Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தியாகத்தின் இமயங்கள்…! 02

Featured Replies

நெருக்கடி மிகுந்த காலமொன்றில், எதிரியின் தலைமை 'நிர்வாக மையம்' நோக்கி அவள் நகர்த்தப்பட்டாள். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கு முன்னதாக ஒரு அனுபவத்தை அவள் பெற வேண்டுமென்பதே இந்தப் பயணத்தின் நோக்கம்.

முன்பின் அறிமுகமில்லாத எதிரியின் தளத்தில் அவள் நிலை பெற இந்தப் பயண அனுபவம், அவளுக்கு கைகொடுக்கக்கூடும். எந்தவேளையும் விழிப்போடு இருக்கும் பகைவரின் கண்களுக்குள் எத்துப்படாது நிற்க நிறைந்த திறமையும் - சாமாத்தியமும் வேண்டும். சிறு சந்தேகம் எழுந்தால் கூட அவளை மட்டுமல்ல - சூழவுள்ளவர்களையும் சேர்த்தே சிறையில் தள்ளிவிடக்கூடிய அல்லது கொன்றுவிடும் ஆபத்து அதிகம்.

ஆகவே, அந்தத்தளத்தின் அறிமுகத்தைத் தன்னுள் எடுத்துக் கொள்வது அவளுக்கு அதிக நன்மை பயக்கக்கூடும். ஒருநாள் அவள் எதிரியை ஏமாற்றும் பல புனைகதைகளோடு இங்கிருந்து தன் பயணத்தைத் தொடக்கினாள்.

**********************************

தந்தை - மகள் என்ற போலி அறிமுகத்தோடு தடை முகாம் தாண்டி உள்ளே நுளைந்து கொண்டாள். அவளின் நடவடிக்கைக் காலம் முழுவதும் அவரே இவளின் தந்தை. அந்த இடை நகரத்தில் பயணத்தடை - கெடுபிடி-காலதாமதம் என இழுத்தடிக்கும் எதிரியின் வழமையான நடவடிக்கைகள் காரணமாக அவளின் அதிக நாட்கள் வீணே கழிந்தன.

பலநாள் அலைச்சல் - எத்தனையோ நாள் மனவுளைச்சலென சிரமப்பட்டவள். ஒரு நாள் அவள் சென்றடைய வேண்டிய எதிரியின் நிர்வாக மையத்தைச் சென்றடைந்தாள். அவள் அங்கு சென்றதும் - இங்கு தெரிவித்த முதல் விடயம், நான் மீளவும் அங்கு வராமல் - இங்கேயே நின்று செயற்படப் போகிறேன்...

மீண்டும் ஒரு பயணத்தால், தேவையற்ற காலதாமதமும் - நெருக்கடிகளும் ஏற்படலாம் சில வேளைகளில் தேவையற்ற கைதுக்கும் உள்ளாகலாம். அவள் தெரிவித்த நடைமுறைப் பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு... அங்கு அவள் தொடர்ந்து நிற்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அவள் அங்கு நிலைபெற்று இயங்கத் தொடங்கினாள்...

************************

ஐயாவுக்குத்தெரியும், அவள் ஏதோவொரு இரகசிய நடவடிக்கைக்காகவே அங்கு வந்திருக்கிறாள் என்பது... அது என்ன...? அதை அவள் எப்படி செய்யப்போகிறாள் என்பது மட்டும் அவருக்குத் தெரியாது. ஐயா வயதானவர்... அவரின் மகள் ஒரு போராளி. அவரின் குடும்பம் இங்கேதான் இருந்தது.

அவள் அங்கு நிலை பெற்ற சிறிது காலத்தில், தன்னுடைய பணியில் ஓய்வின்றி ஈடுபடத் தொடங்கினாள். எதிரியின் முற்றத்தில் நின்று கொண்டு அவனின் பலத்தையும் -பலவீனத்தையும் அவள் ஆராயத் தொடங்கினாள். அதற்காக அவள் தன்னை வருத்தி செயற்பட்ட உழைப்பிருக்கிறதே அது கடினமானது - அந்த நேரங்களில் அவளைப் பார்க்கப் பாவமாக இருக்கும்... ஒவ்வொரு நாளும் - அவள் காலையில் புறப்பட்டுப் போவாள்.

