Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரச்சனையை திசைதிருப்பும் நேர்மையற்ற பார்வை!

Featured Replies

எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் மீது சிறிலங்க இராணுவம் தாக்குதல் நடத்தி, அதன் காரணமாக மிகப் பெரும் அளவிற்கு மனிதாபிமான, மனித உரிமை பிரச்சனை எழுகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு ஆதரவாகவும், சிறிலங்க அரசின், அந்நாட்டு இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் இருந்து குரல் எழுவது இயல்பான, இயற்கையான எதிர் வினையாகும்.

ஆனால், அவ்வாறு சிறிலங்க அரசின் அடக்குமுறையையும், சொந்த நாட்டு மக்கள் மீது அவர்கள் கடந்த 30 ஆண்டுக்காலமாக கட்டவிழ்த்துவிட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பிற்கு எதிர்ப்புக் குரல் எழும்போதெல்லாம், இங்கிருந்து சில அரசியல் ‘தலைவர்களும்’, சில பத்திரிக்கைகளும் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவான குரலாக சித்தரித்து எதிர்க்குரல் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

அப்படிப்பட்ட குரல்கள் இப்பொழுதும் எழுந்துள்ளது தமிழர்கள் அனைவரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திவரும் இன ஒடுக்கலுக்கு இந்தியா ஆயுதம் தந்து உதவுகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பேசினார். உடனே தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அவர் பேசுகிறார் என்றும், ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூக்குரலிட்டார்.

சிறிலங்க இராணுவத்தால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டும், அந்நாட்டு விமானப் படை தொடர்ந்து நடத்திவரும் குண்டு வீச்சால் வீடிழந்து தங்கள் மண்ணிலேயே இரண்டரை இலட்சம் பேர் அகதிகளாக சாலையோரங்களிலும், மரத்தடிகளிலும் தஞ்சமடைந்துள்ள அவல நிலையை அறிந்து, அவர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் இருந்து அபயக்குரல் மீண்டும் எழும்பியுள்ளது. ஆனால் இதனை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல் என்கிறது நமது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு நூற்றாண்டுக் கால ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ் ஒன்று.

ஒன்றேகால் இலட்சம் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர், தங்கள் நாட்டிலேயே இரண்டரை இலட்சம் தமிழர்கள் அகதிகளாகி உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏதும் கிட்டாமல் அல்லுறுகின்றனர். அவர்களுக்கு உதவிடும் நோக்கோடு செயல்பட்டுவந்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சிறிலங்க அரசால் வெளியேற்றப்பட்டுவிட்டன. இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல், தனது கருத்துப் பக்கத்தில் நீண்ட ‘தேசப்பற்று’ கட்டுரை தீட்டியுள்ளது அந்த நாளிதழ்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்படும் குரல்கள் யாவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல்களாம். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அந்த ‘பயங்கரவாத’ இயக்கத்தின் தூண்டுதலால்தான் ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் சிறிலங்காவிற்கு எதிராக குரலெழுப்புகின்றனவாம். அந்த தமிழ் வெறித்தனக் கூச்சலிற்கு ஆட்பட்டு ஆளும் கட்சியான தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் அதே குரலை (அதாவது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான) குரலை ஒலிக்கின்றனவாம். இப்படியெல்லாம் கூறிவிட்டு, அந்தக் கட்டுரையாளர், தனது மிதமிஞ்சிய தேசப்பற்றை ஒரு படி மேலே சென்று பறைசாற்றியுள்ளார்.

வாசகர்களின் கருத்துக்களை படிக்க

http://tamil.webdunia.com/newsworld/news/c...081014039_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தீபன் இணைத்தமைக்கு

எவ்வளவு விளக்கமாக முழுவதியும் எடுத்துரைத்துள்ளார் அந்த வாசகர் நன்றி அண்ணே

அவரின் பெயர் பூபதியென நினைக்கிறேன் அருமையான விளக்கம் இது தான் உன்மை விளங்கி கொள்ள வேண்டும் தமிழ் நாட்டு உறவுகளே

தி இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் அனுப்புவோம் சகோதரர்களே!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.