Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய இராணுவத்தினரை திரும்பப் பெறவேண்டும் - திருமாவளவன்

Featured Replies

சிறிலங்க ராணுவத்திற்கு பயிற்சி அளிக்க இந்திய ராணுவ வீரர்களை மறைமுகமாக அனு‌ப்‌பி‌யிரு‌ப்பது இ‌ந்‌திய அர‌சி‌ன் த‌‌மிழன‌ ‌விரோத போ‌க்காகு‌ம் எ‌ன்று தெரிவித்துள்ள தொல். திருமாவளவன், அவர்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்!

இந்த அரசின் இப்படிப்பட்ட மறைமுக நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சிறிலங்காவின் வவுனியாவில் உள்ள படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் விமானம் மற்றும் தரை வழித் தாக்குதல்களை நடத்தி இரண்டு ராடார்களை அழித்தனர். இதில், ராடார்களை இயக்கிய இந்திய வீரர்கள் இருவ‌ர் காயமடைந்துள்ளனர்.

இதனைக் குறிப்பிட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், சிங்கள படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் பலர் பலியாகியிருப்பதுடன் ஏராளமான சிங்கள படையினர் படுகாயங்களும் அடைந்துள்ளனர். அவ்வாறு படுகாயமடைந்தவர்களில் 2 இந்திய பொறியாளர்களும் அடங்குவர் என்பது தெரிய வருகிறது. இவர்கள் சிங்கள ராணுவ தளத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்திய ரேடார்களை இயக்குகிற பணிகளையும் அது தொடர்பாக சிங்கள படையினருக்கு பயிற்சி அளிக்கும் பணிகளையும் செய்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.

இந்தியஅரசின் இத்தகைய தமிழீன விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் போக்கை உடனடியாக இந்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழனத்திற்கு எதிராக ஈழத்தில் மறைமுகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய படையினர் அனைவரையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16-ஆம் தேதி அன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்

tamil.webdunia.com/newsworld/news/tnnews/0809/10/1080910030_1.htm - 21.27kb

  • தொடங்கியவர்

தமிழ் இனத்துக்கு எதிராக இலங்கை செல்லும் இந்திய ராணுவ குழுவை உடனடியாக ம‌த்‌திய அரசு திரும்ப பெற வேண்டும்'' என்று ‌விடுதலை ச‌ிறு‌த்தைக‌ள் அமை‌ப்ப‌ி‌ன் தலைவ‌ர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தொ‌ல்.‌திருமாவளவ‌ன் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், அரசியல் நேர்மையில்லாத பேச்சு வார்த்தையில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த சிங்கள அரசின் வான்படையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு வலிய வலிய வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. சிங்கள இன வெறிக் கும்பலுக்கு பாகிஸ்தான் பல வகையிலும் உதவிகள் செய்வது போல, இந்திய அரசும் போட்டி போட்டிக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஓரணியில் நின்று சிங்கள அரசுக்கு முட்டுக் கொடுப்பது மிகப் பெரும் கேலிக் கூத்தாக உள்ளது.

தமிழ்நாட்டு மீனவத் தமிழர்களை அவ்வப் போது சுட்டுக் கொன்று இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கையில் சிங்கள அரசு ஈடுபட்டு வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாய் இருப்பதிலேயே இந்திய அரசு முனைப்பாய் இருக்கிறது. இந்திய எல்லைக்குள் வாழும் சுமார் 6 கோடி தமிழர்களின் உணர்வுகளை துளியும் பொருட்படுத்தாமல் இழிவுபடுத்தும் வகையில் இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்குவதில் சிங்கள இனவெறியர்களை விட தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தான் இன்று (17-12-07) இந்திய தரை மற்றும் வான்வழி படையின் வல்லுநர் குழு ஒன்று கொழும்பு செல்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் எதிரான இந்திய அரசின் இத்தகைய போக்கு வேதனைக்குரியதும் கண்டிக்கத்தாகும்.

இது தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமை‌ச்ச‌‌ர்க‌ள், குடியரசு‌த் தலைவ‌ர் பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தியையும் நேரிலே சந்தித்து தமிழினத்திற்கு எதிரான செயல் திட்டத்தோடு புறப்பட்டிருக்கும் இந்திய ராணுவ வல்லுநர் குழுவை திரும்பப் பெறுமாறு வலியுறுத்த வேண்டும். மேலும், சிங்கள இனவெறியர்களின் வான்வழித் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என சிங்கள அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் இந்திய அரசை வற்புறுத்துகிறோம். சிங்கள இன வெறியர்கள் வான்வழித் தாக்குதலை நிறுத்தினால், புலிகளும் வான்வழித் தாக்குதலை நிறுத்தும் சூழல் உருவாகும்.

ஆகவே சிங்கள அரசின் வான்படையை மேம்படுத்த வேண்டுமென்கிற முயற்சியை கைவிட்டு, வான் வழித் தாக்குதலை கைவிட வலி யுறுத்துவதுடன் சிங்கள அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சிங்கள வான்படைத்தாக்குதலில் காயம் அடைந்திருப்பதாகவும் நூலிழையில் உயிர் தப்பியிருப்பதாகவும் சிங்கள அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் ஆதாரம் இல்லாத செய்திகளை பரப்பி தமிழர்களிடையே பெரும் பதற்றத்தையும், குழப்பத்தையும் உருவாக்க முயற்சித்து வருகின்றன. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தி விட முடியும் என்பது சிங்கள வெறியர்கள் கனவு கண்டு வருகின்றனர்.

சிங்கள அரசின் இத்தகையை கனவை நனவாக்குவதற்கு இந்திய அரசு துணை நிற்க போகிறதா? அல்லது இந்திய நாட்டைச் சார்ந்த 6 கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க போகிறதா? என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எனினும் எமது ஜனநாயக உணர்வுகளை இந்திய அரசு மதிக்கும் என்கிற நம்பிக்கையோடு கொழும்பு சென்றுள்ள இந்திய ராணுவ வல்லுநர் குழுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண்டும் வலியுறுத்துகிறோம் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து வந்துள்ள இராணுவத்தினர் தமிழின அழிப்புத் திட்டத்தின் கீழ் பிரத்தியேகமாக விசேட பயிற்சி கொடுக்கப்பட்டவோர் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களென்று தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரிய வருகின்றது.

இந்தியாவிலும் இலங்கையிலும் உருவாகிவரும் தமிழ்த் தேசியவுணர்வை முற்றாக அழித்தொழித்து இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இடையில் காலங்காலமாக இருந்துவரும் தொப்பூழ் கொடி உறவைச் சிதைப்பதோடு முடிந்தவரை இருநாடுகளிலுமுள்ள தமிழர்களை இனக்கொலை செய்து ஓர் இரும்புப் பிடியின் கீழ் தமிழர்களை நசுக்கி வைக்க வேண்டுமென்னும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் இவர்கள் இருநாடுகளினதும் புலனாய்வு அமைப்பினரால் வழிநடத்தப் படுகிறார்களென்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய மேல்மட்டத்தினரின் இந்த ரகசிய நடவடிக்கைக்குத் தமிழர்களையும் விசயம் புரியாது துணை போக வைக்கும் சாதுரியமான திட்டங்கள்; ஏற்கனவே வகுக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப் படுத்தப் படுவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.