Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமேஸ்வரம் போராட்டம்... அனல் பறந்த பேச்சுக்கள்... : குமுதம்,

Featured Replies

Rameshwaram-protest1.jpg

இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்த் திரையுலக தமிழ் இன உணர்வுக்குழு சார்பில் ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட பேரணியும் பொதுக்கூட்டமும் 19ம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், துணைத்தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜா மைதீன், இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், விஜய டி. ராஜேந்தர், கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.கே.செல்வமணி, வி.சேகர், பாலா, சேரன், அமீர், முருகதாஸ், சீமான், பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன், வசந்த், நடிகர்கள் பார்த்திபன், வடிவேலு, ஜீவா, லிவிங்ஸ்டன், கருணாஸ், மன்சூர் அலிகான், இளவரசு, படத்தயாரிப்பாளர்கள் தாணு, தியாகராஜன், தேனப்பன், ராமநாதன், குஞ்சுமோன், கவிஞர் வைரமுத்து உள்பட திரைப்படத்துறையின் பல்வேறு சங்கத்தினரும் கலந்து கொண்டனர். பேரணியைத் தொடர்ந்து ராமேஸ்வரம் கிழக்காடு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திரைப்படத்துறையினர் ஆவேசமாக உரையாற்றினர். பலரது பேச்சில் அனல் வீசியது. அந்தப் பேச்சுக்களின் சுருக்கம் இதோ....

கவிஞர் வைரமுத்து:

இலங்கை, தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்தமான மண். கடைசித்தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கைத் தமிழர்களை அனாதையாக விட மாட்டோம். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெற்றி பெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார் ராஜபக்ஷே. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலை, வாக்குகளாக விழவேண்டுமா? தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் ஐ.நா. தனது கிளைகளைத் தொடங்க வேண்டும்.

ராம. நாராயணன்:

இலங்கைத்தமிழர்களுக்கும் எங்களுக்கும் உள்ளது அண்ணன்- தம்பி உறவு. இது உணர்ச்சி உள்ளவர்களின் உரிமை காக்கும் போராட்டம். நல்லவன் போல நடிக்கும் ராஜபக்ஷேயின் நடடிவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம். பொங்கி எழுவோம்.

விஜய டி.ராஜேந்தர்:

இன உணர்வு என்ற ஆயுதத்தை கையில் எடுத்து தமிழர்களை அழிக்கும் ராஜபக்ஷேவை நாம் வீழ்த்த வேண்டும். தமிழினமே ராமேஸ்வரர் கடல் அலையாய் எழும்பினால் தாங்காது உங்கள் பூமி. இன்று எம்.பி.க்கள் ராஜினாமா என்றதும் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்கிறார். நாங்கள் மீனுக்கு போடுவோம் வலை. உத்தரவு கொடுத்தால் எதிரிகளை செய்வோம் கொலை. தமிழன் தன் நிலை உணரவேண்டும்.

கே.எஸ்.ரவிக்குமார்:

தமிழர்களை காயப்படுத்தும் அரசு நீடிக்காது. எதிரிகளே உங்களுக்கு ஓர் எச்சரிக்கை. தமிழர்களுக்கு தொடர்ந்து விபரீதம் நடந்தால் தமிழகமே ராமேஸ்வரத்தின் கரையை நிச்சயம் தாண்டும்.

சேரன்:

ஒரு தீவில் 44 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்து வைத்துக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களை விடுவிக்க இந்திய அரசு தனது ராணுவத்தையே அனுப்பி வைக்கிறது. ஆனால் நமது பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் பிரச்னையையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க அரசு மறுக்கிறது. நம்முடைய குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒவ்வொரு நடிகனும் தங்களது ரசிகர் மன்றம் மூலம் ஈழத்தில் தமிழர்கள் படும் துன்பங்களை ஐ.நா.சபைக்கு தந்தியாக அனுப்ப முன்வரவேண்டும்.

