Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மொழியும் இன்றய தமிழர் பண்பாடுகளும் - சாண்டில்யன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொழியும் இன்றய தமிழர் பண்பாடுகளும் - சாண்டில்யன்

அன்றய காலத்தினில் அதாவது மனித வாழ்க்கை ஆரம்பமாகிய காலத்தினில் ஒரு தலைவன் உருவாகி ஒரு சமுதாயத்தை உருவாக்கி அதற்கு தானே அரசனென்று பிரகடனப்படுத்தி இனங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. நாளடைவில் மொழிகள் மேம்படுத்தப்பட்டு தம் மொழிதான் சிறந்ததென்று இனத்தலைவர்கள் தம்பட்டம் அடித்தார்கள், அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக போராடியும் இருக்கின்றார்கள்.

மொழியென்பது ஒருவருக்கொருவர் உரையாடுவதற்கு தொடர்பு கொள்ளும் தொட்டு அறியக்கூடிய சின்னங்கள். ஆதி காலத்தினில் ஒரு சில இனங்கள் உரையாடுவதற்கு படங்களை வரைந்தார்கள். மனிதர்கள் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகள் அவசியம். அத்தோடு முன்னேற்றத்திற்கு விஞ்ஞானம் அவசியம். இதன் அடிப்படையில் ஐரோப்பிய மொழிகள் சிறந்ததென்று கூறலாம். ஆங்கிலம் சிறந்த மொழி, ஏனெனில், இந்த மொழி பல பல நாடுகளில் பேசப்படுகின்றது. விஞ்ஞான ரீதியில் முன்நிலையில் நிற்கின்றது. ரசாயனத்தினில் ஆராய்ச்சி செய்வதற்கு ஆரய்ச்சியாளர்கள் பிரான்சிய (French) மொழி கற்பார்கள்.

தமிழ் மொழியோ, ஹிந்தி மொழியோ, சிங்கள மொழியோ விஞ்ஞானத்தினில் முன்நிலையில் இல்லை, முன்னேற்றமும் காணவில்லை. ஜப்பானிய, சீன, மொழி விஞ்ஞானத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. இக்காரணத்தினால் தேசியத்தலைவர் தமிழை விஞ்ஞான மொழியாக்க வேண்டுமென்று உறுதி பூண்டிருக்கின்றார். தமிழ் மொழியினில் இலக்கியங்களும், காவியங்களும் உள்ளன. காவியங்களும், இலக்கியங்களும் மனிதனுக்கு சோறு போடுமா? விஞ்ஞான போதனையில் விஞ்ஞானச் சொற்களுக்கு அர்த்தங்களை இரவல் வாங்கி தமிழ் சொற்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை விட்டு, மனிதன் தோன்றாக் காலத்தினில் தமிழ் மொழி தோன்றியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கூற்று.

தமிழனுடைய பலவீனம் என்ன? இலங்கையில் உள்ள இனக்கலவரத்தால் படித்தவர்கள், படியாதவர்கள், தாதா குணம் படைத்தவர்கள், குற்ற எண்ணம் படைத்தவர்கள், இவர்கள் எல்லோரும் புலம் பெயர்ந்து விட்டார்கள். ஒரு சிலர் புலம் பெயர்ந்த நாட்டிலும் குற்றம் புரிகின்றார்கள். பணத்தைக் கொள்ளை அடிக்கின்றார்கள்.