எங்கு போகிறாள் - யாரைச் சந்திக்கிறாள் என்பதெல்லாம் தெரியாது. ஆனால் மதியமோ - மாலையோ வரும் போது அதிகளவில் களைத்துப் போயிருப்பாள்... முகம் வாடியிருக்கும்... வந்தவள் சும்மாயிருக்கமாட்டாள்... குடியிருக்கும் வீட்டின் அத்தனை வேலைகளையும் ஓடியோடிச் செய்வாள்... ஒரு பொறுப்புள்ள மகளைப்போல... ஐயாவோடு அன்பாக உரையாடுவதிலிருந்து... உணவுபரிமாறுவது வரை... சிரத்தையோடு காரியம் செய்வாள்.

ஐயா மகளின் அன்பில் நனைந்து... மெய்யுருகி - மனம் கசிந்து போவார். நாட்கள் ஓடின -அவளின் அலைச்சல் ஓய்வின்றித் தொடர்ந்தது... ஐயா அவளின் தந்தையைப் போல நடிக்க அங்கு சென்றவர் - ஆனால் அவளின் செயல்கள் அவரை மாற்றியது. ஐயா அவளுக்கு உண்மையான தந்தையாகவே... வாழத்தொடங்கினார்.

************************

ஐயாவுக்குத் தன்னுடைய மகளுக்கும் - இவளுக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காண முடியாதிருந்தது. அத்தோடு அவர் அவருடைய மகளைப்பிரிந்து அதிக தூரத்திற்கு வேறு வந்திருந்தார். அவர் தன்னுடைய மகளாக மனதுக்குள் வரித்துக்கொண்ட அவள் ஆபத்தான காரியத்தில் ஈடுபடுவதை எண்ணிச் சஞ்சலப்படத் தொடங்கினார்.

ஐயாவுக்குள் ஏற்பட்ட இந்த உணர்வு மாற்றம் அவளின் மீது ஆழமான பாசப்பிணைப்பாக் வேரூண்டத் தொடங்கியது. ஐயா பாசத்திற்கு அதிக இடம் கொடுத்து கடமையில் குழம்பத் தொடங்கினார். அந்த நேசம் அழகிய மலரின் மேல் படிந்த பனித்துளி போன்ற குளிர்மையான அன்பு. அவளின் மனமோ இலட்சியத்தில் இறுகிக்கிடக்க ஐயாவின் மனமோ பாசத்தால் உடைந்து கொண்டிருந்தது...

இலக்கு நோக்கிய பயணத்தில், ஐயா மேலும் திசைமாறத்தொடங்கினார். விளைவு, ஐயா அவளைக் கடமையைச் செய்ய விடாது நெருக்கடிகளைக் கொடுக்கத் தொடங்கினார்.

*****************

அங்கே அவள் குடியிருந்த வீட்டிலிருந்து முன்னரைப்போல புறப்படுவதற்கு அவர் அனுமதிப் பதில்லை. அவளுக்கும் - தளத்திற்குமான தொடர்பாடல்களை துண்டிக்கத் தொடங்கினார். அவள் கடிதங்களை எழுதி இங்கே அனுப்பச் சொல்லி ஐயாவிடம் கொடுத்தால், அவர் அவற்றைக் குப்பைக்கூடைக்குள்ளேயோ அல்லது எரியும் அடுப்புக்குள்ளேயோ தள்ளினார்.

'போவதற்கு நான் எல்லா ஒழுங்குகளையும் செய்து தாறன் நீ... வெளிநாட்டுக்குப்போ...' என விடாது நச்சரிக்கத் தொடங்கினார். அவளோ ஐயாவின் மனம்கோணாத... நல்ல மகளாக நடந்து கொண்டு... தன்னுடைய இலக்கு நோக்கிய பயணத்தில், இயங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள்.

ஆனால் ஐயாவின் செயல்களால் - அவளுக்கும் தளத்திற்குமான தொடர்புகள் அரிதாகிக் கொண்டே வந்தது. அவள் உள்ளுக்குள்ளேயே ஒரு போராட்டத்தை நடாத்த வேண்டியவளானாள். அங்கே பாதுகாப்பாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் அதேவேளை - தளத்தினுடனான தொடர்புகளைச் சீர்படுத்திக் கொள்ளவும் வேண்டியிருந்தது...விடுபடமுடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.