Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உக்கிரமடைந்து வரும் மோதல்களும் மக்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகளும்-அருஷ்

Featured Replies

இந்த மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் அக்கராயன் தொடக்கம் நாச்சிக் குடா வரையிலுமான 25 கி.மீ முன்னரங்கில் நடைபெற்ற கடுமையான மோதல்கள் படையினரின் முன்னகர்வுகளின் உத்திகளில் பின்னடைவை ஏற்படுத்தியதுடன், படையினரின் நகர்வுகள் மந்த நிலைக்கும் சென்றிருந்தன.

இந்த படை நடவடிக்கையில் படையினர் கடும் இழப்புக்களை சந்தித்த நிலையில், வன்னி பகுதி மீது அரசாங்கம் தொடர்ச்சியான வான் தாக்குதல்களை நடத்திவந்தது.

இந்த நிலையில் வவுனியா படைத்தலைமையகத்தில் அமைந்திருந்த வான்கண்காணிப்பு நிலை மீது வான்புலிகள், கரும்புலிகள், பீரங்கி படையணிகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல் அரசாங்கத்தை ஆட்டங்காண வைத்ததுடன், அரசாங்கத்தினன் வான்பாதுகாப்பு உத்திகள் மற்றும் கட்டளை மையங்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கத்தை சிந்திக்கவைத்தது.

வவுனியா ஜோசெப் படைத்தளம் மீது வான்புலிகள் வீசிய குண்டுகளில் ஒன்று சிறப்பு படை கட்டளை அதிகாரி பிரிகேடியர் நிர்மல் தர்மரட்னாவின் அலுவலகத்திற்கு அண்மையில் வீழந்த போதும் குண்டு வெடிக்காததால் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டதாக படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுனியா வான்படை தளத்தில் நிறுவப்பட்டிருந்த இந்திராஐஐ ராடர் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ள அதே சமயம் இந்திராஐஐ ராடர் முற்றாக சேதமடைந்ததுடன், அதன் முக்கியத்துவம் கருதி கட்டுநாயக்கா வான்படை தளத்தில் இருந்த மற்றுமொரு இந்திரா ஐஐ ராடரை படையினர் அவசரம் அவசரமாக வவுனியா வான்படை தளத்திற்கு நகர்த் தியிருந்ததாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

கடந்த 9 ஆம் திகதி வவுனி யாவின் படை நட வடிக்கை கட்டளை மையம் மீது விடு தலைப் புலிகள் கள் மேற்கொண்ட கூட்டுப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட சேதங்களை இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த வியாழக்கிழமை (18) நேரில் சென்று பார்வையிட்டார். வவுனியா படைத்தளத்திற்கு உலங்குவானுõர்தி மூலம் சென்றடைந்த பொன்சேகாவை வவுனியாவில் நிலைகொண்டுள்ள 56 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்கோத்த வரவேற்றார்.

வான்புலிகளின் தாக்குதலில் சேதமடைந்த ராடர் மையத்தையும், அதன் கட்டிட தொகுதியையும் இராணுவத்தளபதி பார்வையிட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது. பின்னர் வவுனியா பிராந்திய கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மற்றும் படையணிகளின் கட்டளை அதிகாரிகள், பிரிகேட் கட்டளை அதிகாரிகளை சந்தித்த பொன்சேகா படை நடவடிக்கை தொடர்பான திட்டங்களை விளக்கிய போது இராணுவம் வன்னே?க்குளம் மீதான படை நகர்வுகளை காலை 11.30 மணியளவில் ஆரம்பித்திருந்தது.

இது இந்த வாரத்தில் ஒரே அச்சில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது நடவடிக்கை. 58 ஆவது படையணியின் சில பற்றலியன் படையின ரும், 57 ஆவது படையணியின் 1 ஆவது பிரிகேட்டை சேர்ந்த சில பற்றலியன்களும் மேற்கொண்ட இந்த நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

இந்த மோதல்களில் 25 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 40 இற்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், படையினரின் இரு உடலங்களையும் இரு ஆர்.பி.ஜி. உந்துகணை செலுத்திகள் உட்பட 9 இற்கு மேற்பட்ட ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் வன்னியில் உள்ள பல களமுனைகளில் நடைபெற்ற மோதல்களில் 18 படையினர் கொல்லப்பட்டதாகவும், 36 பேர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

துணுக்காய், கல்விளான், நாச்சிக்குடாவுக்கு தென்புறமான பகுதிகளில் விரைவான நகர்வை மேற்கொண்ட இராணுவம் அதற்கு அப்பால் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அதிக இழப்புக்களை சந்திப்பது தென்னிலங்கையில் சலசலப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் விடுதலைப்புலிகள் சி.எஸ். ரக வாயுக்களை பயன்படுத்தி வருவதாக அரசாங்கம் கூறுகி றது.

இராணுவத்தின் 57 ஆவது படையணியின் இரண்டாவது பிரிகேட்டை சேர்ந்த இராணுவத்தினரின் 4 பற்றாலியன் இராணுவத்தினர் பிரிகேட் கட்டளை அதிகாரி லெப். கேணல் செனராத் பண்டார தலைமையில் அக்கராயன் பகுதிக்கு தென்புறமாகவும், கிழக்குபகுதி ஊடாகவும் மேற்கொண்ட முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கடுமையான எதிர்த்தாக்குதலில் இராணுவத்தினர் கடுமையான இழப்புக்களை சந்தித்துள்ளனர்.

