Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!!

Featured Replies

ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!!

நியாயம் வேண்டியும்,நீதியான கௌரவமான வாழ்வு வேண்டியும் களத்திலும் புலத்திலும் தாயக மண்ணிலும், இடம்பெயர்ந்த தேசங்களிலும் வாழ்கின்ற தமிழ் உடன்பிறப்புகளை மனவுறுதி தளராது, நம்பிக்கையும், தைரியமும் ஊட்டி, வழிப்படுத்தி,மனவளப்படுத்தி, திட சிந்தனையோடு வைத்திருப்பது மிக முக்கிய மான விவகாரமாகும்.இந்த வரலாற்றுத் திருப்புமுனை வேளையிலே,இந்த மிகமுக்கிய பொறுப்பு,ஊடகங்களின் தோள்களில் பொறிந் திருப்பது மறுக்கமுடியாத உண்மை.களத்திலும் புலத்திலும் நம் தமிழ் உடன்பிறப்புகள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திவரும் ஊடகங்கள் இந்தக் கனதியான பொறுப்பைக் கடமையுணர்வோடு சுமந்து,தம் கடன் பணியாற்றி நிற்பதை பெருமிதத்தோடு இச்சமயத்தில் நாம் நினைவுகூர முடியும்.அவை,தாயக மண்ணிலிருந்து அல்லது கொழும்பிலிருந்து வெளிவரும் தேசியப் பத்திரிகைகளாக இருக்கலாம்.இணையத்தளங்களாக இருக்கலாம்.இலத்திரனியல் ஊடகங்களாக இருக்கலாம்.அல்லது புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து பிரசுரமாகும் அச்சு ஊடகங்களாகவோ,இணையத்தளம், வானொலி, தொலைக்காட்சி போன்ற இலத்திரனியல் ஊடகங்களாகவோ இருக்கலாம்.அவை அனைத்துமே தமிழரது உரிமைப் போரை முன்னோக்கித் தூக்கி, நெம்பித் தள்ளிவிடுவதில் கரிசனை கொண்டுள்ளவையாகவே விளங்குகின்றன.இவ்விடயத்தில் அவற்றின் பங்குபணியும், செயற்பாங்கும் விதந்து போற்றி மெச்சத்தக்கவை.அதிலும் குறிப்பாகத் தாயக மண்ணிலும், இலங்கைத் தலைநகர் கொழும்பிலும் இருந்து இயங்கும் ஊடகங்களின் சேவை வித்தியாசமானது.களத்தில் தம் மீதான நிர்ப்பந்தங்கள், கட்டுப்பாடுகள், அழுத்தங்கள், நெருக்குவாரங்கள், அச்சுறுத்தொகள், அழிவு நாச எத்தனங்கள் போன்றவற்றுக்கு மத்தியிலும் தமது வரலாற்றுக் கடமையை அவை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டியவையாக இருக்கின்றன் கொண்டு செல்கின்றன.ஒருபுறம் தம்மை நோக்கி ஏவிவிடப்படக்கூடிய சட்டம்.மறுபுறம் சட்டத்தை மிதித்து சதிராடும் அட்டகாசத் தரப்புகள்.இவற்றுக்கு மத்தியில் கத்தியில் நடப்பதுபோல அந்த ஊடகங்கங்கள் ஆற்றும் அளப்பரிய பணி பலருக்கும் புரிவதில்லை.தமது நிர்வாகத்தின் நோக்கு போக்கு,இலக்கு,கொள்கை ஆகிய சிக்கல்கள்மற்றும்தைரியமோ,தி?சங்கற்பமோ இல்லாத முகாமைத்துவம் போன்ற பின்னடைவுகளுக்கு முகம் கொடுத்தபடியே மறுபுறத்தில் தமிழர் தரப்பு நியாயத்தையும் இயன்றளவு முன்நகர்த்தும் இந்த ஊடகங்களின் இரண்டுங்கெட்டான் கஷ்ட நிலைமை பலருக்குப் புரிவதில்லை.அதுவும் புலம்பெயர்ந்த தேசத்தில் பாதுகாப்பாக இருந்துகொண்டு,தம் இஷ்டப்படி விமர்சனங்களைவெளியிட்டு அள்ளி வீசியபடி வியாக்கியானம் செய்யும் ஊடகப் பெரியவர்கள் பலருக்குக் களத்தில் உள்ள ஊடகங்களின்சிக்கல்கள் புரிவதில்லை.உண்மையில் எல்லாத் தமிழ் ஊடகர்களையும் அரவணைத்துத் தமிழரின் பொதுநலனுக்கான பொது முயற்சியில் அவர்களின் ஆதரவை அவரவர்களது தளத்திலிருந்து இயன்றவரை திரட்டி எடுப்பதே தமிழர் தரப்பின் ஏக இலக்காகவும் முயற்சியாகவும் இருக்கவேண்டும்.அதை விடுத்து தத்தமது நெருக்கடிகள்,கஷ்டங்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு உத்வேகம் அளிக்கும் ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும்களநிலைந

Edited by THEEPAN0007

உதயன் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம். யாழில் பலர் படிக்கவேண்டிய கட்டுரை.

உதயன் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம். யாழில் பலர் படிக்கவேண்டிய கட்டுரை.

யாழ் நிர்வாகமும் மட்டுறுத்துனர்களும் இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்

ஊடகச் சமராடிகளை அரவணைத்துச் செல்லுங்கள் - தமிழ் தேசிய ஊடகமென தம்மை தாமே மார்பு தட்டுபவர்களுக்கு அறைகூவல்!!

http://www.nitharsanam.com/?art=25965

நீண்டநாட்களாக மனதில் இருந்துவந்த ஆதங்கம் இது. சரியான நேரத்தில் இணைத்தமைக்கு நன்றி.

யாழ. உதயன் நாளிதழின் ஆசியர் தலையங்கமாக இது இருந்தால், அதற்கான காரணத்தைக் கூறமுடியும். உதயன் சுடரொளி நிர்வாகத்தினர் சர்வதே அளவில் தங்கள் பத்திரிகையை வெளியிடும் நோக்கில் அண்மையில் கனடாவுக்கு வந்துள்ளனர். இங்கு ஏற்கனவே அதே பெயரில் வேறொரு பத்திரிகை இருப்பதாலும் வேறு சில காரணங்களாலும் யாழ். உதயன் நாளிதழை கனடாவில் ஆரம்பிப்பதை இங்குள்ள சிலர் விரும்பவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாக உதயன் நிர்வாகத்தினர் கனடாவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களே இந்த்த் தலையங்கத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனாலும் கருத்துக்கள் நியாயமானவை.

Edited by nakkeran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.