Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடன் வாங்கி கல்யாணம் செய்வது போன்று அரசாங்கத்தின் நடவடிக்கை அமைந்துள்ளது - ரவி கருணாநாயக்க

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரகேசரி நாளேடு 7/4/2008 8:02:49 PM - பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பக்கம் 96 உறுப்பினர்களே அமர்ந்துள்ளார்கள். இந்த சூழ்நிலையில் பாராளுமன்றத்தினை முன்னெடுக்கும் தார்மீகக் கடப்பாடு அரசாங்கத்துக்கு இல்லாது போயுள்ளது. எனவே அரசாங்கம் பொதுத் தேர்தலை உடன் நடத்த வேண்டும் என்று ஐ.தே.க. வின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கடன் வாங்கிக் கல்யாணம் செய்வதைப்போன்று அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது,

மாகாண சபைகளில் அரசுக்கு பெரும்பான்மை இல்லையென கலைத்து தேர்தல்களை நடத்தும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களில் 96 உறுப்பினர்களை தவிர ஏனையோர் தமது ஆசனங்களை விட்டு மாறி அர்ந்துள்ளனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பாராளுமன்றத்தை முன்னெடுப்பது தார்மீகக் கடமையாகுமா? எனவே பாராளுமன்றத்தை கலைத்து அரசாங்கம் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.

அரச நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும் நிலையில் கடன் வாங்கிக் கல்யாணம் செய்வது போல் தேவையற்ற செலவுகளை செய்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பணமில்லையெனக் கூறும் அரசாங்கம் தேர்தல்களுக்கு 8 மில்லியன் ரூபாவையும் சார்க் மாநாட்டுக்கு ரூபா 2800 மில்லியனையும் செலவழிக்கின்றது இது தேவைதானா?

இம்முறை மாலைதீவிலே சார்க் மாநாடு நடத்தப்பட வேண்டும். ஆனால் நிதிப் பற்றாக்குறையென அந்நாடு கைவிட்டது. இதனை அரசாங்கம் வலிய பெற்றுக் கொண்டுள்ளது. இதனால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

உள்ளூர் உற்பத்திகளுக்கு முதலிடம் வகுக்கப்படுமென உறுதியளித்த அரசாங்கம் உப்பையும் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவுள்ளது. நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக விவாதம் நடத்த முன்வருமாறு அமைச்சர்களை கேட்டால் அழுகிறார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் தமக்கு பொலிஸ், காணி உரிமைகள் வேண்டுமென்றும் வெளிநாடுகளுடன் தொடர்புகளை பேணும் உரிமை தேவையென்றும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

பண வீக்கம் இன்று 38.9 வீதம் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கித் தலைவர் யுத்தத்தால் பண வீக்கம் அதிகரித்துள்ளதென்றும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியோ அவ்வாறு ஒன்றும் இல்லையெனக் கூறுகிறார். அரசாங்கத்திற்கு கடன் வழங்கிய எச்.எஸ்.பி.சி. வங்கியும் பண வீக்கம் அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.