Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிள்ளையான் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரென்பதால் கருணாவுக்கு முதலமைச்சர் பதவி ஒருபோதும் வழங்கப்படாது - அஸாத் மௌலானா

Featured Replies

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். அதனால் கருணா மீண்டும் நாடு திரும்பினாலும் முதலமைச்சர் பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லையென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் ஆஸாத் மௌலானா தெரிவித்தார்.

பி.பி.சி. செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த ஆஸாத் மௌலானா மேலும் கூறுகையில்; கருணா நாடு திரும்பிவிட்டாரென்பதால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் மாற்றம் எதுவும் ஏற்படாது. பிள்ளையான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதால் அவரே கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவிருப்பார். கருணாவுக்கு அந்தப் பதவி வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது :

இன்று (நேற்று) தான் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக எங்களுக்கு கருணா தொலைபேசியில் அறிவித்துள்ளார். அவர் இலங்கையில்தான் இருக்கின்றார். இன்று பிற்பகல் 4 மணியளவிலேயே அவர் எம்முடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார்.

அவரது அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து விரிவாக ஆராயவில்லை. மிக விரைவில் இது தொடர்பில் எமது அரசியல் உயர்மட்டத்துடன் அவரை சந்திக்கவுள்ளோம். அந்த நேரத்தில் எதிர்கால நடவடிக்கை குறித்து விரிவாக ஆராயப்படும்.

அவர் வருவதை ஏற்கனவே நாம் எதிர்பார்த்திருந்தோம். என்னுடன் மட்டுமல்லாமல் ஏனைய முக்கிய உறுப்பினர்களுடன் அவர் தொடர்பை ஏற்படுத்தி தனது வருகையை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் எதிர்காலத்தில் எல்லோரும் இணைந்து வேலை செய்ய வேண்டுமென அழைப்பையும் இதன்போது விடுத்துள்ளார்.

நான் அறிந்தவகையில் அவர் மாத்திரம் வந்துள்ளார். அவரது குடும்பம் தற்போது ஏற்கனவே இருந்த இடத்தில் பாதுகாப்பாக உள்ளனரென அறிகின்றேன். கருணா திரும்ப வருவது குறித்து எம்மிடம் ஆலோசனை பெறப்படவில்லை. அதற்கான கேள்வியும் எழவில்லை. அரசாங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

பிள்ளையானை பொறுத்தவரையில் அவர் மிக தெளிவாக இருக்கின்றார் என்று நினைக்கின்றேன். உண்மையில் எல்லோரது இலக்கும் ஒன்றாக உள்ளது. தம்மை நம்பியுள்ள மக்களுக்கு என்ன செய்வது என்பதுதான் எமது நோக்கம்.

பொது இலக்கில் நாம் அனைவரும் ஒத்துழைப்பதன் காரணமாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் கட்சிப் பணி வேகமாகவும் சீராகவும் இடம்பெறும் என நம்புகின்றேன்.

ஆனால், கருணா அழைத்துவரப்பட்டதன் நோக்கமே விரைவில் வடபகுதியிலே இலங்கை அரசாங்கம் பெருமளவு பரப்பை மீட்கவிரும்புகின்றது. அதற்காகவே அவரை அழைத்து வந்ததாக விமர்சகர்கள் கூறுகின்றார்கள். ஆனால், அது குறித்து எனக்குத் தெரியவில்லை. இலங்கை அரசை பொறுத்தவரையில் எங்களது உதவியை பெற்றுத்தான் வட போர் நிலையை முன்னெடுக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

இலங்கை இராணுவம் பலமாகவுள்ளது. சிறந்த வழிகாட்டல் காரணமாக முன்னேறிச் செல்கின்றனர். இன்று வட பகுதியில் பெருமளவு பகுதியை கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், இராணுவ நோக்கத்துக்காக அழைக்கப்பட்டது என்ற கூற்றை ஏற்கவில்லை என்றார் அவர்.

நன்றி தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.