Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் தமிழரைப் பதிவு செய்தமை ஏற்புடையது என்று நீதிமன்றம் கருத்து கட்டாயப்படுத்தி வெளியேற்றக்கூடாது என உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாணத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இடம்பெயர்ந்து வந்து மேல்மாகாணத்தில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை மற்றும் புள்ளிவிவரங்களைக் கண்டறிவதற்காக அந்தந்தப் பிரதேச பிரஜைகள் குழுக்கள் ஊடாக எடுக்கப்பட்ட நடவடிக்கையே கடந்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்டது எனப் பொலிஸ் தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

எனினும் அப்படி வந்து தங்கியிருப்போர் எவரையும் பலவந்தமாக வெளியேற்ற நட வடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு வெளியிட்டது.

கொழும்பில் ஆள்கள் வகைதொகையின்றிக் கைது செய்யப்படுவதற்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் பிர தம நீதியரசர் சரத் என் சில்வா, நீதியரசர்கள் ஷிராணி திலகவர்த்தனா, கே.ஸ்ரீபவன் ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இவ்வாறு பொலிஸ் தரப்பு விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தலைநகரிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள தமிழர்களைப் பதிவு செய்வது தொடர்பாக மேற்படி வழக்கில் உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்க அதற்குப் புறம்பான மாறான நடவடிக்கையாக, மேல்மாகாணத்துக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் வந்த வடக்கு மாகாணத் தமிழர்களைத் தனியாகப் பதிவு செய்வதற்கு குறுகிய கால அறிவித்தலோடு பொலிஸார் எடுத்த நடவடிக்கை, நீதிமன்றில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகலாம் எனப் பலரும் எதிர்பார்த்த பின்னணியில் இந்த விடயம் நேற்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டு சப் என அடங்கிப்போனது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஆட்களின் பொலிஸ் பதிவு தொடர்பாக வெளியிட்ட உத்தரவுகளைப் பொலிஸார் மீறிவிட்டனர் என்று வாதிட்டார்.

பொலிஸார் தரப்பில் ஆஜரான சட்ட ஆலோசகர் அதனை மறுத்தார்.

அந்த உத்தரவுக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. இது சம்பந்தப்பட்ட பிரதேச பிரஜைகள் குழுக்கள்மூலம், பொலிஸார் மேற்கொண்ட புள்ளி விவரத் திரட்டலுக்கான கணக்கெடுப்பு மட்டுமே. மூன்று மொழிப் பத்திரிகைகள் மூலம் ஒழுங்காக அறிவித்தல் கொடுத்து, நீதியான கௌரவமான முறையில் இது முன்னெடுக்கப்பட்டது. இதில் எந்தத் தவறும் இல்லை. என்றார் அவர்.

இதனை எதிர்த்துக் கருத்து வெளியிட்டார் மனுதாரர் தரப்பு சட்டத்தரணி.

இந்தப் பொலிஸ் பதிவு நடவடிக்கைக்கு சட்டமா அதிபரும் ஆலோசனையும் சம்மதமும் வழங்கியுள்ளார் எனப் பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார் என்று மனுதாரர் தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டியபோது அரசுத் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி அதனை மறுத்துரைத்து அப்படி ஆலோசனை ஏதும் சட்டமா அதிபர் வழங்கவில்லை என்று சொன்னார்.

அவசரகாலச்சட்ட விதிகளின் 23 ஆம் பிரிவின் கீழ் தமக்குள்ள அதிகாரத்தின்படி இந்தப் பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார். ஆகையால் இது பிரஜைகள் குழுக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்ல என்று மனுதாரர் தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அதை ஏற்க மறுத்த பிரதம நீதியரசர், பொலிஸ் பேச்சாளர் விடயம் அறியாமல் ஏதும் உளறியிருப்பார். அதை விட்டுவிடுங்கள். இந்தக் கணக்கெடுப்பை பிரஜைகள் குழுக்கள் மூலமான நடவடிக்கையாகக் கருதமுடியும் என்று குறிப்பிட்டு அந்த வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.