Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழனை அடிமைப் படுத்துகிறான் சிங்களன் இதெல்லாம் நடப்பது தமிழ்நாட்டில் தான்

Featured Replies

தமிழனை அடிமைப் படுத்துகிறான் சிங்களன் , தமிழனை அடக்கி ஆள்கிறான், தன்னால் அடிமைப்படுத்தப்படும் தமிழர்களை இன வெறியுடன் பல கொடுமைகளுக்கு ஆளாக்குகிறான் - இதெல்லாம் நடப்பது இலங்கையில் அல்ல , மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் இதெல்லாம் நடப்பது தமிழ்நாட்டில் தான் .

நம்பமுடியவில்லை அல்லவா? , ஆனால் நடப்பது உணமைதான் . நடக்கும் சம்பவங்களின் விபரீதங்களை ஒத்துக்கொண்டு, உண்மையை உணர்ந்து இனிமேலாவது விழித்துக் கொள்ளாவிட்டால் நிலைமை என்னவாகும் என எண்ணிப் பார்க்க முடியவில்லை.

தமிழகத்திலேயே மிக அதிகமாக அந்நிய செலாவணி ஈட்டும் நகரம்- இந்தியாவின் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் நகரம்- தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம் - என்றெல்லாம் நாம் பெருமையோடு அழைக்கும் திருப்பூரில் தான் இந்த விபரீதம் நிகழ்கிறது.

திருப்பூரின் பின்னலாடை நிறுவனங்களில் பெரும்பாலான நிறுவனங்களின் உயர்பதவிகளைப் பெற்றுள்ள சிங்களர்கள்தான் , அங்கே அவர்களுக்கு கீழே வேலை பார்க்கக் கூடிய அப்பாவி தமிழர்களை கொடுமைப் படுத்தும் செயல்களை அரங்கேற்றிக் கொண்டு உள்ளனர் .

திருப்பூரின் பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தமிழர்களை அடக்கி , அதிகபட்ச வேலைகள் வாங்குவதில் சிங்களர்கள்தான் சிறந்து விளங்குவதாக கூறி அவர்களை உயர்பதவிகளில் அமர்த்தி உள்ளனர் அந்த ஆலைகளின் முதலாளிகள்.

திருப்பூரின் பெரும்பாலான ஆலைகளின் அதிபர்கள் வட இந்தியர்களே. அந்த வடநாட்டு முதலாளிகள் இங்கே தொழிலாளிகளாக உள்ள தமிழர்களை அடிமைப் படுத்த சிங்களர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதே வேதனையான உண்மையாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எண்ணில்லா துயரங்கள் கொடுத்து அவர்களை அடிமைப் படுத்த முயன்று வரும் சிங்களர்கள், நமது தமிழ்நாட்டிலேயே வந்து குடியேறி உயர்பதவிகளைப் பெற்று இங்கேயும் தமிழர்களை அடக்கி ஆளத் தொடங்கி உள்ளது, தமிழர்களாகிய நாமெல்லாம் எந்த அளவிற்கு ஏமாளிகளாக உள்ளோம் என்பதை உணர்த்தவில்லையா?

வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழ்நாடு என்று யாரோ கூறினாலும் கூறினார்கள் , வருவோர் போவோர் எல்லாம் தமிழனை அடக்கி ஆண்டு கொண்டுதான் உள்ளனர் . எத்தனை நாளைக்குத்தான் தமிழன் ஏமாளியாக இருப்பானோ தெரியவில்லை.

உங்களுக்குத் தெரியுமா? நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது போல தமிழ்நாட்டில் நடைபெறும் தொழில்களுக்கு எல்லாம் தமிழர்கள் முதலாளிகள் அல்ல. தமிழகத்தில் நடைபெறும் பெரும்பாலான தொழில்கள் தமிழர் அல்லாதவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

திருப்பூரில் பெரும்பாலான பின்னலாடை ஆலைகள் வடமாநிலத்தவருக்கு சொந்தமானவையே , தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலும் நடத்தப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகள், ஜவுளிக் கடைகள், தங்க நகைக் கடைகள் போன்ற வணிக நிறுவனங்களில் பெரும்பாலானவை வட மாநிலத்தவர்களுடையது, தமிழகத்தில் இயங்கிவரும் பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் வெளிநாட்டவராலும் , வெளி மாநிலத்தவராலும் தான் நடத்தப்படுகின்றன -என்பதெல்லாம் சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா ?

காலம் காலமாகவே வந்து குடியேறியவர்களை முதலாளிகளாக்கி விட்டு தமிழன் என்றுமே அடிமையாக இருப்பது பெருமைக்கு உரிய செயலா?

