ற்ற‌மு‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் அ‌ட்டூ‌ழிய‌ம் தொடர்ந்து நட‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறது. இது கு‌றி‌த்து மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.