Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த ராஜபக்சவின் “சந்திரிகா காய்ச்சல்” குணமடையுமா?

Featured Replies

ஐக்கிய தேசியக் கட்சி ரணில் விக்கிரம சிங்கவை வேட்பாளராகவும் பொதுசன ஐக்கிய முன்னணி மகிந்த ராஜபக்சவை வேட்பாளராகவும் நிறுத்தியபோது,

சந்திரிகா பண்டாரநாயக்க தமது ஆதரவை தமது கட்சி வேட்பாளரான ராஜபக்சவிற்கு வழங்காது, ரணில் விக்கிரமசிங்கவிற்கே வழங்கினார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறுபான்மையோரின் ஆதரவு இருப்பதால், இவரே சனாதிபதியாகத் தெரிவாவார் எனவும் ரணில் சனாதிபதியானால்,

தான் தொடர்ந்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக இருந்து இந்நாட்டின் அரசியல் பங்காளியாக இந்தியாவில் சோனியாவைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கலாம் என எண்ணியே செயற்பட்டார்.

சனாதிபதித் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் தமிழர்கள் வாக்களிக்காது பகிஸ்கரிப்புச் செய்ததால், மகிந்த ராஜபக்ச சனாதிபதியாக, சந்திரிகாவின் எண்ணங்கள் கனவாகின. ஆயினும் சந்திரிகா மீண்டும் அரசியலில் பிரவேசித்து விடுவார் என்ற "சந்திரிகா காய்ச்சல்" மகிந்த ராஜபக்சவிற்கு இருந்து கொண்டே வந்தது. இதனால் சந்திரிகாவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ராஜபக்ச படிப்படியாக ஈடுபடத் தொடங்கினார்.

சந்திரிகா தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என ஒன்றைப் போல் பல தடவை கூறினாலும், சந்திரிகா தொடர்பான காய்ச்சல் ராஜபக்சவிற்கு காய்ந்து கொண்டே இருந்தது. இதைக் குறைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமைப் பதவியை சந்திரிகாவிற்கு வழங்காது தானே பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தார்.

இதற்காகக் கட்சிப் பொதுச் சபைக் கூட்டத்தைக் கூட்டித் தானே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னால் புறமொதுக்கப்பட்ட சிறிபதி சூரியாராய்ச்சி, மங்கள சமரவீர போன்ற கட்சி முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டுச் சேர்வதையோ அன்றிப் பழகி வருவதையோ பெரிதுபடுத்தாத மகிந்த ராஜபக்ச, சந்திரிகாவுடன் பேசுகிறார்களோ என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்களையே வைத்திருந்தார்.

இந்தளவிற்கு சந்திரிகா காய்ச்சல் மகிந்த ராஜபக்சவை வருத்திக் கொண்டே இருந்தது. மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற காலம் தொடக்கம் பொதுசன ஊடகங்களைப் பயன்படுத்தி அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சந்திரிகா மீது சுமத்தி, சந்திரிகாவிற்கு நாட்டு மக்கள் மத்தியில் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அனுதாபத்தையும் கெடுத்து அரசியலில் இருந்து ஓரம் கட்டமுயன்றார்.

சந்திரிகா சனாதிபதியாக இருந்த போது, சனாதிபதி நிதியத்தில் இருந்து பெரும் தொகைப் பணத்தை தமது சொந்தத் தேவைக்காக கையகப்படுத்தினார் எனவும், அரசுக்குச் சொந்தமான காணி ஒன்றைத் தனது பெயருக்கு மாற்றினார் எனவும் குற்றஞ்சாட்டினார்.

சந்திரிகாவை அவதூறுக்குட்படுத்தி, குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, அரசியலில் வெறுப்படையச் செய்து, அவரை லண்டனி லுள்ள தனது மகளுடன், இந்நாட்டுக்கு வராது இருக்கச் செய்வதே ராஜபக்சவின் விருப்பாக இருந்தது. இவ்வாறான ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்களைப் பொருட்படுத்தாது அவரது குற்றச்சாட்டுக்களுக்கு அவ்வப்போது நியாயப்படுத்தி தனியார் ஊடகங்களுக்குப் பதிலளித்து வருவதுடன், சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் லண்டனில் இருந்து இலங்கை வருவதை வழமையாக்கிக் கொண்டார்.

