Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழமக்கள் படும் துயரில் உலகம் பாராமுகம் -இலங்கை நா. ம. உ சேனாதிராசா கடுங் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்கள் படும் துயரில் உலகம் பாராமுகம்

இலங்கை நா. ம. உ சேனாதிராசா கடுங் கண்டனம்

மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டின் அயலகத் தமிழர் கருத்தரங்கத்தில் தமழீழத்தைச் சேர்ந்த திரு.சேனாதிராசா அவர்கள் ஆற்றிய உரை:

தமிழர்களின் தலைவர்களுக்கு மட்டுமல்ல... தமிழர்கள் எங்கெங்கு வாழுகின்றார்களோ - அவர்கள் எல்லாம் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டது போல... கூண்டுகளில் வாழ்வது போல தமிழீழ மக்கள் வாழ்ந்து கொண்டிருப்ப தாகவும் சிங்களப் படையினரின் அத்துமீறல்களைப் பற்றி தெரிவிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஐ.நா.வி.னுடைய நிறுவன அதிகாரி களைச் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் தெரிவித்த அவர், சென்ற முதலாம் தேதி கொழும்புக்கு இந்த நாட்டின் பிரதமர் வந்த போது மதிப்பிற்குரிய மன்மோகன் சிங் அவர்களை எங்களுடைய பாராளு மன்றக் குழு சந்தித்த போது, “மகிந்த ராச பக்சே - இந்த இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்ப தற்கு - அரசியல் தீர்வுக்கு ஒருபோதும் தயாராக இல்லை. அவர்கள் தமிழ்த் தேசிய இனத்தைக் கூண்டோடு இனப் படுகொலை செய்வதாக மிரட்டும் வேலையைச் செய்கிறார்கள். ஆனால் வெளியிலே சொல்கிறார்கள் - விடு தலைப் புலிகள் தான் போராடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் திட்டம் தமிழ் இனத்தை முழுமையாகப் படுகொலை செய்வது. தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் நடக்கிறது என்று சொன்னோம். அதை இந்த நாட்டி னுடைய மதிப்புக்குரிய பிரதமரிடம் சொன்னோம். அப்போது அவர் இந்த நாட்டில் மனித உரிமை மீறப்படுவதாகச் சொன்னபோது கவலைப்படுவதாகச் சொன்னார்கள். இந்திய அரசு இலங்கை அரசை ஆதரிப்பதாக உள்ளது என நாங் கள் சொன்ன போது அவர் அதை மறுத் தார். என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அதே போல உலக நாடுகள் எல்லாம் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், ஏன் அமெரிக்க நாடு கூட மனித உரிமை மீறல்கள் இருக்கிறது என்று இலங் கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று அமெரிக்க காங்கிரசிலும் ஐரோப்பிய யூனியனிலும் தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனப் படுகொலை பற்றிப் பேசும் போது, “மொழி அழிக்கப்படுவதைப் பற்றி பேசினார்கள் இங்கே. மொழி மட்டுமா ஒரு இனமே - தமிழ் இனமே முற்றாக அழிக்கப்படுகின்ற நிலை மையை பகிரங்கமாகச் சொன்னோம். ஆனால் இந்திய அரசும் தமிழ் நாட்டி னுடைய அரசும் மெளனம் சாதிக்கின்றன. இந்த மெளனம் இலங்கை அரசாங்கத் தைத் தூண்டுகிறது. நாங்கள் இத்தனை யையும் சொன்னோம். எங்கள் மக்கள் இந்திய அரசு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள் எனச்சொன்னபோது அவர் அதை மறுத்தார். சர்வதேசமும் அப்படித் தான் சொல்கிறது. அமெரிக்காவிலும் ஐரோப் பிய யூனியனிலும் நாங்கள் இனப்படு கொலையைப் பற்றிக் கூறிய போது இந்திய நாட்டின் நிலைப்பாடு என்ன? என்று கேட்டார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இராணுவத் தாக்குதலின் காரணமாக கடந்த இரண்டு திங்களில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட எங்கள் மக்கள் அகதிகளாக வன்னிப் பகுதியில் மரங்களுக்குக் கீழ் - உணவில்லாமல் மருந்தில்லாமல் அங்கே அவர்கள் உறங்குவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் கூறி முறையிட்டோம். ஒரு தேசிய இனம் பட்டினியால் சாவதைப் பற்றியோ குண்டுமழை பொழியப்பட்டு படுகொலை செய்யப்படுவதையோ இந்திய அரசு ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று கேட்டோம். பிரதமர் சொன்னார் - இலங்கை அரசிடம் சொல்வதாக - கவலைப்படுவதாகச் சொல்கிறார்.

இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னால் இரஷிய அரசாங்கம் ஜியார்ஜியா மீது படை எடுத்தது. குண்டு மழை பொழிந்தது. ஐ. நா. சொன்னது - இதை உலக நாடுகள் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொன்னது. உங்கள் படைகளை நீங்கள் திருப்பிக் கொள்ள வேண்டும் எனச் சொன்னது. இந்தச் செய்திகள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவரவில்லையா? அங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் தொப்புள் கொடி உறவான ஒரு இனம் - பக்கத்தில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் - ஒரு இனமே சிங்களத்தில் குண்டுகள் வீசி அழிக்கப்படுகின்ற பொழுது இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை? இந்தியா அப்படிச் செய்யவில்லை. அப்படி இந்திய அர சாங்கமும் தமிழக அரசும் சொல்லி இருந் தால் நிச்சயமாக எங்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை என்பதைத் தான் நான் கவலையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இரஷ்யா ஜியார்ஜியா மீது அனுப்பிய படைகளைத் திருப்பிக் கொள்கிறது உலக நாடுகளின் கேள்வி களுக்குப் பின். நாங்கள் உலகநாடுகளை அணுகும் போது இந்தியா என்ன சொல்கிறது என்று கேட்கிறார்கள்.

சென்ற டிசம்பர் 22ஆம் தேதி பிரதமரைச் சந்தித்தபோது இலங்கையில் தமிழர் பகுதிகள் ஒன்றாக இருக்க வேண்டும் - வடக்கு கிழக்கு எனப் பிரிக்க முடியாது என்று சொன்னோம். பிரிக்கப்பட மாட்டாது என்று அவர் சொன்னார். இன்று பிரிக்கப்பட்டிருக் கிறது. வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முடியாது. தமிழீழம் என்பது இரண்டும் சேர்ந்த பகுதி தான் இரண்டு பகுதியும் சேர்ந்து தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட முடியும் என்று சொன்னோம். பிரதமர் ஏற்றுக் கொண்டார். நாங்கள் சென்ற மூன்றாம் தேதி கேட்டோம். நீங்கள் சொன்ன வாக்குறுதியை மீறி விட்டது இலங்கை அரசு என்று சொன்னோம். எந்த அடிப்படையில் தமிழர் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமோ அந்த அடிப்படையை அவர்கள் இன்று தகர்த்து விட்டார்கள். தமிழ் மக்கள் - தமிழக அரசாங்கம் இன்னும் மெளனம் காக்கிறதே? ஏன்? வடகிழக்கு ஒருமைப்பாட்டை சிங்கள அரசாங்கம் திட்டமிட்டு பிரிக்கிறது. இங்குள்ள தலைவர்கள் - மனிதாபிமானத் தின் அடிப்படையில் கூட நீங்கள் சிந்திக் கக் கூடாதா? ஐரோப்பிய யூனியனைச் சார்ந்தவர்கள் ஐநா சபையில் மனித உரிமை இலங்கையில் மீறப்படுவதைப் பற்றி கூறுகிறார்கள். இது மனித உரிமைப் பிரச்சினை. மனித இனம் இங்கே கூண்டோடு அழிக்கப்படுகிறது. அவர்களுக்கு என்ன பாதுகாப்பு என்று ஐ.நா.சபை கேட்கிறது, பாதிக்கப் பட்டவர்கள் நிலை என்ன? அவர் களுக்கு என்ன பாதுகாப்பினை ஐ.நா. வழங்க முடியும் என்று அங்கே பேசப் படுகிறது. இது மனித உரிமை பிரச்சினை மட்டுமல்ல. ஒரு இனமே கூண்டோடு அழிக்கப்படுகிற நிகழ்ச்சி என இந்திய அரசின் மெளனத்தையும் தமிழ்நாடு அரசின் மெளனத்தையும் சாடினார். உலகின் பிற பகுதியிலுள்ள மக்கள் - அரசுகள் காட்டும் பரிவினை - மனிதாபி மானத்தை இந்திய அரசோ தமிழக அரசோ காட்டவில்லை என்று வருத்தப் பட்டார்.

