Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டும் - விக்கிரமபாகு கருணாரத்ன

Featured Replies

தேசிய இனபிரச்சினை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். இல்லையேல் அதன் விளைவுகள் இரண்டு நாடுகளுக்குமே மிகவும் பாரதூரமானதாக அமைந்து விடும். என கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நியாயமான அணுகுமுறைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமைய ஆகியன இந்நாட்டை விட்டே ஓரங்கட்டப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இலங்கைப் பிரச்சினை விடயத்;தில் இந்தியாவின் தலையீடு குறித்து கேட்டபோNது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவா மேலும் கூறுகையில், இலங்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகள் என்ற பெயரில் காலங்கள் கடத்தபட்டுகின்றனவே தவிர நியாயமான தீர்வுகள் எதையும் இன்றுவரை முன்வைக் முடியாதிருப்பது விரும்பத்தகாத விடயமாகும்.

யுத்தம் என்ற பெயரில் அழிவுகள் மிஞ்சுமே தவிர சமாதானமும் சகவாழ்வும் கனவாகும். யுத்தம் தற்போது உக்கிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்தின்; எழுச்சிகள் இந்;திய அரசை தர்மசங்கடத்தில் தள்ளியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசும்; இலங்கை விடயத்தில் தலையிட்டிருக்கினறது. இந்தியப் பிரமதர் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலேயே இலங்கை மீது சில அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்.

உண்மையில் மன்மோகன்சிங் அரசு ஆட்சி கவிழும் என்ற அச்சத்தினாலேயே இதில் தலையிட்டிருக்கிறது. அவ்வாறு உறுதியான பிடியொன்று தமிழ் நாட்டில் இருக்கின்றது.

மஹிந்தவின் அரசு பல விடயங்களில் இந்தியாவையே நம்பியிருக்கின்றது. அத்துடன் இந்தியாவின் கைப்பொம்மையாகவும் மஹிந்த செயற்பட்டு வருகின்றார்.

கருணா எம்.பியாகவும் பிள்ளையான் முதலமைச்சரானதும் கூட இந்தியாவின் அழுத்தங்களினாலேயே ஆகும். எனவே தற்போது இலங்கை விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இந்தியா, இலங்கை விடயத்தில் தலையிடாது தமிழ் நாட்டின் எழுச்சியை உதாசீனப்படுதினால் அது மத்திய அரசை ஆட்டம் காணச் செய்துவிடும். அதே வேளை இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசு அலட்சியப்படுத்தினால் கூட்டமைப்பு அரசுக்கான சலுகைகளை இழக்க நேரிடும். எனவே, தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கை அரசு சாதகமான தீர்மானங்களை எடுக்காது விட்டால் இது இரு நாடுகளுக்குமே பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும். இதனை இந்தியா ஒருபோதும் விரும்பப் போவதில்லை.

எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயாமான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதே பல்வேறு தரப்புகளினதும் அபிலாஷைகளாகும்.

இதனை நிறைவேற்றுவதற்கு ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமைய ஆகிய இனவாதக் கட்சிகள் முட்டுக்காட்டையாக இருக்கின்றன. இந்த முட்டுக்கடைடைகள் முதலில் அகற்றப்பட வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இனவாதக் கட்சிகளின் ஆலோசனைகள் நிராகரிப்படட வேண்டும். என்றார்.

நன்றி : வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.