Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழித்தே தீருவோம்; காலஎல்லை கூற விரும்பவில்லை! ஜனாதிபதி மஹிந்த சொல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தே தீருவோம். அவர்களுடன் இனி சமாதான உடன்படிக்கை ஒன்றைச் செய்வதற்கான எந்தச் சாத்தியங்களும் இல்லை. புலிகளை எப்போது அழித்து ஒழிப்போம் என்று காலஎல்லை எதனையும் இப்போது கூற முடியாது. ஆனால், அவர்களை முற்றாக அழித்தொழிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை இவ்வாறு சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

திங்கட்கிழமை அலரிமாளிகையில் வெளிநாட்டு செய்தியாளர்களுடனான இரவு விருந்துபசார நிகழ்வின்போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

நாட்டின் வடபகுதியில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையில் காணப்படும் முன்னேற்றம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளும் படைத்தளபதிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மனிதாபிமானப்பணியாளர்களை வெளியேறுமாறு தெரிவித்தமை, இராணுவம் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்போகின்றது என்பதற்கான அறிகுறியல்ல.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அரசின் நிவாரண உதவி அதிகாரிகளும் மருத்துவர்களும் செயற்படுகின்றனர். கட்டுப்பாடற்ற பகுதியிலுள்ள மக்கள் அந்தப் பகுதிக்கு வரலாம். விடுதலைப் புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கி அங்கிருந்து கெரில்லா யுத்தத்தில் ஈடுபட முடியாது. புலிகளை முற்றாக ஒழிக்க முடியும். அவர்கள் தற்போது காடுகளிலேயே உள்ளனர். எமது படைகளும் காடுகளிலேயே உள்ளன.

விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தொழிப்போம். எனினும் நான் அதற்கான காலஎல்லையை நிர்ணயிக்க விரும்பவில்லை. புலிகளை அழிப்பது சாத்தியம். எனினும் நிச்சயமாக அதற்கு சில காலமெடுக்கும்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் சில உறுப்பினர்கள் எஞ்சக்கூடும். விடுதலைப் புலிகளுடன் இன்னுமொரு யுத்த நிறுத்தத்திற்கான சாத்தியக்கூறினை நான் நிராகரிக்கிறேன்.

விடுதலைப் புலிகளின் தலைவர் தனது ஆயுதங்களுடன் அரசிடம் சரணடைந்த பின்னரே பேச்சுகள் சாத்தியமாகலாம்.

விடுதலைப் புலிகள் சரணடைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், அவர்களுடன் மற்றுமொரு யுத்தநிறுத்த உடன்படிக்கையை செய்வது குறித்த பேச்சுக்கு இடமில்லை. புலிகளுடன் எதிர்காலத்தில் பேச்சுகளை மேற்கொள்ளலாம் என நாங்கள் கருதவில்லை. அதற்கான தேவையில்லை.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்பதை விடுத்து, இலங்கைக்கு திரும்பி ஜனநாயக நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.

பிரபாகரனும் பொட்டு அம்மானும் தமது ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும். அவர்கள் ஆயுதங்களுடன் மீண்டும் தலைதூக்க அனுமதியளிக்க மாட்டேன்.

பிரபாகரனை உயிருடன் பிடித்தால் நான் அவரை இந்தியாவிற்கு அனுப்புவேன். எனினும், தற்போது அவர் எங்கு இருக்கின்றார் என்பது தெரியாது. என்றார் ஜனாதிபதி.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.