Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய ராஜதந்திரக் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது:(விசேட பின் இணைப்பு)

Featured Replies

இந்திய ராஜதந்திரக் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது:(விசேட பின் இணைப்பு)

இலங்கையின் யுத்த நிலைமைகளைக் கண்காணித்து, இந்திய அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில், இந்தியா, ராஜதந்திரக் குழுவை கொழும்புக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ராஜதந்திரக் குழு இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தில் இருந்தபடி செயற்படுவர் என கூறப்படுகிறது.

தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகள், வடபகுதி மக்களின் மனித உரிமை மீறல்கள், மோதல்களில் இந்த மக்களின் உயிர் உடமைகள் அழிக்கப்படுவது குறித்து இந்தக் குழுவினர் தமது கண்காணி;ப்புகளை மேற்கொள்ள உள்ளனர். இலங்கையின் யுத்த நிலைமை மற்றும்,தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருவதாக இந்தியப் பிரதமர், அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அதேவேளை இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களின் நலனுக்காக இந்தியா சகல நடவடிக்கைகளையும் எடுக்கும் என இந்திய பிரதமர் உறுதியளித்தார் என இந்திய மத்திய அமைச்சரான டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசியல் கட்சிகளில் உதவிகளைப் பெற்றுக்கொண்டு, இந்திய மத்திய அரசு ராஜதந்திர ரீதியில் இலங்கையின் பிரச்சினையில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவின் பிரபல அமைச்சர்கள் இருவர் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தூதுவர் அடுத்து சில தினங்களில் புதுடெல்லிக்கு:

இந்தியத் தலைவர்களைச் சந்திக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஒருவர் அடுத்தவாரம் இந்தியா செல்லவுள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர் இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் யோசனைகளை அங்கு முன்வைப்பார் எனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெடித்தெழுத்திருக்கும் அரசியல் நெருக்கடிகள் பற்றிய இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக இந்தியத் தலைவர்களுக்கு அத்தூதுவர் விளக்கமளிப்பார் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்விஜயத்தின் போது அவ்விசேட தூதுவர் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர், உள்விவகார அமைச்சர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளிவிவகாரச் செயலாளர் போன்ற இந்தியத் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட செய்தியினைக் கையளிப்பார்.

இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளால் தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து தமிழ்நாட்டில் எழுந்து வரும் எதிர்ப்பலைகள் குறித்து இந்திய அரசாங்கம் கவனமெடுத்து வருகிறது. இராணுவ நடவடிக்கைகளாலோ களமுனை வெற்றிகளாலோ இயல்பு நிலையினை மீளக்கொண்டுவர முடியாதென்று இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒவ்வொரு சமூகமும் அவர்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு அரசியல் தீர்வைக் காணுமாறு இலங்கையை வேண்டிக்கொள்கிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இடையில் அடுத்த வாரத்தில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்ற உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.