ஆனால் அனேகமானவருடைய குணாதிசயங்கள் என்ன? தமிழ் மக்களில், ஆங்கில மொழியில் உரையாட முடியாதவர்கள் ஆங்கிலத்தை வெறுக்கின்றார்கள். ஆங்கிலம் படிப்பதற்கு முயற்சி செய்வதில்லை. இலங்கைத் தமிழர் தமிழ் மொழிதான் சிறந்ததென்கின்றார்கள். ஆனால், இதில் கேலியோ விகடமோ என்னவென்றால், ஒரு சிலருக்கு தமிழ் மொழியிலும் சிறப்பாக உரையாட முடியாததுதான். தமிழகத்தினில் விகடம்: “வந்துக்கினியா, குந்துக்கினியா, போயிக்கினியா“. ‘ள’ னாவிற்கு ‘ல’ னாவைப்போடுவார்கள். ‘ழ’ னாவிற்கு ‘ள’ னாவைப்போடுவார்கள். தொலைக்காட்சிகளிலும் தமிழைக் கொலை செய்கின்றார்கள். இலங்கைத் தமிழர்களின் தமிழ் மொழி உச்சரிப்பு (மக்கள் விகித தரத்தினில்) - தமிழகத்தோடு ஒப்பிடும் பொழுது, மிகவும் சிறப்பெனலாம். உதாரணம்: ‘தீபம்’ தொலைக்காட்சியில் அறிவிப்பாளர்கள் மிகவும் சிறப்பாக தமிழ் மொழியில் பேசுகின்றார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆனால், வரலாற்று அரசியல்வாதிகளை எடை போட்டால், தமிழ் அரசுக்கட்சியென்று போராடிய ஒரு சில தலைவர்களின் பிள்ளைகள் பின் வழியால் சிங்கள மொழி கற்றார்கள். வாழ்க்கையில் முன்னேறினார்கள். ஆனால், சராசரி தமிழன் முன்னேற்றம் அடையமுடியவில்லை. சிந்தியுங்கள்!. படிப்பது தேவாரம் ! இடிப்பது சிவன் கோயில் !

புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தமிழ் மொழி அவசியம். ஆனால், இரு தோணியில் கால் வைத்து வாழுவது இயலாது. தமிழ் வாழவேண்டியது, வளரவேண்டியது, தமிழகத்தினிலும், யாழினிலும். நாம் எப்படி வாழவேண்டும்? புலம் பெயர்ந்து வந்த நாம் இந்த நாட்டு மொழி கற்று சிறப்பாக வாழவேண்டும். எமது ஆதிக்கத்தை இங்கு வேரூண்டுவதற்கு முயற்சிக்கலாகாது. முயற்சித்தால், தமிழர்கள் வளர்ச்சி தடைப்படலாம். (could be a constraint).

ஒற்றுமை:

இப்பொழுது தமிழரின் ஒற்றுமையை ஆராய்ந்தால், புலம் பெயர்ந்த தமிழர் வாழ்க்கை ஒரு கேள்விக் குறியாகிவிட்டது. ஒற்றுமை! ஒற்றுமை! என்று புலம்புகின்றோம். ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது என்ற கேள்வியுமல்லவா எழுகின்றது. ஆரோக்கியமான சமுதாயம் என்கிறோம். இதற்கு யாராவது விளக்கம் தரமுடியுமா? தமிழினத்தினில் ஒற்றுமையின்மை என்பது கடல் ஆழமா? இல்லையெனில் அதிலும் மேலானதா?

ஒற்றுமை என்பது குடும்பம் வசிக்கும் மனையிலிருந்து ஆரம்பமாகவேண்டும்/வெளிப்படவேண்டும். அதாவது குடும்பத்தினில் ஒற்றுமை நிலவ வேண்டும். தங்களுடைய தேவைக்கு பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து, தேவை முடிந்ததும் வயதான காலத்தினில் யாழுக்கு செல்லுங்கள் என்பது என்ன மட்ட தளத்தினில் ஒற்றுமையை பிரதிபலிக்கின்றது? பெற்றாரோடு காட்டும் சுய நலத்தையல்லவா பிரதிபலிக்கின்றது. பெற்றாருக்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தைத் தங்களுடைய கணக்கில் போடுவது மிகவும் பிழையான செயல்பாடு. அதிலும் பணத்தைப் பெற்றாருக்குக் கொடுக்காதது குற்றமாகும். பார்த்தீர்களா குடும்பத்திலேயே ஒற்றுமையின்மை.

அக்காவைவிட, தங்கை பெரிய வீடு வாங்குவதற்கு, அக்கா பணம் கொடுக்காவிடில், தங்கைக்கு அக்காவிடம் கோபம், பொறாமை, எரிச்சல், இப்படி எத்தனையோ. ஆனால், அக்காவிற்கு உதவி தேவைப்படும்பொழுது, அக்காவின் தந்தை என்ன கூறுவார்?... விரலுக்கேற்ற வீக்கம் வேண்டுமென்பார்.

