Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாக்குதல்கள் நகரை நெருங்குகின்றன்; கிளிநொச்சி வெறிச்சோடுகிறது

Featured Replies

வன்னியில் கிளிநொச்சி நகருக்கு அருகில் மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில், வான் குண்டுத் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும்,

சிறிய ஆயுதத் தாக்குதல்களும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாக சர்வதேச உதவி அமைப்புக்களுக்கிடையிலான முகவர் குழுவான ஐ.ஏ.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கிளிநொச்சி பிரதேச மக்களும், ஏனைய பல பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்து அங்கு தங்கியிருந்தவர்களும் கிளிநொச்சியை விட்டு வெளியேறி வருவதாகவும் அந்த அமைப்பை மேற்கோள் காட்டி ஐ.பி.எஸ். செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்ந்த பெரும்பாலான மக்கள் கிழக்கே முல்லைத்தீவு வீதியிலுள்ள தர்மபுரம் பகுதியில் பெருமளவுக்குத் தஞ்சம் புகுந்துள்ளனர். தர்மபுரம் விவசாய நீர் வாய்க்கால்கள் நிறைந்த பிரதேசம் என்பதால் மக்கள் அங்கு அதிகம் குடியேறுவதாகத் தெரிவிக்கும் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள், எனினும் இங்கு கழிவகற்றல் வசதி பெரும் பிரச்சினையாக இருப்பதாகவும், மக்கள் அனைவரும் பொது இடங்களையே இந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளன.

ஜுன் மாதத்திலிருந்து வன்னியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து வரும் மக்களின் எண்ணிக்கை தற்போது 230,000 ஐ அண்மித்திருப்பதாக தெரிவிக்கும் மனிதநேய உதவி அமைப்புக்கள், இவர்கள் அனைவருக்கும் இப்போது அவசர உதவிகள் தேவைப்படுவதாகக் குறிப்பிடுகிறது.

இலங்கை அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய செப்டெம்பர் மாதம் 16ம் திகதியுடன் ஐ.நா. நிறுவனங்கள் உட்பட அனைத்து உதவி வழங்கும் அமைப்புக்களும் வன்னியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மட்டுமே அங்குள்ள இவ்வளவு தொகை மக்களுக்கு வேண்டிய உதவிகளையும் வழங்கிவருகிறது. வன்னியிலிருந்து வவுனியாவுக்கு இடம் மாறியுள்ள எந்தவொரு அமைப்பும் இன்னமும் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்காத நிலையில், வன்னிப் பகுதி மக்களுக்கான உதவிகள் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளன.

�வன்னியில் தொடர்ந்தும் எமது பணிகளை நாம் முன்னெடுக்க விரும்புகிறோம்�� என்று தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள ஐ.நா. பேச்சாளர் கோர்டன் வெய்ஸ், எவ்வாறு இதனை மேற்கொள்வது என்பது தொடர்பாக அரசாங்கத்துடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் கூறியுள்ளார். எனினும், எப்போது இந்தப் பணிகள் உரிய முறையில் ஆரம்பிக்கும் என்பது தொடர்பான உத்தரவாதம் எதுவும் இன்னமும் வழங்கப்படவில்லை.

ஐ.நா. முகவர் அமைப்பான உலக உணவுத் திட்டம் வன்னியில் கொண்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தி மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யலாம் என்று அரசாங்கம் கருதுவதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன. ஐ.நா. முகவர் அமைப்புக்களை வன்னியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட இலங்கை அரசாங்கம், எனினும், உலக உணவுத் திட்டம் தொடர்ந்து அங்கு தங்கியிருக்கவேண்டும் என்று கோரியபோதிலும், தாம் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

வன்னியில் மோசமான உணவுத் தட்டுப்பாடோ அல்லது பிரச்சினைகள் குறித்தோ எந்தத் தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ள, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

�பாதுகாப்பு, சுகாதாரம், தண்ணீர், உறைவிடம், கழிவகற்றல் வசதி மற்றும் உணவு என்பனவே இந்த மக்களை அழுத்தும் பிரதான பிரச்சினைகளாக உள்ளன. உள்ளூர் சுகாதார நிறுவனங்கள் மக்களுடன் இடம்பெயர்ந்து சென்று மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றன. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு முன்னரைவிட அதிகளவு நோயாளர்கள் வருகை தருகின்றபோதிலும், பெரியளவு சுகாதாரப் பிரச்சினைகள் எதுவும் இதுவரையில் ஏற்படவில்லை. எனினும், பருவமழை ஆரம்பித்தால் நிலைமை மோசமடையலாம்�� என, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்கத்தின் இலங்கைக்கான பிரதித் தலைவர் அன்ரனி டல்சியல் தெரிவித்துள்ளார்.

ஜுன் மாதம் முதல் இடம்பெற்றுவரும் மோதல்களால் குறைந்தது 14 வைத்தியசாலைகள் வேறிடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன. இதனால், சுமார் 200 கட்டில் வசதிகள் இழக்கப்பட்டுள்ளன. 45 சதவீதமான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத் தேர்வுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்று ஐ.நா. அமைப்புத் தகவல் ஒன்று கூறுகிறது.

30,000 பாடசாலைச் சிறுவர்கள் இந்த மோதல்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக சேவ் த சில்ட்றன் அமைப்புக் கூறுகிறது.

http://www.tamilskynews.com/index.php?opti...-09-21-04-33-30

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.