Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராஜீனாமா நாடகத்தை ஒட்டி புரிந்ததும், புரியாததும். - சுடர் ஒளி ஆசிரியர் தலையங்கம்

Featured Replies

ஈழத்தமிழரின் இனப்பிரச்சினையை ஒட்டிய விடயத்தில்;, காலத்தை இழுத்தடித்துத் தனது காரியத்தைச் சாமாத்தியமாக நிiவேற்றும் கொழும்பின் இராஜதந்திரத்திற்கு மீண்டும் ஒருதடவை பலியாகியிருக்கின்றது புதுடில்லி.

இம் முறை அதனோடு சேர்ந்து சென்னையும் கட்டையில் ஏறியிருப்பதுதான் புதிய விடயம்.

ஈழத்தமிழருக்கு நியாயம் வேண்டி அவர்களின் பேரவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்துடன் தமிழகத்தி;ல் 'உரு'க் கொண்டு எழுந்த உணர்வெழுச்சியை கிளாச்சியை இவ்வாறு சுலபமாக ஒரு நாளில், நீர்த்துப் போகப் ண்ணிய கொழும்பின் 'இராஜதந்திரம்' வியப்புக்குரியதே.

எனினும், புதுடில்லியிலும் சென்னையிலும் அரசியல் சுயலாபக் கும்பல்களின் 'வெட்கக் கேடான' முறையில் அமையும் கையாள்கைகளுக்கு இந்த விவகாரம் உட்பட்டது என்பதால் இப்படியெல்லாம் தான் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு பல தரப்பிலும் இருந்து வந்ததே என்பதும் மறைக்கக்கூடியதல்ல.

கடந்த முப்பத்தியைந்து ஆண்டுகாளாக இலங்கை விவகாரத்தை புதுடில்லியும் சென்னையும் கையாண்டு வருகின்ற முறைமையை விளங்கப்படுத்துவதற்கு சிறிய கதை ஒன்றை வாசகர்கர் ஒருவர் ஆங்கில நாளிதழில் கருதாகக் குறிப்பிட்டிருந்தார்.

காது கேட்காத இருவர் வழியில் எதிரேதிரே சந்தித்துக் கொண்டார்களாம். 'குளிக்கப் போகின்றீர்களா?' என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டார். மற்றவர் அதற்கு அவர் 'இல்லை நான் குளிக்கப் போகின்றேன் '. என்று பதிலளி;த்தார். அதற்கு முதலாமவர்"அப்படியா, நான் என்னவோ நீங்கள் குளிக்கப் போகின்றீர்களாக்கும் என்றல்லவா நினைத்தேன்!' என கூறினாராம்.

இவ்வாறு ஒருவர் பேசுவதை மற்றவர் புரியாமல் உரையாடுகின்ற செவிடர்களின் பேச்சுப் போல இருக்கின்றது இலங்கை இனப்பிரச்சனை விடயம் தொடர்பான கொழும்பு - புதுடில்லி பேச்சுகளும் அதையொட்டிய இழுபறிகளும்.

'இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கிடையாது. அரசியல் தீர்வே ஒரே வழி அதை முன்வையுங்கள் !' என்று இந்தியா படித்துப் படித்துக் கூறுவதும் -

ஆமாம். அரசியல் தீர்வே, வழி அதற்கான திட்டத்தை வைப்போம்!' என்று புதுடில்லிக்குக் கூறியவாறே, அமைதித் தீர்வு எத்தனத்தை அடியோடு கைவி;ட்டு விட்டு புலி எதிர்ப்பு யுத்தத்தை முழுக் குரூர- கொடூர முனைப்பில் கொழும்பு முன்னெடுப்பதும்

'முதலில் புலிகளைச் சமஹாரம் செய்தல், பின்னர் தீர்வு பற்றிப் பார்க்கலாம்.' என்று கொழும்பு அரசு தென்னிலங்கைக்குப் பகிரங்கமாகக் கூறியபடி தனது யுத்தத் திட்டத்தை வெளிவெளியாகத் தொடர்வதுமாகக் கட்டவிழும் விடயங்களைப் பார்ககும் போது கொழும்பு புதுடில்லப் பேச்சும், கருத்துப் பரிமாற்றமும், தொடர்பாடல்களும் இரு செவிடர்கள் இடையே நடப்பவை போலத்தான் தோன்றுகின்றது.

