Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் அரசியல் பிழைப்புக்கு யுத்த விவகாரமே தஞ்சம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2008-07-05

அரசின் அரசியல் பிழைப்புக்கு யுத்த விவகாரமே தஞ்சம்

அரசியல் "வங்குரோத்து' நிலையை அடைந்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு, யுத்தம் ஒன்றை நம்பியே தன்னுடைய அரசியல் காய் நகர்த்தல் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

"செல்லும் செல்லாதது எல்லாம் செட்டியார் தலை மேலே' என்பது போல தன்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் அரசியல் ரீதியாக சமாளிப்பதற்கு நாட்டின் யுத்த விவகாரத்தை நாடுவது ஒன்றே வழி என்ற இக்கட்டில் அரசுத் தலைமை இருப்பது துலாம்பரமாகத் தோன்றுகின்றது.

நாய்க்குக் கல்லெறிந்தால் நாயின் உடலில் எந்த இடத்தில் அந்தக் கல் பட்டாலும் நாய் காலை நொண்டிக் கொண்டு ஓடும் என்பார்கள். கல்லால் அடித்த நோவு எங்கு ஏற்பட்டாலும் காலில் அடிபட்டமை போலவே நாய் நடந்து கொள்ளுமாம்.

அது போலவே இருக்கின்றது இந்த அரசின் செயற்பாடும். என்ன பிரச்சினை வந்தாலும் அதைக் கொண்டு போய் யுத்தத்துடன் பொருத்திக் காட்டித் தப்பிக் கொள்ள எத்தனிப்பதே அரசின் செயற்பாடாக உள்ளது.

மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளில் இருந்து அரசமைப்புக் கவுன்ஸிலை நியமிக்கும் அரச சட்ட சிக்கல் வரை சகலவற்றிலிருந்தும் தனது தலையைக் காத்துக் கொள்ளும் அம்சமாக யுத்தத்தையே பயன்படுத்த எத்தனிக்கிறது இந்த அரசு.

பௌத்த சிங்களப் பேரினவாதத்தில் புதைந்து கிடக்கின்றது தென்னிலங்கை. அந்தத் பேரினவாதத்தைத் தூக்கிப் பிடித்து, மேலாண்மை அதிகாரத்தை நிலைநிறுத்த எத்தனிக்கும் பேரினவாதிகளால் தெற்கில் சுலபமாக அரசியல் பிழைப்பு நடத்த முடியும். அதுதான் களச் சூழ்நிலை. யதார்த்தம்.

அதுவும் மேலாண்மைத் திமிரோடு பேரினவாத மேலாதிக்கத்தோடு சிறுபான்மை இனங்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்துவதில் முனைப்பாக நிற்பவர்கள் தெற்கில் கதாநாயகர்களாக போற்றப்படும் சூழ்நிலை இலங்கைத் தீவில் நிலவுகின்றது.

அத்தகைய இனவாதப் போக்கு தப்பு எனத் தெரிந்து, நியாயத்தை ஏனைய இனத்தவர்களையும், குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்களையும் சமதையாக மதித்து, அவர்களின் கௌரவ வாழ்வை உறுதிப்படுத்துவது இத்தேசத்தின் பெரும்பான்மையினரான சிங்களவர்களின் கடமை என்று நீதியை உரைக்கும் சிங்கள அரசியல்வாதிகள் "வில்லன்'களாகவும் "துரோகி'களாகவும் சித்திரிக்கப்படும் அவலம் இங்கு நீடிக்கின்றது.

இந்த இடைவெளிக்குள் வெற்றிகரமாக அரசியல் நடத்துவதற்கு பேரினவாதத்தை அரவணைத்துக் கொள்வதே ஒரே வழி என்ற யதார்த்த புற நிலையை நன்கு உணர்ந்து கொண்டு, அதைப் பயன்படுத்தி அரசியல் செய்வது மாத்திரமல்ல அரசின் நடவடிக்கைகளையும் அந்தப் பாதையில் கொண்டு செல்கிறது இந்த அரசுத் தலைமை.

இந்த அரசின் மோசமான கொள்கைகள், முறையற்ற ஆட்சி, ஊழல், லஞ்சம், துஷ்பிரயோகம் போன்றவற்றினால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து கிடக்கின்றது.

இந்தக் கெடுதியினால் அன்றாடச் சீவியத்துக்கு வழியின்றி அல்லாடும் தென்னிலங்கைக் குடும்பங்கள் வீதிக்கு வந்துவிட்டன.

இனியும் இந்தக் கெடுதி நிலையை சகிக்க முடியாது என்ற இக்கட்டுக்கு உள்ளாகியிருக்கும் தென்னிலங்கை மக்கள் தமது புழுக்கத்தை, எரிச்சலை, விசனத்தைத் தெரிவிப்பதற்காக எதிர்வரும் பத்தாம் திகதி நாடளாவிய ரீதியில் பொது வேலைநிறுத்தம் ஒன்றுக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.

இதனால் கலக்கமடைந்த அரசுத் தலைமை வழமைபோல இந்த விவகாரத்தைச் சமாளிக்கவும் "யுத்தம்' என்ற விவகாரத்தை முன்னிறுத்தி இருக்கின்றது.

மேற்படி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் வேலை நிறுத்தம் அரசின் யுத்த வெற்றிகளைச் சின்னாபின்னமாக்கிச் சிதறடித்துவிடும். அப்படி யுத்த வெற்றியைச் சிதறடித்து, நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் அரசியல் பின்னணியுடனேயே இந்த வேலை நிறுத்தப் போராட்டச் சதி சில தரப்புகளினால் பின்னப்படுகின்றது என்று அரசுத் தலைமை வழமைபோல குற்றம் சுமத்தியிருக்கின்றது.

நூற்றுக்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அரசின் அரசியல் இருப்புக்கே சவால் விடும் ஒரு முக்கிய விவகாரமாகும்.

அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்ற கொழும்பு அரசு, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல அரசின் யுத்தவெற்றிகளைச் சிதறடிக்கவே வேலை நிறுத்தப்போராட்டச் சதி என்று கதையை அவிழ்த்து விட்டிருக்கின்றது.

தமிழர் தாயகம் மீதான கொடூரப் போரை ரசித்துச் சுவைக்கும் நற்செய்தியாகக் கருதுகின்ற தென்னிலங்கையில் இந்தக் கதை நன்றாக எடுபடும் என்பது உறுதி.

தமிழருக்கு எதிரான யுத்தத்தில் வெல்வதாயின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்காமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடப்படும் கதைக்கு வழமைபோல முட்டாள்தனமாக தென்னிலங்கை எடுபடுமா என்பது ஜூலை 10 ஆம் திகதி அடுத்த வியாழக்கிழமை தெரியவந்து விடும்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.