Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குவைத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்கள இனவெறி அரசின் கொலைவெறி தாக்குதல்களைக் கண்டித்தும் தமிழர் சமூகநீதி பேரவை சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

Featured Replies

குவைத்தில் இயங்கி வரும் பல்வேறு தமிழ் அமைப்புக்களும் இணைந்து இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்கள் இனவெறி அரசு நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டனக் கூட்டம் "இலங்கை தமிழ் தியாகிகள் அரங்கில்" நடந்தது.

இக்கூட்டத்திற்கு குவைத் இந்திய யூனியன் முசுலீம் லீக்கின் அமைப்பாளர் மருத்துவர் அன்வர் பாட்சா அவர்கள் தலைமையேற்க தமிழர் சமூகநீதி பேரவையின் பொதுச் செயலாளர் இரா.க.சரவணன் விடுதலைச் சிறுத்தைகளின் இணைச் செயலாளர்

அழ.பாண்டிச்செல்வன் தமிழோசை கவிஞர் மன்றத்தின் செயலாளர் இராவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலங்கைப் போரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கும் தமிழ் தியாகிகளுக்கும் அஞ்சலி தெரிவித்து ஒரு நிமிடம் மௌனம் அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழர் சமூகநீதி பேரவையின் தலைவர் தமிழ்நாடன் அவர்கள் தொடக்க உரையாற்றி கண்டனக் கூட்டத்தை தொடங்கி வைத்ததோடு நிகழ்வினை தொகுத்து வழங்கினார்கள்.

அடுத்ததாக பல்வேறு அமைப்புக்களின் நிர்வாகிகள் தங்களது கண்டன உரையை பதிவு செய்தார்கள். முதலாவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் குவைத் அமைப்பாளர் தோழர். முகமது இக்பால் அவர்களும் அடுத்ததாக பெரியார் நூலகம் சார்பில் அதன் அமைப்பாளர் தோழர்.செல்லப்பெருமாள் அவர்களும் தொடர்ந்து பெரியாரியலாளர் தோழர்.வடலூர் ஆறுமுகம் அவர்களும் கண்டன உரையாற்றினர்.

அடுத்ததாக முன்னிலை வகித்த விடுதலை சிறுத்தைகளின் இணைச் செயலாளர் தோழர்.அழ.பாண்டிச் செல்வம் அவர்கள் கண்டண உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து பாலைக்குயில்கள் கவிஞர் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் வளநாடன் அவர்களும் தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் பொதுச் செயலாளர் தோழர். இரா.க.சரவணன் அவர்களும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் அதன் பொருளாளர் தோழர். அறிவழகன் அவர்களும் தமிழோசை கவிஞர் மன்றத்தின் செயலாளர் இராவணன் அவர்களும் தமிழ் இசுலாமிய மாணவர் பேரவையின் தலைவர் க.இரகமத்துல்லா அவர்களும் கண்டன உரையாற்றினர்.

அடுத்ததாக இக்கண்டனக் கூட்டத்தின் தீர்மானங்களை தோழர்.க.இரகமத்துல்லா அவர்கள் முன்மொழிந்தார்கள்.

இதைத் தொடர்ந்து திட்டமிட்ட நிகழ்ச்சிகள் முடிவடைந்து தலைமையுரை தொடங்க வேண்டிய நிலையில் கூட்டத்தில் பங்கு கொண்ட தோழர்கள் பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய விழைந்ததால் கண்டன உரைகள் தொடர்ந்தன.

முதலாவதாக தோழர்.பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் தனது கண்டன உரையை பதிவு செய்தார்கள். அடுத்ததாக தோழர்.நெல்லை முத்துவேல் அவர்கள் தனது கண்டனக் கவிதை வாசித்தார்கள்.

அதையடுத்து சிங்கள இனவெறி அரசிற்கு இந்தியா அளித்து வரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டுமெனவும் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்த ஆவண செய்ய வேண்டுமெனவும் கோரும் "இந்திய அரசுக்கு குவைத் வாழ் தமிழ் மக்கள் வேண்டுகோள்" விடுக்கும் கையெழுத்து இயக்கத்தை தோழர்.இராசு பூபதி அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தமிழோசை கவிஞர் மன்றத்தின் தலைவர் தோழர். சாதிக் பாட்சா அவர்களும் தமிழர் சமூகநீதி பேரவையின் து.தலைவர் வயி.பி.மதியழகன் அவர்களும் தங்களது கண்டன உரையினை நிகழ்த்த தோழர்.சிவமணி அவர்கள் தனது கண்டனக் கவிதையை வாசித்தார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக கண்டனக் கூட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டத் தலைவர் மருத்துவர் அன்வர் பாட்சா அவர்கள் தனது தலைமையுரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் போது ஈழத் தமிழர்கள் போரினால் பாதிக்கப்படதை விளக்கும் படங்கள் அரங்கத்தில் ஒட்டப்பட்டிருந்தது. அதே போன்று போரினால் ஏற்பட்ட பதிப்புக்களை விளக்கும் குறுந்தகடு ஒன்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்றைய கண்டனக் கூட்டத்தின் தீர்மாங்களும் கையெழுத்து இயக்க படிகளும் அ.நா சபைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தமிழக அரசு ஊடகங்கள் பிற அனைத்துலக அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்போடு கூட்டம் நிறைவுற்றது.

