Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: மாணவன் படுகொலை

Featured Replies

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: மாணவன் படுகொலை

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வள்ளிபுனத்தில் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் மாணவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதி வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு நுழைந்த சிறிலங்கா வான்படையின் இரண்டு மிக்-27 ரக வானூர்திகள் வள்ளிபுனம் மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இதில் மாணவன் ஒருவர் உடல் சிதறிய நிலையில் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வராசா சதீஸ்கரன் (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவியும் சிறிலங்கா வல்வளைப்பு படையினரால் பூநகரியில் இருந்து இடம்பெயர்ந்து வள்ளிபுனத்தில் வசித்து வந்தவருமான பத்மநாதன் நிவேதினி (வயது 17) என்பவர் காயமடைந்துள்ளார்.

பொதுமக்களின் 10 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

இடம்பெயர்ந்து மக்கள் செறிவாக வாழும் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் திட்டமிட்ட வகையில் இத்தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

www.puthinam.com

இதெல்லாம் உலகத்தின் கண்ணுக்கு தெரியாது. கொழும்பில் குண்டு வெடித்தால் வந்துவிடுவார்கள் அறிக்கைகளோடு.

பொதுமக்கள் இலக்குகள் மீது தொடரும் சிறிலங்கா படையினரின் கொலை வெறித்தாக்குதல்: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம்

பொதுமக்கள் இலக்குகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் கொலை வெறித் தாக்குதல்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சு வானூர்திகள் திடீரென வள்ளிபுனம் வான்பரப்புக்குள் இன்று வியாழக்கிழமை காலை 9:30 நிமிடமளவில் பிரவேசித்து கரித்தாஸ்-கியூடெக் நிறுவனங்களினால் நிர்மாணிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமான அகோரக் குண்டுவீச்சுக்களை நடத்தின.

இதன்போது ஒரு மாணவன் கொல்லப்பட்டும் எட்டுப் பேர் காயமடைந்தும் உள்ளனர்.

இக்குண்டுவீச்சின் போது அப்பிரதேசத்தில் அமைந்திருந்த இரு முன்பள்ளிகளைச் சேர்ந்த சிறுவர்களும் வள்ளிபுனம் கனிஸ்ட/உயர்தர மகாவித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் பயப்பீதியினால் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இப்பாடசாலை மாணவர்கள் பதுங்கு குழிகளுக்குள்ளும் வீதியோரங்களிலும் பற்றைகளுக்குள்ளும் பாதுகாப்புத்தேடி விழுந்து படுத்தனர்.

சிறிலங்கா அரசு இந்திய மத்திய அரசிற்கும் தமிழ்நாட்டிற்கும், மக்கள்மீது தாக்குதல்களை தாம் மேற்கொள்வதில்லை எனக்கூறி ஒருசில நாட்களுக்குள்ளேயே மக்கள் குடியிருப்புக்களான பரந்தனிலும் வள்ளிபுனத்திலும் கண்மூடித்தனமான வானூர்தி குண்டுவீச்சுக்களை நடத்தியுள்ளது.

அத்தோடு கிளிநொச்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்களையும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல மக்கள் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்தும் வீடுகள் சேதமடைந்தும் உள்ளன.

நேற்றைய பீரங்கித்தாக்குதலின்போது திருவையாறைச் சேர்ந்த காராளசிங்கம் பிரகலாதன் (வயது 43) என்பவர் கொல்லப்பட்டார்.

இன்றைய வானூர்தி குண்டுவீச்சின்போது மாணவனான சதீஸ்குமார் (வயது 16) கொல்லப்பட்டார்.

நவரத்தினம் தவக்குமார் (வயது 32)

மாணவியான பத்மநாதன் நிலோதினி (வயது 17)

நாகரட்ணம் நவரூபி (வயது 32)

புஸ்பகரன் சாந்தினி (வயது 34)

இராசேந்திரம் யேசுதாசன் (வயது 29)

மூன்று மாதக் குழந்தையான சிறினீவாசன் தமிழரசன்

ஆறுமுகம் மகேஸ்வரி (வயது 45)

மாணவியான பரமநாதன் தேவவதனி (வயது 18)

ஆகியோர் காயமடைந்தனர்.

சிறிலங்கா அரசின் தமிழ்மக்கள் மீதான கண்மூடித்தனமான வானூர்தி குண்டுவீச்சு மற்றும் பீரங்கித்தாக்குதல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அதில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த புலிகளின் குரல் செய்தியை கேட்க

புதுக்குடியிருப்பில் விமானக்குண்டுத்தாக்குதல் மாணவன் பலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.