Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர் பிரச்சினையில் ம.தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தனிமைப்பட்டு விட்டன - வீரமணி

Featured Replies

ஈழத்தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் தனிமைப்பட்டு விட்டன என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது :

தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எந்த பொதுப் பிரச்சினைகளிலும் கூட ஒன்று சேர மறுத்து, எங்கும் அரசியல், எதிலும் அரசியல் என்று செயற்படுவது மிகவும் வேதனையும் வெட்கமும் அடைய வேண்டிய ஒன்றாகும். கருணாநிதி குரல் கொடுத்ததோடு றிறுத்திக் கொள்ளாமல், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்;ட முயற்சி எடுத்துள்ளார். ஈழத்தமிழர் பிரச்சினையில் உண்மையான அக்கறையும், கவலையும் இன உணர்வும் உள்ள எவரும் இதனை வரவேற்கவே செய்வார்.

ஆனால் அ.தி.மு.க.வும் ம.தி.மு.கவும் கருணாநிதி கூட்டவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என்று அவசர அவசரமாக அறிவித்து இருப்பதன் மூலம் சிங்கள பேரினவாதிகளுக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தமிழினம் ஒன்றுபட விரும்புவோருக்கு ஆறாத மனப்புண்ணையும் ஏற்படுத்தி விட்டனர்.

ஈழத்தமிழர் வாழ்வுரிமை, ஈழத்தில் விடிவு, விடியல் சம்பந்தமாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை எடுத்து வைப்பதுதானே சரியான பொறுப்பான அணுகுமுறையாக இருக்க முடியும்? ஆக்கபூர்வமான பிரச்சினையில் ஏதாவது ஒரு திருப்பத்தை உருவாக்க முடியும் என்றால் அது தமிழ் நாட்டு முதலமைச்சரால் தான் முடியும் என்பது உலகறிந்த உண்மை.

ஜெயலலிதாவின் நிலைப்பாட்டினையே 19 மாதம் ஈழத்தமிழருக்காகவே சிறையில் இருந்தேன் என்று கூறும் சகோதரர் வைகோவும் அதேநிலை எடுக்கிறார் என்றால் இதைவிட விசித்திர அரசியல் கேலிக்கூத்து வேறு உண்டா? உலகத்; தமிழர்களுக்கு உண்மை விளங்காமற் போகாது. ம.தி.மு.க., அ.தி.மு.க. எடுக்கும் இந்த முடிவை கண்டு அவர்கள் என்ன நினைப்பார்கள்? :icon_mrgreen:

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழ் நாட்டில் அனைத்து தலைவர்களும் ஒட்டு மொத்தமாக செயல்படும் போக்கிற்கு மகிழ்ச்சியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். அவர் இவர்களின் நிலை கண்டு என்ன நினைப்பார்.

தமிழர்களை பாதுகாக்கும் அரண் விடுதலைப் புலிகள் அமைப்புதான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த யாதார்த்தத்தையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுத்தால் அதில் ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா? தி.மு.க.வுக்கு எதிராக இருக்கும் சில அரசியல் கட்சிகனள் கூட அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க முன்வந்துள்ளன.

இந் நிலையில் அ.தி.மு.கவும் ம.திமு.க.வும் முக்கியமான ஈழத்தமிழர் பிரச்சினையில் தனிமைப்பட்டு போய் விட்டன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நன்றி வீரகேசரி

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கூட்டும் இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் , அ.தி.மு.க. வும் ம.தி.மு.க. வும் பங்கு பற்றியிருந்தால்,

மத்திய அரசும் , சிங்கள அரசும் திகைத்து போயிருக்கும் .

என்ன செய்வது , இதுதான் தமிழனின் தலை விதி .

விஐயகாந் கட்சியும் புறக்கணித்திருப்பதாக செய்தியல் கேட்டேன்.சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காது

இலங்கை தமிழர் பிரச்னைக்காக தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் எங்களைப் போன்றவர்கள் கலந்து கொண்டபோது இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்களும் அரைகுறை ஆதரவாளர்களும் கலந்து கொண்டார்கள் என்று கருணாநிதி குறிப்பிட்டது ஒரு சுமூக சூழ்நிலையை உருவாக்கக் கூடியதா?