இந்திராகாந்தி அம்மையார் 1983ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் தேதி பாராளுமன்றத்தில் இலங்கையில் நடப்பது இனப் படுகொலை என்று சொன்னதைச் சுட்டிக்காட்டி அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று சொன்னார். விமானங்களையும் ஆயுதங் களையும் சீனாவிலிருந்து, பாகிஸ்தானிலிருந்து மற்றும் உலகெங்கிலுமிருந்து வாங்கி வந்து அவர்கள் தமிழர் பகுதி களில் முகாமிடுவதாகவும் தெரிவித்தார். தம்பி பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் கைது செய்ய வேண்டுமென்று பகிரங்கமாக இலங்கை அரசாங்கம் சொல்கிறது என்ற தகவலைக் கூறி ஆனால் அப்படி கைது செய்ய முடியாது என்ற தனது திடமான நம்பிக்கையையும், இலங்கை அரசின் படைகள் திருப்பி அனுப்பப்படும் எனவும் விடுதலைப் புலிகள் வீரத்தோடு போராடிக் கொண்டிருக் கிறார்கள் எனவும் தெவித்த அவர்,. ஈழத் தமிழர்களைத் தவிர இந்தியாவுக்கு வேறு நண்பர்கள் இருக்க முடியுமா? என்று வினா எழுப்பினார். தங்கள் தேசம் அழிக்கப்படுகிறபோது -தமிழீழம் அழிக்கப்படுகிற போது எதற்காக இந்திய அரசாங்கம், தமிழக அரசாங்கம் மெளனம் காக்கின்றன என்பது தங்க ளுக்குப் புரியாத புதிராக இருக்கிறது எனவும் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும் எனவும் இந்தச் செய்தி மக் களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜார்ஜியாவில் ரஷ்யபடையைத் தடுத்து நிறுத்தலாம் என்றால் ஏன் இந்தியா - ஏன் தமிழ்நாடு அரசு சிஙகள அரசுக்குச் சொல்ல முடியாதா? குரல் கொடுக்க முடியாதா? அதைக் கூட சொல்ல முடியாதா? இதைத் தான் வேதனையோடு இதயபூர்வமாக இந்த மண்டபத்தில் நின்று குரல் கொடுக் கிறோம். நாங்கள் மீண்டும் சொல்கிறோம். மிகவும் அழுத்தமாகச் சொல்கிறோம். உங்கள் தலைவர்களைச் சந்திக்க ஆயத்தமாக இருக்கிறோம். தமிழ் மக்கள் எங்களை அங்கீகரிக்க வேண்டும். தமிழகம் எங்கள் சுதந்திரத்தை - போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். இன்றைய தேவை அது தான். எங்கள் உரிமையை - ஈழத் தமிழர்களின் உரி மையை - இந்திய அரசாங்கம் அங்கீ கரிக்க வேண்டும். தமிழ் நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டும். அதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.. தமிழினம் அழிக்கப்படுவதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். தமிழகச் சட்ட மன்றத்தில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று தீர்மானம் போட வேண்டும்.

- தென் செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.