Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்டர் ஜவன் சரியாகத்தான் சொல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்டர் ஜவன் சரியாகத்தான் சொல்கிறார்

- தாரகா -

சில தினங்களுக்கு முன்னர் விக்டர் ஜவனின் விடுதலைப் புலிகள் பற்றிய கட்டுரை ஒன்று படிக்க கிடைத்தது.

அதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தோல்வி தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் புலிகளின் தோல்வியால் தமிழ் மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்ற விக்டரின் அண்மைய குத்துக்கரணம் வெளியாகி இருந்தது.

இவ்வாறு விக்டர் ஜவன் கூறியது நமது தமிழ் அரசியல் கருத்திலாளர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னைப் பொறுத்த வரையில் விக்டர் சரியாகத்தான் சிந்தித்திருக்கிறார்.

அவர் கூறியதில் என்ன பிழை இருக்க முடியும்?

இவனுக்கு என்ன அறளை பெயர்ந்து விட்டதா என்று ஆத்திரப்படாதீர்கள் கொஞ்சம் பொறுமையாக மேலும் வாசியுங்கள்.

தென்பகுதியைப் பொறுத்தவரையில், விக்டர் ஜவன் பல்வேறு துணிச்சலான கருத்துக்களை கூறிவந்த ஒருவர், குறிப்பாக சிறிலங்கா அரசை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கர்ண கடூரமாக விமர்சிக்க பின்நிற்காதவர்.

அவரது இவ்வாறான பத்திரிகை தலையீடு சிங்களச் சூழலில் மட்டுமல்ல தமிழ்ச் சூழலிலும் விக்டருக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியது உண்மைதான்.

அந்த பின்புலத்தில்தான் தற்போது விக்டர் கூறிய கருத்துக்கள் நமது சூழலில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.

நாம் ஏன் நம்ப வேண்டும் பின்னர் ஏன் விசனப்பட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி?

நான் விக்டர் குறித்த கட்டுரையைப் படித்த போது எனக்கு முன்னர் இராணுவ ஆய்வாளர் டி.பி.சிவராம் எழுதிய 'விடிந்த பின்னர் இராமருக்கு சீதை என்ன முறை என்று கேட்கும் சிங்கள தேசம்" என்ற கட்டுரைதான் நினைவுக்கு வந்தது.

அதில் சிவராம் தனது அனுபவத்தினூடாக சிங்களத்தை அற்புதமாக விளக்கியிருக்கின்றார். படிக்காதவர்கள் அவசியம் தேடிப் படியுங்கள் தெளிவு பெறுவீர்கள்.

நாங்கள்தான் எதையுமே படிப்பதில்லையே ஆனால் புலிகளின் வெற்றிச் செய்திகள் மட்டும் நமக்குத் தேவை.

விக்டர் ஜவன் அவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை அறிந்தபோது என்னளவில் அதில் எந்த ஆச்சரியமோ அல்லது அதிர்ச்சியோ இருக்கவில்லை.

விக்டர் ஜே.வி.பி எனப்படும் தெற்கில் மட்டும் பெருமளவிற்கு இடதுசாரி அமைப்பாக கணிக்கப்படும் ஒரு அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர்.

ஜே.வி.பியின் தோல்வியைத் தொடர்ந்து அரச பொதுமன்னிப்பின் பேரில் பத்திரிகைத் துறைக்குள் இணைந்து கொண்டவர். அவ்வாறு பொதுமன்னிப்பு பெற்றவர்களில் பிறிதொருவர் இன்று தென்பகுதியில் முக்கிய அரசியல் கருத்தியலாளராக இனங்காணப்படும் பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட ஆவார்.

ஜே.வி.பியின் தமிழர் நிலைப்பாடு என்ன என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும். ரோகண விஜயவீர காலத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

அந்த அமைப்பில் இருந்து வந்தவர்கள் தமிழர் அரசிலுக்கு எதிர்நிலைக்கு செல்வதிலோ அல்லது புலிகள் தோற்கடிக்கப்பட்ட வேண்டும் என்று அவாக் கொள்வதிலோ நாம் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது.

விக்டர் ஜவன், சந்திரிகாவின் அரசிலில் பெரும் நம்பிக்கை வைத்து செயற்பட்டவர். ஆனால் அவர் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சந்திரிகா இருக்கவில்லை என்றதும் தனது அதிருப்திகளை கட்டுரைகளாக வெளிப்படுத்தி வந்தார்.

அந்த காலத்தில் சுதந்திர ஆணைக்குழுக்கள் நான்கினை அரசியல் யாப்பில் உறுதிப்படுத்துவதன் மூலம் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் யோசனை ஒன்றை முன்வைத்து வந்தார்.

தமிழர் தேசத்தின் அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியப்பட முடியும் என்ற கருத்துத்தான் அதில் பொதிந்திருந்தது.

ஜே.ஆர் கால மாகாண சபை தீர்வின் போது தென்பகுதியிலும் அதே வகை மாகாண சபை முறைகள் ஏற்படுத்தப்பட்டது என்பதும் இந்த இடத்தில் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். பிற்காலத்தில் சந்திரிகாவை விமர்சித்து ஒரு 'வுhந ஙரநநn ழக னநஉநவை' என்ற நூல் ஒன்றையும் எழுதியிருந்தார்.

இப்படியான விக்டர் ஜவன் தற்போது சிங்களம் களத்தில் சில முன்னேற்றங்களை கண்டிருக்கும் சூழலில் இதனை ஒரு, புலிகளை தோற்கடிப்பதற்கான இறுதி சந்தர்ப்பமாக கருதுகின்றார். இவ்வாறனதொரு கருத்தினை இன்று கொழும்பின் அனைத்து சிங்கள புத்திஜீவிகள் மத்தியிலும் காணலாம்.

