Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீனவர் பிரச்சினை இலங்கை - இந்திய இராஜதந்திர சர்ச்சைக்கு வழிவகுக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்சினை இலங்கை - இந்திய இராஜதந்திர சர்ச்சைக்கு வழிவகுக்கும்

[06 - July - 2008]

*அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா எச்சரிக்கை

இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பரப்புக்குள் தொடர்ந்து செல்வது இருநாடுகளுக்குமிடையில் இராஜதந்திர ரீதியான சர்ச்சைக்கு காரணமாக அமைந்து வருமென்று மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதனைச் செய்ய முடியாது இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது சட்ட விரோதமானது என்பதை அவர்கள் (மீனவர்கள்) புரிந்து கொள்வது அவசியம் என்று பீலிக்ஸ் பெரேரா நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்திய கடற்பரப்பில் பிரவேசிக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வழக்குகள் தொடர்பாக தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர்கள் கைது செய்யப்படும் போது நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. அத்துடன் இதனால் எமக்கு அதிகளவு பணம் செலவாகிறது என்றும் அவர் கூறினார்.

இலங்கையினதும் இந்தியாவினதும் கடற்பரப்புகளில் இருநாட்டு மீனவர்களும் அத்துமீறிப் பிரவேசிக்கும் பிரச்சினை தொடர்பாக இலங்கை, இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். விடுதலைப் புலிகளுக்கு இந்திய மீனவர்கள் உதவுவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கைக் கடற் பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை தடுத்துவைத்து துன்புறுத்தியதாக குறிப்பிட்ட சில வெளிநாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளை இலங்கை அரசாங்கம் உறுதியாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகையில், 2 ஜூலை 2008 இல் 11.30 மணியளவில் சுமார் 300 இந்திய இழுவைப்படகுகள் இலங்கையின் கடற்பரப்பிற்குள் பிரவேசித்ததை தலைமன்னாரிலும் நெடுந்தீவிலுமுள்ள இலங்கைக் கடற்படையினரின் ராடர்கள் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. அப்படகுகள் விடத்தல் தீவு பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தன. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அப்படகுகளைப் பயன்படுத்த புலிகள் முயற்சி செய்வதாக கிடைத்த நம்பகரமான தகவலின் அடிப்படையில் இலங்கைக் கடற்படையினர் விரைந்து சென்று அப்படகுகளை சோதனையிட்ட பின் 289 படகுகளை இந்தியா கடற் பரப்புக்குள் திரும்பிச் செல்ல அனுமதித்தனர். கடற்படையினரால் மீனவர்கள் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஊடகச்செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2008/7/6/m...s_page53941.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.