Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களால் ஆபத்து திரும்பப் போய் விடுங்கள் - பேரினத்தின் இம்சை

Featured Replies

ஒவ்வோரு தடவையும் நான் வெளியே செல்லும் போது எனது அடையாள அட்டையை பார்வையிடும் பொலிஸார் அதிகளவுக்கு கேள்வி கேட்கின்றனர். திரும்பிப் போகுமாறு அடிக்கடி கூறுகின்றனர். நாங்கள் ஆபத்தானவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் புலிகள் என்று அவர்கள் சொல்கின்றனர். 54 வயதுடைய வடபகுதியைச் சோந்த லக்ஷ்மி வள்ளியம்மா என்ற பெண் தெரிவித்தார்.

குறைந்த கட்டணம் அறவிடும் வெள்ளவத்தைப் பகுதி விடுதியொன்றில் வள்ளியம்மா தங்கியிருக்கிறார். தனது மகனுடன் 18 மாதங்களுக்கு முன்னர் இப் பெண் கொழும்புக்கு வந்துள்ளார்.

வடக்கின் யுத்த சூழ்நிலையால் தென்பகுதிக்கு வந்துள்ள ஆயிரக்கணக்கானோரில் வள்ளியம்;மாவும் ஒருவராவார்.

கொழும்பில் சாதராண தமிழ் மக்களின் வாழ்க்கை மோசமடைந்து வருவதாக அவர் கூறினார்.

அடிக்கடி தேடுதல்கள், தடுத்து வைப்புகள், இம்சைகள் இடம் பெறுவதாக தமி;ழ் மக்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். அடையாள அட்டையில் தமிழ் மக்களின் பெயர்கள், விலாசம் தமிழ் மொழியில்; இருப்பதால் அவர்கள் நீண்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

சகல தமிழரும் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் 99 சதவீதமான பயங்கரவாதிகளும் தமிழரே என்று பாதுகாப்பு செயலாளர் கோதாபய அண்மையில் தெரிவித்திருந்தார்.

புதிய கணக்கெடுப்பின் மூலம் 5 ஆண்டுகளுக்குள் கொழும்புக்கு 36 ஆயிரத்திற்கும் அதிகனமான தமிழர்கள் வந்திருப்பதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற பலவந்தமான பதிவு நடவடிக்கையானது நீதியற்றதும் சட்ட விரோதமானதெனவும் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் தெரிவித்தனர்.

'இது ஒரு இம்சை' என்று பி. ஜேசுதாசன் என்ற தகவல் தொழில் நுட்ப நிறைவேற்றதிகாரி ஏ.எவ்;.பி.க்கு தெரிவித்தார். அவர் யாழ். மாவட்டத்திலிருந்து வந்து கொழும்பில் 5 வருடங்களாக இருந்து வருகிறாh.

நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளளேன். ஆனாலும் மீண்டும் கணக்கெடுப்புக்கு சமூகமளித்தேன். ஏனெனில் அடுத்த தடவை தேடுதலுக்கு வரும் போதும் சோதனைச் சாவடியிலும் பொலிஸாரின் கெடுபிடியை எதிர்கொள்ள நான் விரும்பவில்லை என்று கூறிய அவர் தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கமில்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடையில் தேடுதல் நடத்தப்பட்டது. பணியாளர்கள விசாரணைக்குட்படுத்தப்பட்டன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.