பேச்சு மூலாமான அமைதித் தீர்வை புதுடில்லி வற்புறுத்துவதும், 'ஆமாம்' என்று தலையாட்டியபடி தனது யுத்த முனைப்பைக் கொழும்பு தொடர்வதும், அதைத் தடுக்கத் திரணியில்லாத இப்பிரந்திய வல்லாதிக்க(?) நாடான இந்தியா, அந்தப் போர் முனைப்பபுப் போக்குக்கு இராணுவ ரீதிலான உதவிகளை எல்லாம் மறுபக்கத்தில் வாரி வழங்கிக் கொண்டு வாளாவிருப்பதுமாக இடம் பெறுகின்ற சம்பவங்களின் சூட்சுமமும் அதற்குள் புதைந்து கிடக்கும் அர்த்தங்களுயும் 'காது கேட்காத செவிடர்கள் போல' நடிக்கின்ற புதுடில்லி, சென்னை அரசியல் தலைவர்களுக்கு விளங்குகின்றதோ என்னவோ தெரியவில்ல. ஆனால் இப்பிரச்சினையில் அல்லல்படும், அவலப்படுகின்ற அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு நிச்சயம் புரியவில்ல என்பது தான் நிஜம்.

இலங்கையில் கொழுந்துவிட்டெரியும் இனப்பிரச்சினைக்காகத் தமிழகத்தில் கிளாந்தெழுந்த உணர்வெழுச்சியை வெறும் எண்ணூறு தொன் நிவாரணப் பொருட்களை வன்னி மக்களுக்கு இலங்கை அரசு ஊடாக அனுப்புவது என்ற தீர்மானத்தின் மூலம் அடக்கி விடத் தெரிந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் தந்திரத்தின் ஆழமும் ஈழத்தமிழர்களுக்குப் புரியவேயில்ல.

ஈழத்தின் போரை நிறுத்தச் செய்வதற்குக் காத்திரமான நவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டுவார காலத்துக்குள் தமிழக எம.பிக்கள் அனைவரும் கூண்டோடு இராஜினநாமா என்ற அறிக்கை அறிவிப்பு வெளியான பின்னர், அந்தக் காலக்கெடு முடிவடைய இரண்டு நாட்கள் இருக்கையிலேயே, புதுடில்லி அரசுத் தலைமையின் வெறும் வாய்ச்சொல் செய்தி ஒன்றை வைத்துக் கொண்டே, இந்த முன்னைய அறிவிப்பைக் குப்பையில் தூக்கி எறியும் விதத்தில் 'இராஜினாமா அறிவிப்பு நாடகத்தின்' வாபஸ் நாடகம் அரங்கேறியது எங்ஙனம் என்பது ஈழத் தமிழர்களுக்குப் புரியவில்லை.

இவ்வாறு புதுடில்லி, சென்னை, கொழும்பு ஆகிய முத்தரப்புகளும் கூட்டுச் சேர்ந்து அரங்கேற்றிய இந்த நாடகத்தை ஒட்டி ஈழத்தமிழர்களுக்குப் பல விடயங்கள் புரியாமல் போனாலும் ஒரேயொரு விடயம் மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியாதகாவிருந்தது.

அது நம் கையே நமக்கு உதவி. பிறரை நம்பிப் புண்ணியமில்லை என்பதுதான்.

நன்றி : சுடர் ஒளி

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு நியாயம் வேண்டி அவர்களின் பேரவலத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் எண்ணத்துடன் தமிழகத்தி;ல் 'உரு'க் கொண்டு எழுந்த உணர்வெழுச்சியை கிளாச்சியை இவ்வாறு சுலபமாக ஒரு நாளில், நீர்த்துப் போகப் ண்ணிய கொழும்பின் 'இராஜதந்திரம்' வியப்புக்குரியதே.

கொழும்பு ராஜதந்திரத்தில் கலைஞரும் , மண்டியிட்டது தான் வேதனை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.