இக்கூட்டமனது குவைத்தில் இயங்கும் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் முதன் முறையாக ஒன்றிணைந்து நடத்தினர். அவ்வமைப்பினரும் பொது மக்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அனைவரும் ஒருமித்த இன உணர்வோடு கலந்து கொண்டதோடு சிங்கள இனவெறி தாக்குதல்களை கண்டித்ததோடு இந்தியா செய்து வரும் அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டுமெனவும் தமிழகத்தில் அரசியல் கட்சியினரும் பிற இயங்கங்களும் ஒத்தக் கருத்தோடு ஈழப் போராட்டம் வெற்றி பெரும் வரை தொடர்ந்து போராடி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

தீர்மானங்கள்:

1. இலங்கையில் வாழும் அப்பாவித் தமிழர்கள் மீது தொடர்ந்து கண்மூடித்தனமான இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருவதோடு உணவுப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் அளிக்க மறுப்பதோடு செஞ்சிலுவை சங்கம் அய்க்கியநாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புக்கள் பிற நாடுகளின் உதவியையும் கூட தமிழர்கள் பகுதிக்கு அனுப்பாமல் தங்கள் நாட்டின் குடிமக்களையே அழித்து வரும் "சிங்கள இன வெறி" அரசை வன்மையாக கண்டிப்பதோடு அவர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வலியுறுத்துகிறோம். தமிழர்கள் பகுதியில் வாழ்ந்துவரும் அனைத்து தமிழர்களுக்கும் தேவையான உணவு பொருட்களை அனுப்பியும் மருத்துவ உதவிகளை செய்தும் அவர்கள் உயிர்வாழ தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்துகிறோம்.

2. 1983ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான எழுச்சியைப் போன்று தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுவரும் எழுச்சிக்கு காரண்மான தமிழக அரசியல் கட்சிகள்இ இயக்கங்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு தங்களது ஆதரவினை தெரிவித்து தங்கள் இன உணர்வினை வெளிப்படுத்தி வரும் வழக்குறைஞர்கள்இ மாணவர்கள்இ திரைத்துறையினர் மருத்துவர்கள் வணிகர்கள் பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் எங்களின் பாராட்டுக்களையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

3. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தொடக்கம் முதலே தமிழ்ர்களுக்கு எதிராகவும் இலங்கை சிங்கள இனவெறி அரசிற்கு ஆதரவாகவும் பேசியும் செயல்பட்டும் வருகிற பார்ப்பன கும்பல்களான இந்து ராம் செயலலிதா துக்ளக் சோ சுப்பிரமணியசாமி ஆகியோரை கண்டிப்பதோடு ஈழத்தமிழர்களின் போராட்டங்களை இழித்தும் கொச்சைப்படுத்தியும் பேசி வருகிற பார்ப்பன அடிவருடி தமிழர்கள் இந்தியர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

4. அண்டை நாடுகளில் நடைபெறும் உரிமை மீறல்கள் இராணுவ நடவடிக்கைகள் பிற நாடுகளுடணான உறவுகள் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய கடமையும் இந்திய துணைக்கண்ட பிரதேசத்தில் அமைதியை நிலைநிறுத்த வேண்டிய கடமையும் இந்தியத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் அமைதியான வாழ்வும் மனித உரிமைகள் காக்கப்பட வேண்டிய கடமையும் இந்தியவிற்கு உண்டு. எனவே இதற்கான முன்முயற்சியினை மேற்கொண்டு இலங்கையில் அமைதி நிலவவும் இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும் பாதுகப்புடனும் வாழ வழிசெய்யுமாறு இந்திய அரசாங்கத்தினை இத்தீர்மானம் கேட்டுக் கொள்வதோடு இலங்கைக்கு அளித்துவரும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்தக் கோருகிறோம்.

5. இந்திய இலங்கை இடையிலான கடற்பகுதியில் மீன்பிடித்துவரும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கொலை செய்வதும் கைது செய்வதையும் இலங்கை நிறுத்த வேண்டும். இம்மீனவர்கள் மீது இலங்கை அரசு நடத்தி வரும் அத்துமீறல்களை தடுத்துப்பதோடு இவர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து இக்கடற்பகுதிகளில் தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய ஒப்பத்தங்களை இலங்கை அரசுடன் ஏற்படுத்த வேண்டுமென்றும் இந்திய அரசினை கேட்டுக்கொள்கிறோம்.

6. இந்திய அரசு அய்க்கிய நாடுகள் சபை செஞ்சிலுவை சங்கம் பிற உதவி செய்யும் நாடுகள் ஆகிய அனைவரும் ஒருமித்த குரலில் தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோருவதோடு இலங்கைக்கு அளித்துவரும் அனைத்து உதவிகளையும் நிறுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

படங்கள் இணைப்பு

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

பாலைவனத்திலும் எழுச்சி மகிழ்ச்சிக்குரியது. பல சிரமங்களிற்கு மத்தியிலும் இவ்வாறான முன்னெடுப்புகள் வெற்றிக்கான பாதையை திறந்து வைக்கும். நன்றி நன்றி நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.