Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடுருவி நடமாடும் புலிகளின் அணிகள்-- சுபத்திரா

Featured Replies

"போரில் எந்தவொரு பிரதேசத்தையும் கைப்பற்றுவதை விட அதைப் பாதுகாப்பதே முக்கியமானது. ஏனென்றால் அந்தப் போரின் வெற்றியை தக்க வைப்பதில் தான் தங்கியிருக் கிறது' என்று போரியல் வல்லுனர்களால் கூறப் படுவதுண்டு.

இப்போது வன்னியல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் படைத்தரப்பு பெரும் பிரதேசத்தை கைப்பற்றியிருக்கின்ற போதும் அதைத் தக்கவைப்பதில் வெற்றி பெறுமாஎன்பது முக்கிய கேள்வியாக உள்ளது.

காரணம், தக்கவைப்பதென்பது சுலபமான தல்ல. அதற்கென தனியான படைப்பிரிவுகள் தேவை. பாதுகாப்புக் கொள்கைகள் தேவை.

தக்கவைத்ததை உறுதிப்படுத்துவதற்கு எதிர்த் தரப்பின் ஊடுருவல்களை முற்றாகக் கட்டுப் படுத்த வேண்டியது அவசியம்.

இந்தவிடயத்தில் அரசபடைகள் திணறுவதையே அண்மைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. வன்னியில் படையினரால் புதி தாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் புலிக ளின் அணிகள் பல ஊடுருவியிருப்பது இரா ணுவத் தரப்பினால் கண்டறியப்பட்டிருக்கிறது.

மேற்கு வன்னியில் கைப்பற்றப்பட்ட பகுதி களில் படையினர் செறிவாக இல்லாததால் புலி களின் அணிகளின் நடமாட்டம் தாராளமாக இருப்பதாகவும் தெரியவந்தள்ளது.

சார்ந்த நீண்ட மண் வீதிகளைக் கொண்ட பிரதேசமாக இருப்பதால் புலிகளின் ஊடுருவல் அணிகளுக்கு வாய்ப்பாக அமைந் திருப்பதாக கூறப்படுகிறது. சில இடங்களில் புலிகள் சைக்கிள்களில் கூட நடமாடித் திரிகின் றனர்.

இவர்களின் பிரதான இலக்கு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தாக்குதல் நடத்து வதாகத் தெரியவில்லை. பாரிய வலிந்த தாக்கு தல்களுக்கான தகவல்களைத் திரட்டுவது, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ளேயே செயற்படும் தாக்குதல் அணிகளை ஒன்றிணைப்பது போன்றனவே இந்த அணிக ளின் முக்கிய இலக்காக கருதப்படுகிறது. அதே வேளை படைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முக்கிய இராணுவ அதிகாரிகளின் நடமாட்டங் களை கண்காணித்து வரும் இவர்கள் அவர்கள் மீதான தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்ற னர்.

கடந்த 5ஆம் திகதி வெள்ளாங்குளம் வீதி யில் வைத்து புலிகளின் அணியொன்றின் தாக் குதலில் இருந்து 5ஆவது கவசப்படைப்பிரிவின் தளபதியான நிகால் சமரக்கோன் மயிரி ழையில் காயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார்.

இவர் பயணம் செய்த ஜீப் மீது புலிகளால் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் லெப்.கேணல் நிகால் சமரக்கோனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலின் போது லெப்.கேணல் நிகால் சமரக்கோன் காலில் காயமடைந்தார். அவர் சிகிச்சைக்குப் பின்னர் களமுனைக்குத் திரும்பி யிருக்கிறார்.

அத்துடன் அவருடன் சென்ற மேஜர் விஜே ரட்ண என்ற கவசப்படைப்பிரிவின் யுனிட் கொமாண்டர் ஒருவரும் படுகாயமடைந்திருக் கிறார். மன்னார் களமுனையில் படை நட வடிக்கை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற் கொண்டு 5ஆவது கவசப்படைப்பிரிவு டாங் கிகள், கவசவாகனங்களின் மூலம் 58ஆவது டிவிசனின் தரைப்படையினருக்கு ஆதரவான தாக்குதல்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத் தக்கது.

அதேவேளை கடந்த 9ஆம் திகதி வன்னிப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெள்ளாங்குளம், பண்டிவெட்டிக் குளம் பகுதிகளுக்குச் சென்றிருந்த போதும் படைக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் மோதல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதற்குப் பின்னர் கடந்த செவ்வாய்க் கிழமை இலுப்பைக்கடவையில் படையினரை எதிர்பாராமல் சந்தித்த போது புலிகள் தாக்கு தல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல எத்தனித்தனர்.

இந்தத் தாக்குதலின் போது 2 புலிகள் கொல் லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி ஒன்று, கிளைமோர்கள், இரவுப்பார்வை சாத னம் உள்ளிட்டவற்றை படையினர் கைப்பற் றினர்.

அதற்கு முன்னர் தேறாங்கண்டல் உள்ளிட்ட படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புலிகளின் ஊடுருவல் அணிகளுக்கும் படை யினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.

ஒரு இடத்தில் இறந்த புலி உறுப்பினர் ஒரு வரின் சடலத்தைப் படையினர் கைப்பற்றிய போது அருகேயிருந்து செய்மதித் தொலை பேசியையும் கண்டெடுத்தனர். படையினரால் ஒட்டுக் கேட்க முடியாத வகையில் வன்னிக் களமுனையில் புலிகள் செய்மதித் தொலை பேசிகளை உபயோகிப்பது தெரிய வந்திருக் கிறது.

ஊடுருவல் அணிகள் கட்டளைப் பணியகங் களுக்கு தகவல்களை தெரிவிக்க இவற்றைப் பயன்படுத்துவதால் அவற்றைப் படையின ரால் இடைமறித்து செவிமடுக்க முடியாதிருப்ப தோடு, இடைமறிப்புக் கருவிகளைக் கொண்டு ஊடுருவல் அணிகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட பிரதேசங் களில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் படையினர் உசார்படுத்தப்பட்டிருப்பதோட

Edited by தராக்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.