இதில் விக்கடர் என்ன செய்வார் பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும். சிங்கள சூழலிருந்து தழிழர் விரோதம் என்பதைத் தவிர வேறு என்னதான் வெளிவர முடியும். இது காலத்திற்கு காலம் நாம் கண்டுவந்த ஒன்றுதான்.

கொல்வின் ஆர் டி சில்வா தொடங்கி நளின் டி சில்வா, தயான் ஜயதிலக என இந்த பட்டியல் நீண்டு செல்கிறது. தற்போது இதில் ஒரு புது உறுப்பினர் அவ்வளவுதான். இதில் அலட்டிக்கொள்ளவோ அங்கலாய்க்கவோ எதுவுமில்லை என்பதே எனது கருத்து.

புலிகள் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டுமென்பதுதான் கொழும்பில் தம்மை நடுநிலையாளராக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு சிங்கள புத்திஜீவிகளினதும் எதிர்பார்ப்பு.

அவ்வாறு நடந்து கொண்டால் புலிகள் புரட்சியாளர்கள் இல்லாவிடால் பாசிசவாதிகள். விக்டரின் நிலைமையும் இதுதான். இது கிட்டத்தட்ட ஒரு காலத்தில் புலிகளை ஆதரித்து இப்பொழுது பூண்டோடு அழிக்க வேண்டுமென்ற கருத்தில் தொழிற்படும் சுப்பிரமணிய சுவாமி, இந்து ராம் போன்ற பார்ப்பனிய சக்திகளுக்கு ஈடானது.

ஓவ்வொரு காலத்திலும் புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் அதீத சிரத்தை கொள்ளும் கொழும்பின் கொள்கை முன்னெடுப்பாளர்கள் அதற்கான சந்தர்ப்பம் பற்றியே பேசிவந்திருக்கினறனர். அதற்குரிய பொருத்தமான சிங்கள அரசினை ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்மொழிந்தும் வந்திருக்கினறனர்.

1987 இல் இந்தியா மூலம் அதனை சாதித்துக் கொள்ள வேண்டுமென்பதில் கவனம் செலுத்தினர். அது கைகூடவில்லை. பின்னர் மாத்தையா விடயத்தை கையாளுவதன் மூலம் புலிகளின் கதை முடிந்துவிடுமென நம்பினர். அதுவும் சரிவரவில்லை.

கடைசியில் பேச்சுவார்தைப் பொறியைப் பயன்படுத்தி புலிகளை கொஞ்சம் கொஞ்சமாக உருக்குலைத்து விடலாமென நம்பினர். அதுவும் படுதோல்வி.

தற்போது கிழக்கின் கருணா விவகாரம் தமக்கு கைகொடுக்கும் என நம்புகின்றனர். இந்த கருத்தில் பெருமளவு கொழும்பின் அனைத்து கருத்தியலாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கொள்கை முன்னெடுப்பாளர்கள் அனைவருமே ஒன்றித்து இருக்கின்றனர்.

பாவம் விக்கடர் ஜவன் மட்டும் அதிலிருந்து விலகி நிற்க வேண்டுமென்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும். அவர் அவரது தேசத்தின் எதிர்பார்ப்புகளை வெளியிடுகின்றார்.

அட, விக்கடரும் அப்படியா என்ற அங்கலாய்ப்புக்களை மூட்டைகட்டி வைத்து விட்டு தெளிவாக இருக்க முயல்வதே சாலச் சிறந்தது.

அது தற்போது யுத்த எதிர்ப்பு முன்னணி, சகவாழ்வு என்றபேரில் வலம் வரும் கொழும்பின் புத்திஜீவிகளிலும் நம்பிக்கை வைத்து விட்டு பின்னர் அங்கலாய்க்கும் அபத்தத்தையாவது தவிர்த்துக் கொள்ள உதவும்.

தமிழ்நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் (நானுட்பட) கூடிய சீக்கிரத்தில் ஒரு மனநோய் வைத்தியரைப் பார்ப்பது நல்லது. ஒரு புறம் பிரதேசவாத சாக்கடை நெடி, மறுபுறம் எம்மவரின் தேசிய உணர்வுகளில் இரட்டை வேட நாடகம், இன்னொருபுறம் ஈழத் தமிழரை வைத்து சதுரங்க ஆட்டம். இது போக சொறி நாய்களின் ஆய்வுக்கட்டுரைகள் படிப்பதில் வேறு பாதி பிராணன் போய்விடுகிறது. நிறைய சங்கதிகள் நடக்கிறது ஆனால் முடிவுதான் சரியில்லை. நியாயம் நேர்மை உண்மை ஜெயிப்பதற்கு ஏன் இந்த தாமதம் என்பதும் புரியவில்லை. ஈழத்தமிழர்கள் நாம் ஓடமுடியுமென்றால் ஏன் தவழுகிறோம். பறவைபோல் பறக்க முடியுமென்றால் ஏன் எறும்புபோல் ஊருகிறோம்? சந்தனத்தைப் பூசிக்கொண்டு சாக்கடையில் போய் விழ எத்தனைபேருக்கு இங்கே விருப்பம்? கொள்கை மாற்றம் மறுசீரமைப்பு இரண்டுமே வெகு தொலைவிலில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்கள் நாம் ஓடமுடியுமென்றால் ஏன் தவழுகிறோம். பறவைபோல் பறக்க முடியுமென்றால் ஏன் எறும்புபோல் ஊருகிறோம்?

சிந்திக்க வேண்டியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.