Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக சிலிர்த்தெழுந்த தமிழகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்

வீரங்கொள் கூட்டம்; அன்னார்

உள்ளத்தால் ஒருவ ரேமற்

றுடலினால் பலராய்க் காண்பார்

கள்ளத்தால் நெருங்கொ ணாதே;

எனவையம் கலங்கக் கண்டு

துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்

சொக்கும்நாள் எந்த நாளோ?

என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இன்று இருந்திருந்தால் அகமகிழ்ந்து இருப்பார். அவர் பாடிய பாடலைப் போல் தமிழர்கள் ஒன்றுபட்டு களத்தில் நின்று முழங்கியதை பார்த்திருந்தால் தனது கனவு நனவானதைக் கண்டு மிகப்பெரும் மகிழ்ச்சியை அடைந்திருப்பார்.

அண்ணல் காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2ம் தேதி தமிழகம் அந்த புனிதருக்கு முற்றிலும் வேறுபாடான வகையில் வீரவணக்கம் செலுத்தியது.

cpipattininedumaranmg3.jpg

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகளும் தமிழர் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் ஒன்று திரண்டு சென்னை முதல் நாகர்கோயில் வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணா நோன்பினை மேற்கொண்டனர். அண்மைக் காலத்தில் இத்தகைய பேரெழுச்சி தமிழகத்தில் காணப்பட்டதில்லை என்பதே உண்மையாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை தமிழகக் கட்சிகள் ஆதரவு நிலை எடுத்த போதிலும் இதுவரை தனித்தனியாகத் தான் போராட்டங்களை நடத்திவந்தன. ஆனால் முதன்முறையாக மிகப்பெரும் பாலான கட்சிகள் ஒன்றிணைந்து கீழ்க்கண்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியது இதுதான் முதன்முறையாகும்.

1. தமிழரை இனப்படுகொலை செய்யும் சிங்கள அரசுக்கு இந்திய அரசே ஆயுதம் அளிக்காதே!

2. இலங்கையில் போரை நிறுத்தி சமரசப் பேச்சுக்கள் தொடங்க இந்தியா முயற்சி மேற்கொள்ளவேண்டும்.

3. தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

மேற்கண்ட குறைந்தபட்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அனைத்துக்கட்சிகளும் அணிதிரண்டன. இந்திய கம்யூனிஸ்ட்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், தேசிய செயலாளர் டி. ராஜா, மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. தேசிய முற்போக்கு திராவிடர் கழக அவைத் தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் அப்துல் காதர், தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் திண்டிவனம் இராமமூர்த்தி, இலட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி. இராஜேந்தர், பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, உலகத் தமிழர் பேரவைத் தலை வர் ஜனார்த்தனன். சமூக நீதிக்கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், மற்றும் கவிஞர்கள் இன்குலாப், அறிவுமதி, முத்துலிங்கம், வ.அய்.ச ஜெயபாலன், ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி, திரைப்பட இயக்குநர்கள் வி.செ. குகநாதன், தங்கர்பச்சான், சீமான், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

மதுரை

மதுரையில் மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் நல்லகண்ணு தொடக்கி வைத்தார். நகர் மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமையிலும் மாவட்டச் செயலாளர் காளிதாஸ் முன்னிலையிலும் நடைபெற்ற போராட்டத்தில், தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த மாணிக்கம், பரந்தாமன், பிச்சை கணபதி, கணேசன், முனைவர் வேலன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த அண்ணாதுரை, ஜோதிராம், ம.தி.மு.க வைச் சேர்ந்த என், டி, சின்னச் செல்லம், புதூர் பூமிநாதன், மேகபூப் ஜான், சுப்பையா, பாஸ்கர சேதுபதி, மத சார்பற்ற ஜனதா தளத்தின் ஜான் மோசஸ், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ராஜேசுவரன், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த கருப்பையா, தமிழ் தமிழர் இயக்கத்தின் பரிதி, புரட்சிக் கவிஞர் பேரவை அரப்பா, தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் இராசு, தமிழ்த்தாங்கிச் சங்கத்தின் திரவியப் பாண்டியன் ஆகியோர் உட்பட 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முனைவர் இராம. சுந்தரம் போராட்டத்தை முடித்து வைத்தார்.

விழுப்புரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். ம.தி.மு.க. மாநிலப் பொருளாளர் மருத்துவர் மாசிலாமணி உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்தார். சி.பி.எம் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆனந்தன், தமிழ்த்தேசிய மார்க்சியக் கட்சியின் இராசேந்திர சோழன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் பேரா. பிரபா. கல்விமணி, த.ஈ.வி.ஆ.ஒ.குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எழில்.இளங்கோ, தமிழிளைஞர் கூட்டமைப்பை சேர்ந்த ஜோதி. நரசிம்மன், பாபு, கணேசன், ஆனந்தன், கேசவன், பாஸ்கர், தமிழர் கழகத்தின் ஏழுமலை, தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த சிவராமன், தமிழ் வேங்கை, வழக்கறிஞர் லூசி, தமிழினத் தொண்டியக்கத்தை சேர்ந்த விழுப்பறையன், தமிழநம்பி உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.

சிவகங்கை

சிவகங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழர்தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் பரந்தாமன், சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கோவை, ஈரோடு, நீலகிரி, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், திரு நெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களிலும் அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்ட போராட் டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு இடத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்குகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஓரிரு நாள்கள் முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாஸ் தலைமையில் தனியாக போராட்டம் நடத்தினர். விடுதலை சிறுத்தைகள் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டங்களின் விளை வாக ஆளும் கட்சியான தி.மு.க.வும் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தித் தீரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் உடனடியாகத் தலையிடுமாறு பிரதமரை வேண்டிக் கொள்ளும் தந்திகளை அனுப்பவேண்டு மென தி.மு.க. தலைவர் கருணாநிதி இக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழ்நாட்டில் உருவான இந்த கொதிப்புணர்வின் விளைவாக உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங் முதலமைச்சர் கருணாநிதியிடம் பேசினார். இலங்கைத் துணைத் தூதுவரை அழைத்து பிரதமரின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் இந்தியாவின் கவலையைத் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்பது உண்மையானாலும் மத்திய அரசு அசைந்துகொடுக்கத் தொடங்கி யிருக்கிறது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பது போல தமிழக மக்களின் ஒன்றுபட்டப் போராட்டம்தான் இந்திய அரசை சரியான நிலை எடுக்க வைக்கும் என்பதை உணர்ந்துவிட்ட தமிழக கட்சிகள் மேலும் ஒன்றுபட்டுப் போராட உறுதிபூண்டுள்ளன.

தமிழக கட்சிகள் ஒன்றுபட்டு போராடிய செய்தி உலகெங்கும் வாழும் தமிழர்கள் நடுவிலும் துன்பத்தில் உழலும் ஈழத்தமிழர்கள் நடுவிலும் பெரும் ஆறுதலையும் உற்சாகத்தையும் ஊட்டியுள்ளது.

-தென் செய்தி

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.