1956 முதல் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாகப் பாடுபடுவது திமுகதான் என்று கருணாநிதி கூறிய பிறகு மற்ற கட்சிகளுக்கு இதில் என்ன வேலை என்று கேட்பதாகத் தானே அர்த்தம். உண்ணாவிரதத்துக்குப் போட்டியாக தந்தி கொடுங்கள் என்று அறிவித்தபோது அனைத்துக் கட்சிகளைப் பற்றிய சிந்தனை இல்லாதது ஏன்?

1974-ம் ஆண்டு கச்சத் தீவை ஏன் தாரை வார்த்தீர்கள்? என்று கேட்டால் அப்போது நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை சாட்சிக்கு அழைக்கிறார். அதுபோல இலங்கைத் தமிழர் பிரச்னையிலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை பயன்படுத்த எண்ணுகிறார் என்றே கருதுகிறேன். இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராடார் போன்ற கருவிகள் தந்து உதவியதை கருணாநிதி கண்டிக்கவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காரணம் காட்டி சொந்தப் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளும் ஜெயலலிதாவின் போக்கை தேமுதிக ஆதரிக்கவில்லை. அதேபோல இலங்கை அரசுக்கு மத்திய அரசு இரகசிய உதவி செய்வதையும் அதற்குத் துணைபோகும் திமுகவையும் தேமுதிக கண்டிக்கிறது.

மின்வெட்டு விலைவாசி உயர்வு தொலைத்தொடர்புத் துறை ஊழல் போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவே இலங்கைத் தமிழர் பிரச்னையை கருணாநிதி கையில் எடுத்துக் கொண்டுள்ளார். எனவே அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்காது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

நன்றி தமிழ்வின்

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்து இருக்கும் வீரமணி ஐயா அவர்களே.... தமிழனுக்கு கலைஞரின் சுயரூபம் தெரிந்து விட்டது. இன்றும் என்றும் உண்மையாக மனப்பூர்வமாக தமிழர்களையும் தமிழரின் ஒரே நம்பிக்கை புலிகளையும் ஆதரித்து வருபவர் வை.கோ அவர்கள். புலிகளை வெறுக்கும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்திருந்த போதும் தனது நிலை மாறாது நின்றவர். கலைஞர் கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்கிறார்.. அதற்கு துணை போய் நீங்களும் உங்கள் நற்பெயரை இழந்து விடாதீர்கள்.

கலைஞர் நினைத்தால் இந்த கணமே மொத்த பிரச்ச்சினையும் முடிந்து விடும். தந்திஇ அனைத்து கட்சி கூட்டம் எல்லாம் காலத்தை கடத்த போடும் திட்டம் இது ஈழ தமிழன் மட்டுமல்ல தமிழ் நாட்டு தமிழனுக்கும்இ உலக தமிழருக்கும் நன்றாகவே தெரியும். இனி அவர் தமிழரை ஏமாற்ற முடியாது. மொத்தமும் முடிந்து விட்டது. தமிழகத்தில் தி.மு.க வின் கடைசி ஆட்சி இது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் தேவையற்ற விதத்தில் அரசியலை இழுப்பதை மதிப்புக்குரிய வீரமணி ஐயா அவர்கள் தவிர்த்திருக்கலாம். யாரையும் இதில் குற்றம் சாட்டி இழுப்பது, தேவையற்ற ஒன்று. இந்தப் பிரச்சனையில் யாரும் குளிர்காய மாட்டார்கள் என்பது தான் எங்களின் நம்பிக்கை.

இருப்பினும், அனைத்து கட்சிகளிடம் இருந்து மனப்பூர்வ ஆதரவுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நாளில் போராட்டத்தில் ஈடுபட்டாலே போதும். ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு போராட்டம் என ஈடுபட்டு வேற்றுமையை காண்பிப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.