மென்பொருள் துறையில் தமிழகம் வளர்வதாகப் பெருமைப் படுகிறோமே, எத்தனை மென்பொருள் நிறுவனங்கள் தமிழர்களுக்கு உரிமையானவை என்று தமிழர்கள் என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா?

மென்பொருள் நிறுவன வெளிநாட்டு முதலாளிகள் அள்ளித்தரும் ஊதியத்தைக் கண்டு புளகாங்கிதம் அடையும் தமிழர்கள், அந்த முதலாளிகள் தங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் அளவில் பத்தில் ஒரு பகுதியைத்தான் தமிழ் ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்குகின்றனர் என்று எண்ணிப் பார்ப்பதில்லையே ஏன் ?

அதாவது தமிழர்களின் உழைப்பில் கோடிகளை ஈட்டும் முதலாளிகள் சில ஆயிரங்களைத்தான் ஊதியமாகத் தருகின்றனர் என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று அல்லவா ?

படித்தவர்கள் வேலை பார்க்கும் மென்பொருள் துறையிலேயே இந்த நிலை என்றால் , படிக்காத பாமர மக்கள் வேலைபார்க்கும் மற்ற துறைகளைப் பற்றி சொல்லவே தேவை இல்லை அல்லவா?

மும்பையில் தமிழன் அடிமைப் படுத்தப் படுகிறான் , தாக்கப்படுகிறான் -

இலங்கையில் தமிழன் அடிமைப் படுத்தப்படுகிறான் , தாக்கப்படுகிறான் -

மலேசியாவில் தமிழன் அடிமைப் படுத்தப் படுகிறான் , தாக்கப்படுகிறான் -

என்ற செய்திகளை எல்லாம் கேட்டு அவர்களுக்காக வேதனைப் பட்டுவரும் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே மற்றோரால் சத்தமில்லாமல் அடிமைப் படுத்தப்பட்டு வருவதை உணராமல் இருப்பது ஏனோ?

தமிழர்கள் இதே போல விழிப்புணர்வு இல்லாத ஏமாளிகளாகவே தொடர்ந்து இருந்து வந்தால் பின்னர் தமிழ்நாட்டிலேயே அடிமைப் படுத்தப் பட்டு, கொடுமைகளுக்கு ஆளாகி, தங்களின் உரிமைகளைப் பெற போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் தேவையில்லை.

தமிழர்கள் தங்கள் அடிமைப் புத்தியை விட்டு விட்டு, பெருமளவில் சொந்தமாகத் தொழில்கள் தொடங்கி தாங்கள் முதலாளிகளாக மாறி, மற்ற மாநிலத்தவர்கள் தமிழர்களிடம் வேலை பார்க்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

தமிழர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தமிழகத்தை அடிமையாகாமல் காப்பாற்ற தமிழ்நாட்டில் இன்னொரு பெரியார் பிறந்து வந்தால்தான் முடியும், அல்லது ராஜ்தாக்ரே போன்ற தாய் மண்ணின் உரிமைகளை நிலைநாட்டப் போராடும் அதிரடித் தலைவர்களாவது வேண்டும் அல்லவா?

மூலம்: அறிவிலியின் ப்ளொக். மற்றும் நக்கீரன் ஜூன்18 மற்றும் ஜூலை12 இதழ்கள்.

தமிழ்நாடு.கொமில் இருந்து இதை இனைத்தேன்

எல்லாத்திற்கும் முதலில் தமிழனைத்தமிழன் இனம் கண்டு ஒற்றுமை ஏற்படவேண்டும்..

நாம் தமிழர் எம்மிடையில் ஒரு அன்னியன் பிரிவை உண்டாக்கப்பார்க்கிறான் என்ற ஒரு விழிப்புணர்ச்சி எப்போது இருக்கவேண்டும். அறிவு பூர்வமாக சிந்தித்து எம்மக்கள் ஒருவரை ஒருவர் அன்பாக பேசி பழகவேண்டும். தேவை அறிந்து உதவி செய்யப்பழக வேண்டும்..

அதாவது எம்தமிழ்மக்கள் மனதளவில் செயலளவில் ஒருவரை ஒருவர் புரிந்து பண்பாக பேசி நடந்தால் எவ்வின அந் நியணும் எம்மினத்திற்குள் இலகுவில் புகமுடியாது..

இஸ்ரேலிய மக்கள் இவ்விடையத்தில் ஒற்றுமை, உதவுதல் முன்னணியில் நிற்கிறார்கள்..

மலையாளிகளும் தங்கள் மக்களுக்கு உதவி ஒற்றுமையில் சிறந்து விளங்குகிறார்கள்...

இப்படியே உதாரணதிற்கு பல இனமக்களை உதாரணத்திற்கு கூறலாம்..

எதிர்காலத்தில் இன ஒற்றுமை எம்மக்களின் சிந்தனை செயல்மாற்றங்களில் தங்கியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.