சீமான்:

பர்மாவில் தமிழர்களை அடித்தார்கள். பம்பாயில் தமிழர்களை அடித்தார்கள். மலேசியாவில் தமிழர்களை அடித்தார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் அடித்தார்கள். ஆனால் நம்மை அடித்தவர்களை திருப்பி அடித்த ஒரே இடம் தமிழ் ஈழ மண்தான். இதை எப்படி நாம் வன்முறை என்று சொல்ல முடியும்? ஈழத்தமிழனை வேரோடு அழித்து விடலாம் என இலங்கை அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. தனி ஈழம் நமக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. அதற்கு சர்வதேச அங்கீகாரம் மட்டுமே கிடைக்க வேண்டும். அந்த அங்கீகாரம் கிடைக்க உலகில் பரந்து விரிந்துள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். புரட்சி வெல்லும். தமிழ் ஈழம் வெல்லும்.

அமீர்:

இலங்கைத் தமிழர்களின் பிரச்னையை இந்துக்களின் பிரச்னை, முஸ்லிம்களின் பிரச்னை, கிறிஸ்தவர்களின் பிரச்னை என்று பேதம் பிரித்து பார்க்காமல் அனைவரும் ஆதரவாக வரவேண்டும். நமது எதிரி நாடான பாகிஸ்தான் கூட நமது மீனவர்களை சுட்டுக்கொல்வது இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் அங்கு வாழ்ந்த ஒரு லட்சம் தமிழர்களையும் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களையும் கொன்று உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 4எம்.பிக்கள் இருந்தாலும் மத்திய அரசுக்கு அவர்கள் வேண்டும். ஆனால் தமிழர்கள் வேண்டாமா? ஒரு பிரச்னை தொடர்பாக கூட்டப்படும் கூட்டத்துக்கு கூட அழைத்தாலும் சிலர் வருவது இல்லை. ஒரு மாநில முதலமைச்சர் அழைத்தாலும் கூட அவர்கள் ஏற்பது இல்லை.

இலங்கையை இந்தியாவுடன் சேர்ப்பதாக அரசு அறிவித்தால்தான் உலகம் இப்பிரச்னையில் தலையிடும். அதன்பின்னரே உரிய தீர்வு கிடைக்கும்.

வடிவேலு:

தமிழ் ஈழத்தினர் படும் துயரத்தை இன்டர்நெட்டில் பார்த்தேன். அதில் பெண்களின் மார்பகங்களை அறுத்துக் கொலை செய்கிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொல்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். ஈழத்தில் மடிந்த தமிழர்கள் புதைக்கபடவில்லை. விதைக்கட்டு இருக்கிறார்கள். அவர்கள் புழுவாகி, பூச்சியாகி, புலியாகி உருவாகுவார்கள்.

பாரதிராஜா:

நாங்கள் ஏன் ராமேசுவரத்திற்கு வந்து போராட்டம் நடத்துகிறோம்?. இது ஈழத்தமிழர்கள் அகதிகளாக வந்து கால்பதித்த இடம். கண்ணீர் விட்ட இடம். எனவேதான் இங்கே வந்தோம். நமக்கு தமிழ் ஈழம் வந்து விட்டது. அதை நான் கண்கூடாக பார்த்துள்ளேன். ஈழத்தில் தமிழ் பலகைகள் மட்டுமே இருக்கும். ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட இருக்காது. அங்கு நடுஇரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து செல்ல முடியும். அங்கு மதுக்கடைகள் கிடையாது. நிர்வாகத்தை ஒழுக்கத்தோடு செய்து வருகிறார்கள்.

முன்னதாக இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை பாரதிராஜா வாசித்தார். அதில் ஈழத்தில் நடந்து வரும் படுகொலைகளை இந்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், ராமேசுவரத்தில் தொடங்குகின்ற திரையுலக இன உணர்வுக்குழுவின் போராட்டம் ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைக்கும் வரை தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.