அக்காவின் உதவியோடு, அதாவது புலம் பெயர பொறுப்பேற்று அக்கா, தன்னுடைய, தங்கை, தம்பிகள், தாய் தகப்பன், எல்லோரையும் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு வருவார். ஆனால், இவர்கள் வந்து, தங்களுடைய தேவைகள் முடிந்ததும், அக்காவை, திரும்பியும் பார்க்கமாட்டார்கள். இந்த அக்கா என்ற பிள்ளை, இருக்கின்றாரா இல்லையா என்றே, தந்தையோ தாயோ, கவலைப்படமாட்டார்கள். இதில் ஒற்றுமை எப்படி உருவாகும். பண வசூலிப்புத்தான் முக்கியத்துவம் பெறுகின்றது.

இனி பிள்ளைகளின் அவா, பேராசையைப் பார்த்தால், இன்றய தமிழ் சமுதாயத்திற்கு காதல் என்பது அடுத்த தள பட்டதாரி தகுதியாகி விட்டது. இன்றய பிள்ளைகள் பெற்ற தாய்க்கு அன்போ பாசமோ கொடுப்பதில்லை. சிறு பறவைகள் செட்டை முளைத்ததும் தாயை விட்டுப் பறப்பதுபோல, படித்து வேலை கிடைத்ததும் பெற்றாரை விட்டு பறந்து சென்றுவிடுவார்கள் காதலைத் தேடியோ அல்லது காதலியோடோ.

சமுதாய தளத்தைப் பார்த்தால், தமிழ்ச் சமுதாயத்தில் ஒருவரை ஒருவர் அழிப்பதற்குத்தான் முயற்சிக்கின்றார்கள். வானொலிகளில் ஒருவரை மீண்டும் மீண்டும் தாக்கி கதைப்பது, கீழ்த்தரமான ஒரு செய்கையாகும். நல்ல தமிழ் பேசுவது மாத்திரம் சிறப்பல்ல! பண்போடு கதைப்பதுதான் மிகவும் சிறப்பு. இல்லையெனில் இவர்களைப் பெரும் கூச்சல் போடும் முரடர்கள் என்று கூடக் கூறலாம். தமிழ் மக்கள் ஒருவரை ஒருவர் மதிப்போடும் மரியாதையோடும் பழகக் கற்றுக் கொள்ளவேண்டும்.

இப்படி எம்முடைய சமுதாயம் வாழும் பொழுது, இன்றய தமிழர்களின் நடை முறை பண்பாடுகள் எற்றுக்கொள்ளக்கூடிய பண்பாடுகளா? தமிழர்களே சிந்தியுங்கள் !

நன்றி வணக்கம் !

சாண்டில்யன் 10-09-2008

http://kanabala-mind.blogspot.com/

Edited by Sandilyan

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடரப் போகும் கட்டுரையா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தொடரப் போகும் கட்டுரையா? :lol:

ராஜா அவர்களுக்கு வணக்கம்.

மன்னிக்கவேண்டும். இல்லை, இது தொடர் கட்டுரை இல்லை.

குறிப்பாக, நாம் தமிழர், எத்தனையோ கொள்கைகளைக் கதைப்போம். அவைகளை செயலில் காட்டமாட்டோம். ஆனால் சுயநலத்தோடு வாழும் தமிழர் இன்றய காலத்தினில், ஒற்றுமை, ஒற்றுமை என்று கூக்குரல் இடுகின்றோம். ஆனால் உதாரணத்திற்கு பார்த்தால், எமது நாட்டில் எத்தனை விடுதலை இயக்கங்கள்.

எல்லாத் தமிழரும் அப்படி இல்லை. தியாகிகள் தங்களை விடுதலைக்காக அர்ப்பணித்திருக்கின்றார்கள. அதிக புலம் பெயர்ந்தோர் புதினம் அறியத்தான் ஆவல். விடுப்பு, புதினம் இவைதான் முக்கியத்துவம் பெறுகின்றது புலம் பெயர்ந்த எமது வாழ்க்கையில்.