57 ஆவது சிறப்பு தாக்குதல் படையணியின் பற்றலியன் துருப்புக்களுடன் சிறப்பு படையணிகளும் இணைந்து அதிகாலை 5.00 மணியளவில் ஆரம்பித்த முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப்புலிகளின் இலகுகாலாட்படை பி?வினர் இம்ரான் பாண்டியன் சிறப்பு அணிகளின் உதவியுடன் மதியம் 1.30 மணி வரையில் மோதல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மோதல்களில் 122 மி.மீ ஆட்டிலெறிகள் மற்றும் 81 மி.மீ மோட்டார்களை அதிகம் பயன்படுத்தியதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதன் போது 8 சிறப்பு படை கொமோண்டோக்கள் உட்பட 10 படையினர் கொல்லப்பட்டதாகவும், 20 இற்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்த போதும், படைத்தரப்பு சந்தித்த இழப்புக்கள் அதிகம். 22 படையினர் கொல்லப்பட்டதாகவும் 53 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் 4 சடலங்களும், 6 ஆர்.பி.ஜிக்கள், 9 இலகு இயந்திர துப்பாக்கிகள் உட்பட 37 இற்கும் அதிகமான ஆயுதங்களும் இந்த மோதலில் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானுõர்திகள், பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதல்களுடன் மிகவும் செறிவான சூட்டாதரவை படையினர் பயன்படுத்திய போதும் அவர்கள் பலமான எதிர்த்தாக்குதல்களை சந்தித்துள்ளது வன்னி களமுனையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களையே காட்டுகின்றது.

கடந்த வாரம் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத்தளபதி லெப்.

ஜெனரல் சரத் பொன்சேகா 57 ஆவது படையணியின் கட்டனை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், 58 ஆவது படையணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் சவீந்திர சில்வா, சிறப்பு படை கட்டளை அதிகாரி பிரிகேடியர் நிர்மல் தர்மரட்னா ஆகியோருடன் மேற்கொண்ட திட்டங்களுக்கு அமைவாகவே அக்கராயன் பகுதியை நோக்கிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நாச்சிக்குடா வன்னேரிக்குளம் அக்கராயன்குளம் அச்சில் கடந்த 1 ஆம் மற்றும் 2 ஆம் தகதிகளில் ஆரம்பித்த மோதல்கள் 18 நாட்களை கடந்த நிலையில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த 18 நாட்களில் விடுதலைப்புலிகளின் பின்தள பகுதியான வன்னியின் பல பகுதிகள் மீது இலங்கை வான்படை விமானங்கள் பெருமளவான குண்டு வீச்சுக்களையும் நடத்தியிருந்தன.

இந்த குண்டு வீச்சுக்களால் பொது மக்கள் பலர் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளதுடன், பெருமளவான சொத்துக்களும் அழிந்து போயுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்துள்ளன. வன்னி பகுதியில் இருந்து ஐ.நா அமைப்பை சார்ந்த தொண்டர் நிறுவனங்கள் உட்பட எல்லா தொண்டு நிறுவனங்களையும் வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ள நிலையில், அங்கு தொடர்ச்சியாக வான் மற்றும் எறிகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது அங்கு வாழும் மக்களுக்கு பேரவலங்களை ஏற்படுத்தி வருகின்றது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான அமைப்புக்களும், பல நாடுகளின் பிரதிநிதிகளும் கவலை தெரிவித்துள்ள போதும், அதனால் பலன்கிட்டாமை தமிழ் மக்களை பெரும் ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது. வவுனியா படை தலைமையகம் மீது வான்புலிகள் மேற்கொண்ட தாக்குதல் இந்தியாவின் இரட்டை வேடத்தை உலகறிய செய்தது போல இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை அனைத்துலக ச?கத்தின் கபடத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

வன்னியில் வாழும் மக்களின் மீது அரசாங்கம் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தவாறு தனது படை நடவடிக்கைகளை முனைப்பாக்கி வருகையில் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவது அரச தரப்புக்கு சாதகமானதல்ல.

இது படைத்தரப்பிற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. மன்னார் பின்தளங்களில் இருந்து புறப்பட்ட படையினரை அவர்களின் வாசல்களில் இடைமறித்து தாக்குவதை தவிர்த்துக் கொண்ட விடுதலைப்புலிகள் 40 தொடக்கம் 50 கி.மீ.

துõரத்திற்கு நகர்ந்த பின்னர் தமது பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருவது படைத்துறை ரீதியாக இராணுவத்திற்கு பலத்த நெருக்கடிகளை தோற்றுவிக்கும்.

40 கி.மீ இற்கு அப்பால் நடைபெறும் மோதல்களில் காயமடையும் மற்றும் கொல்லப்படும் படையினரை பின்தளங்களுக்கு எடுத்து செல்வது, முன்னரங்கில் உள்ள படையினருக்கான விநியோகங்களை சீராக பேணுவது என்பது படையினருக்கு தற்போது மிகவும் சவாலான விடயங்களாக மாறியுள்ளன. மோதல்கள் தீவிரமடையும் போது இது மேலதிக சுமைகளை படையினருக்கு ஏற்படுத்தலாம்.

அக்கராயன் பகுதியில் படைத்தரப்பு எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளுக்கான மூல காரணங்களில் இதுவும் ஒன்று.

அதாவது விடுதலைப்புலிகள் மோற்கொள்ளும் ஒவ்வொரு பதில் தாக்குதல்களின் பின்னரும் தமது படையணிகளை மறுசீரமைப்பதற்கு படைத்தரப்புக்கு முன்னரை ம் விட அதிக காலம் எடுக்கும். இந்த நிலைமைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கும் பருவமழையுடன் மேலும் மோசமாகலாம் என்பதுடன், வரும் வாரங்கள் படைத்தரப்புக்கு பாரிய சவால்களாக போவதையே நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன் வரையிலும் கடந்த 18 நாட்களாக நடைபெற்றுவரும் மோதல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-34-04

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.