Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் விழிப்புணர்ச்சி - சாண்டில்யன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர்ந்து வாழ் நிலையில் தமிழ் மக்களாகிய நாம் பல விடயங்களை அறியக் கூடியதாக உள்ளது.

குழப்ப நிலையில் உள்ள நாம் பல விடயங்களை தவறாக உணர்ந்துள்ளோம். இந்திய அரசு வடக்கையும் கிழக்கையும் இணைத்தே அரசாள வேண்டுமென்று விரும்புகின்றார்கள். ஆனாலோ, இலங்கை அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் பி¡¢த்து ஒரு 21ம் நூற்றாண்டு சா¢த்திரத்தைப் படைத்திருக்கின்றது. இதன் குறிக்கோள் என்ன? கிழக்கில் உள்ள தமிழ் மக்களை இன ¡£தியாக சிங்கள இனத்தினுள்ளே உறிஞ்சி எடுப்பதுதான். அது மாத்திரமல்ல; குடி ஏற்றுவதன் மூலம் கிழக்கை சிங்கள மயமாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோள். ஒரு சில கால கட்டத்தில் கிழக்கே வாழ் தமிழர் தங்களுடைய பெயா¢ல் ஒரு இரு எழுத்துக்களை நீக்கி விட்டு தாங்களும் சிங்கள மக்கள் என்று கூறத் தயங்கமாட்டார்கள். எத்தனையோ இனங்கள் பல நாடுகளில் இப்படியாக மறைந்து போனதை நாம் கண் கூடாக பார்க்க முடியும். பல நூல்களில் வாசித்தறிய முடியும்.

ஒரு நாட்டின் விடுதலைப் போரட்டத்தின் ஒழுக்க அமைப்பு எப்படி இருக்கவேண்டும்? (1) விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரே குறிக்கோளோடு ஒருமைப்படவேண்டும். அதன் தலைவனுக்கு வீரர்கள் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு அவர்களுடைய முழு ஒத்துழைப்பைக் கொடுக்கவேண்டும். அதன் தலைவன் வீரர்களுக்கு ஒப்பாக வைராக்கியத்தோடு வழிகாட்டி நடத்திச் செல்லவேண்டும். (2) புலம் பெயர் வாழ் மக்கள் பல பா¢மாணங்களில் தங்கள் ஆதரவை வழங்க வேண்டும். முடியுமானால், அரசியல் ரீதியில் பிரச்சாரம் செய்யவேண்டும். (3) வேற்று நாட்டு அரசாங்கம் யார் கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்? விடுதலைக்காக போராடும் இனத்தின் அந்த நாட்டின் அரசியல் பிரதி நிதிகளின் கூற்றுக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரவளிப்பது நிகழக்கூடியது. எமது பார்வையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்துப் பிரதி நிதிகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதால் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவே தவிர நட்டம் ஒன்றுமில்லை. அதாவது;- தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கவேண்டும். எதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டுமென்று கேட்பது எமது அறியாமையே!. அத்தோடு இப் பிரதி நிதிகள் ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு ) குரல் கொடுக்க வேண்டும். அடக்கி வாசிக்கலாகாது! பி¡¢த்தானியாவுக்குச் சென்றால் ஆங்கிலத்தில் குரல் கொடுக்க வேண்டும். ஆங்கிலம் தொ¢யவில்லயா? அப்படியென்றால் பின் நின்று, தொ¢ந்தவர்களை முன் செல்ல விலகி நின்று அனுமதிக்கவேண்டும். அவருடைய சொந்தம் - இவருடைய சொந்தம் என்று எல்லாவற்றிற்கும் ஆடு கடிப்பதைப்போல் முன் நிற்பது தவறுதலானது. விடுதலைப் போராட்டத்தின் வேகத்தைக் குறைக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதற்காக கிழக்கில் கடந்த தேர்தலில் போட்டியிட வில்லை? எமது பார்வையில் என்ன தொ¢வதென்றால்? தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் போட்டியிட்டால், கிழக்கு பி¡¢ந்தி¡¢ப்பதை ஆதா¢க்கின்றோம் என்றல்லவா கட்சியின் கொள்கை பிரதிபலிக்கும்? அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதி நிதிகளல்லவா? ஆனபடியால் தேர்தலில் போட்டி இடவில்லை.

இரண்டாவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரளுமன்றத்துப் பிரதி நிதிகள் எதற்காக இலங்கைப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றார்கள். மேலே கூறியபடி, அரசியலில் இருந்து கொண்டு பாரளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்கள், வெளி நாடுகளில் பிரச்சாரம் செய்வது ஒரு அளவில் வெற்றியைத்தான் கொண்டு வரும். த. தே. கூ. அங்கத்தவர்கள் வெளி நாடுகளில் சென்று பிரச்சாரம் செய்யவேண்டும். அரசியல் ரீதியில் எந்த ஒரு நாடும் அதை ஏற்றுக்கொள்ளும். அத்தோடு மற்றய நாட்டு அரசியல் வாதிகளும் அதற்குச் செவி மடுப்பார்கள். இதில் நாம் காண்பது என்னவென்றால்:- ஒரு சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகளே வெளி நாடுகளில் பிரச்சாரம் செய்கின்றார்கள். உள் நாட்டிலும் குரல் கொடுக்கின்றார்கள் மற்றய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகள் நல்ல பிள்ளைக்கு நடித்து இலங்கை அரசாங்கத்திடம் நல்ல பிள்ளை பெயர் வாங்குவதற்காக அடக்கி வாசிக்கின்றார்கள். இப்படியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் வாதிகள் எமக்குத் தேவையா என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

மாமனிதர் ரவிராஜ் ஒரு பொ¢ய விடுதலை வெற்றி வீரர். அவருடைய மரணம் ஒரு திசை திருப்பத்தைக் கொண்டு வந்திருக்கின்றது.

நன்றி வணக்கம் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.