தமிழ் மக்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும். சுயநலத்தை தவிர்த்து நல்ல பண்போடு வாழ வெண்டும்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Edited by Sandilyan

சாண்டில்யனின் கட்டுரை வாசித்தேன்.... மிக நன்றாக எமது தமிழ் மக்களின் தற்போதைய வேகமான போக்குகளை அலசியுள்ளீர்கள்....

தொடர்ந்தால் நல்லது.... நாம் எங்கு போகிறோம் எனத்தெரியாது தறிகெட்டு போகும் இனத்தை நின்று சிந்திக்கவைத்து செயல்படவைக்க வேண்டியது ஒவ்வொருவறினதும் கடமை...

அன்பும்,பண்பும் சேர்ந்தால் ஒரு நாகரிக இனமாக தமிழ் இனம் குறிப்பாக ஈழத்து தமிழ் மக்கள் உலகிற்கு வெளிக்காட்டப்படுவார்கள்..... இல்லையெனில் ஒரு வெறுப்புக்குறிய இனமாக வித்தியாசமான விலங்குகள் போன்று எமது இனம் பார்க்கப்படும் குறிப்பாக எமது விடுதலைப்போரட்டம் நடக்கும் இக்காலகட்டத்தில் தனிமனித ஒழுக்கத்தில் தொடங்கி

குடும்பம்,கிராமம், நகரம் நாடு என விரிகிறது......

தற்போதைய இளம் சந்ததியில் நாகரிகம் என்றால் என்ன என்பதன் புகட்டல் மூத்தோரின் வழிகாட்டல்

முன் உதாரணம் மூலம் தொடரும்....இது எமது இனவிடுதலைக்கும் வலு சேர்க்கும்....

அன்பும் பண்பும் காக்கப்படல் வேண்டும் தனிமனிதரில் இருந்து..... இது களத்தில் எதிரியுடன் போர் புரியும்

போது அல்ல.. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாண்டில்யனின் கட்டுரை வாசித்தேன்.... மிக நன்றாக எமது தமிழ் மக்களின் தற்போதைய வேகமான போக்குகளை அலசியுள்ளீர்கள்....

தொடர்ந்தால் நல்லது.... நாம் எங்கு போகிறோம் எனத்தெரியாது தறிகெட்டு போகும் இனத்தை நின்று சிந்திக்கவைத்து செயல்படவைக்க வேண்டியது ஒவ்வொருவறினதும் கடமை...

அன்பும்,பண்பும் சேர்ந்தால் ஒரு நாகரிக இனமாக தமிழ் இனம் குறிப்பாக ஈழத்து தமிழ் மக்கள் உலகிற்கு வெளிக்காட்டப்படுவார்கள்..... இல்லையெனில் ஒரு வெறுப்புக்குறிய இனமாக வித்தியாசமான விலங்குகள் போன்று எமது இனம் பார்க்கப்படும் குறிப்பாக எமது விடுதலைப்போரட்டம் நடக்கும் இக்காலகட்டத்தில் தனிமனித ஒழுக்கத்தில் தொடங்கி

குடும்பம்,கிராமம், நகரம் நாடு என விரிகிறது......

தற்போதைய இளம் சந்ததியில் நாகரிகம் என்றால் என்ன என்பதன் புகட்டல் மூத்தோரின் வழிகாட்டல்

முன் உதாரணம் மூலம் தொடரும்....இது எமது இனவிடுதலைக்கும் வலு சேர்க்கும்....

அன்பும் பண்பும் காக்கப்படல் வேண்டும் தனிமனிதரில் இருந்து..... இது களத்தில் எதிரியுடன் போர் புரியும்

போது அல்ல.. :lol:

வணக்கம் குகா

தங்களுடைய பண்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி. ஆமாம் தாங்கள் கூறிய சில வார்த்தைகளில் உண்மை பிரதிபலிக்கின்றது. புலம் பெயர்ந்த தமிழரும் அவர்களுடைய சிறார்களும் சிந்தித்துச் செயல்படுவார்களென்று ஆண்டவனை வேண்டுவோம்.

நன்றி வணக்கம்

சாண்டில்யன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.