Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் 2 லட்சம் மக்கள் மிக ஆபத்தான கட்டத்தில்! அபாயக்குரல் எழுப்புகின்றன ஐ.நா. அமைப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக 2 லட்சம் மக்கள் ஆபத்தான நிலையிலுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் முகவர் அமைப்புகள் அபாயக் குரலெழுப்பியுள்ளன.

இலங்கையில் செயற்படும் ஐக்கிய நாடுகளினது முகவர் அமைப்புகளையும், முக்கிய அரச சார்பற்ற அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் ஐ.நாவின்

குழு வெளியிட்டுள்ள தனது வாராந்த அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி நகரின் அநேகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர் எனவும் தெரிவித்துள்ள மனிதாபிமான அமைப்புகள் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராணுவ நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் விமானக் குண்டுவீச்சும்,ஷெல் தாக்குதலும், சிறு ஆயுத பிரயோகமும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கிளிநொச்சி நகரில் அநேகமான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி நகரில் தங்கியிருந்த மக்களும் வெளியேறிவிட்டனர்.

வன்னியில் பணியாற்றிய மனிதாபிமான அமைப்புகள் வெளியேறும் நடவடிக்கைகள் 16ஆம் திகதி முடிவடைந்தன. 21 வாகனங்களில் 42 மனிதாபிமானப் பணியாளர்கள் வெளியேறினர். படிப்படியாக வெளியேறுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததன் காரணமாக அது சாத்தியமாகவில்லை.

பொதுமக்கள் குழுவொன்று மூன்று நாள்களாக வாகனத் தொடரணியைத் தடுத்து வைத்திருந்ததுடன் மனிதாபிமானப் பணியாளர்கள் வெளியேறுவதால் தமது நிலைமை மேலும் மோசமடையும் என்ற கவலையையும் அந்த மக்கள் தெரிவித்தனர்.

மனிதாபிமானப் பணியாளர் 500 பேர் வன்னியில்

விடுதலைப் புலிகள் போக்குவரத்து அனுமதி வழங்காததாலும் தமது குடும்பங்களுடன் தங்கியிருக்க விரும்பியதாலும் 500 இற்கும் மேற்பட்ட மனிதாபிமான பணியாளர்கள் வன்னியிலேயே தங்கிவிட்டனர். இவர்களில் ஐக்கிய நாடுகளின் 21 பணியாளர்களும் உள்ளனர்.

விமான மற்றும் ஷெல் தாக்குதல் குறித்த அச்சம் காரணமாக மக்கள் தொடர்ந்தும் முல்லைத்தீவு நோக்கி சென்ற வண்ணமுள்ளனர். கனகாம்பிகைக் குளம், இரணைமடு சந்தி ஆகிய பகுதிகளின் மக்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

வன்னியில் 2 லட்சம் மக்கள் ஆபத்தான நிலையிலுள்ளனர். அவர்களுக்கு மேலும் உதவிகள் அவசியம். வவுனியாவிலுள்ள அதிகாரிகள் நிவாரண விநியோகத்தை ஒருங்கிணைப்பதற்கான நிலையமொன்று ஓமந்தையில் ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

uthayan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.