ராஜபக்சவினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களினால் சந்திரிகாவிற்குப் பொதுமக்கள் தரப்பில் இருந்த ஆதரவையும், அனுதாபத்தையும் அழித்து விடவோ அன்றி சந்திரிகாவை அச்சமுற வைக்கவோ இயலாது போய்விட்டது. சந்திரிகா லண்டனில் இருந்து கட்டுநாயக்கா வரும்போது அவருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறைப் பாதுகாப்பு குறைக்கப்பட்டபோதிலும், இவற்றைப் பொருட்படுத்தாது தன்னாட்டுக்கு வந்து செல்வதைத்தான் எண்ணியபடியே செய்து கொண்டார்.

மேலும், முன்னாள் சனாதிபதி என்ற வகையில் சந்திரிகாவிற்கு வழங்கப்பட்டு வந்த, உத்தியோக வாசஸ்தலம், ஊழியர்கள் என்பனவற்றை ராஜபக்ச மீளப்பெற்றார். இந்நிலையிலும் சந்திரிகா இலங்கை வந்து செல்வதை நிறுத்தவே இல்லை. இதே சமயம் சந்திரிகாவின் சகோதரரும் கம்பகா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அத்தனகலைத் தொகுதியின் வாரிசுரிமை பெற்றவருமான அநுரா பண்டார நாயக்க சாவடைந்தபோது இவரது வெற்றிடத்திற்கு சந்திரிகா தன்னை நியமிக்குமாறு அல்லது தனது பிள்ளைகளில் ஒருவரை நியமிக்குமாறு தன்னை வேண்டக்கூடும் என ராஜபக்ச அச்சம் கொண்டிருந்தார்.

ஆயினும் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ராஜபக்ச அத்தனகலைத் தொகுதிக்கான வெற்றிடத்திற்கு பண்டாரநாயக்க குடும்பத்தில் ஒருவரை நியமித்து அக்குடும் நல்லெண்ணத்தையும், அனுசரணையையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு நிறையவே கிடைத்திருந்தது. அத்தனகலை பண்டாரநாயக்க குடும்பத்தின் வாரிசுரிமை பெற்ற அரசியல் கோட்டையாக, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவைப் போல மகிந்த ராஜபக்சவினாலும் அடையாளம் காணப்பட்டது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன தன்னுடைய இருப்பிற்காக, அத்தனகலைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமையைப் பறித்து அத்தனகலையில் மட்டுமல் லாது அரசியலரங்கிலிருந்தும் அப்புறப்படுத்தி ஜொலியான ஆட்சி ஒன்றை நடாத்தினார்.

இதேபோன்றதொரு வழிமுறையை ராஜபக்சவும் பின்பற்றி அத்தொகுதியின் பிரதிநிதித்து வத்தைப் பண்டாரநாயக்க குடும்பத்திற்கு வழங்காது சரணகுணவர்த்தன என்ற சண்டியனுக்கு வழங்கினார்.

இதன்மூலம் பண்டாரநாயக்க குடும்பத்திற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னணி வகிக்கும் கனவை நனவாக்கிக் கொண்டு அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்கி வாழுங்கள் என்ற காத்திரமான பாடமொன்று ராஜபக்சவால் புகட்டப்பட்டதாகவே நம்பப்படுகின்றது.

சந்திரிகாவை, மகிந்த ராஜபக்ச அரசியல ரங்கிலிருந்தும், கட்சித் தலைமையில் இருந்தும், ஒதுக்கப்பட்ட வேளைகளில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள் இதை ஒரு துரோகத்தன மாகவே கருதியிருப்பர்.

சந்திரிகா அரசியலில் கைவிடப்பட்டுப் பலவீனமாக்கப்பட்ட நிலை யில் இருப்பதாலும், ராஜபக்ச பலம் பெற்ற ஒருவராக இருந்து கொண்டு செயற்படுவதாலும், தாம் கொண்ட எண்ணங்களை வெளிப்படுத்த அச்சம் கொள்வர். இந்த வகையில் சந்திரிகாவிற்குச் சார்பான அழுத்தங்கள் மகிந்த ராஜபக்சவிற்கு இருக்கப்போவதில்லை.

சந்திரிகா கட்சித் தலைவியாகவும், ஆட்சித் தலைவியாகவும் இருந்த காலப் பகுதியில் மகிந்த ராஜபக்ச ஐக்கிய தேசியக் கட்சியின் ஒப்பந்தக்காரர் போல் செயற்பட, மகிந்த ராஜபக்ச சனாதிபதி வேட்பாளராக இருந்த காலப்பகுதியில் சந்திரிகா ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் போல் செயற்பட்டார்.

அன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சேன நாயக்க குடும்பம் கட்சியில் இருந்து கொண்டே தன்னை வெளியேற்றத் தனது பரமவிரோதி களுடன் இணைந்து செயற்படுவதாகக் கூறி அக்குடும்ப ஆதிக்கத்தைக் கட்சியில் இல்லாது நீக்கினார்.

சேனநாயக்க குடும்பத்தை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கியதைவிட இன்று பண்டாரநாயக்க குடும்பத்தைக் கட்சியில் இருந்து நீக்குவது ராஜபக்சவிற்கு பெரும் சிரமமான விடயமாகவே இருக்கும். ராஜபக்சவிற்கு சந்திரிகா குறித்த அச்சம் நீங்க வேண்டுமானால், சந்திரிகா தான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று கூறுவதுடன் மட்டும் நில்லாது,

லண்டனிலேயே தங்கிவிட வேண்டும் அது நடவாத வரையில் சந்திரிகா குறித்த அச்சம் மகிந்த ராஜபக்சவை நிம்மதியற்ற தூக்கம் ஒன்றின் வாயிலாகவே காலத்தைக் கழிக்கச் செய்யும். நிம்மதியான அரசியலொன்றிற்காக சந்திரிகாவின் முறைகேடான காணிக் கொள்வனவு தொடர்பான நீதிமன்ற வழக்கில், சந்திரிகா குற்றவாளியாக்கப்படும் போது அவரது குடியியல் உரிமையைப் பறிப்பதற்கான உத்தி ஒன்றையும் ராஜபக்ச மேற்கொள்ளலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் ராஜபக்சவினால் நிறை வேற்ற முடியாது தோல்வி கண்டு பாராளுமன்றத் தேர்தல் ஒன்றின் போதும் பொதுசன ஐக்கிய முன்னணி தோல்வி காணும் பட்சத்தில் மீண்டும் சந்திரிகா அரசியலில் பிரகாசிப்பதை ராஜபக்சவினால் தடுக்க முடியாது போய்விடும்.

அத்தகைய வேளை ஒன்றில் பண்டாரநாயக்க குடும்பத்தினரின் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீதான செல்வாக்கை அழிக்க முற்பட்ட குற்றமொன்றின் தண்டனையை மகிந்த ராஜபக்சவிற்குச் சம்பந்தப்பட்ட தரப்பினர் வழங்க முற்படுவார்களா? என்பதை உறுதியாக எதுவும் கூறமுடியாது.

சந்திரிகா ராஜபக்ச மீது வெளிப்படுத்தும் கசப்புணர்வுகளை தனக்கெதிரானதெனக் கொள்ளாது தேசத்துக் கெதிரானதெனக் காட்டி அவர் மீது சிங்கள மக்களை தூண்ட முயலும் இக்கால கட்டத்தில் பொருண்மியத்தால் நொந்த இம் மக்கள் வன்னியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலொன்றின் போது ஏற்படப்போகும் இழப்பிற்கு இதே சிங்கள மக்களினால் மகிந்த ராஜபக்சவுக்கு சந்திரிகா காய்ச்சலைவிட மீளமுடியாத நோயொன்றுக்கான வழி ஒன்றையே காட்டக்கூடிய நிலை ஏற்படும்.

- க.கிருஸ்ணபிள்ளை BA(cey)

http://www.tamilskynews.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.