Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம்பெண் பாலியல் வல்லுறவு வழக்கில் எதிரிக்கு 12 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை- திருமலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு.

Featured Replies

கடந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருமலை உப்புவெளி பிரதேசத்தில் 16 வயதுக்குக் குறைந்த யுவதி ஒருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டு, அவரைக் குழந்தை ஒன்றிற்குத் தாயாக்கிய எதிரி ஒருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் 12 வருட கடுங்காவல் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபா தண்டமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

திருமணம் செய்வதாக ஆசை காட்டி, தன்னுடன் பல தடவைகள் உடலுறவு கொண்டு, 3 மாதக் கர்ப்பிணியாகிய பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டு எதிரி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்ததை அறிந்த திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த 16 வய’து இளம் பெண் மனமுடைந்து, மண்ணெண்ணெய் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். மண்ணெண்ணெய் அருந்திய இவரை உறவினர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, திருமணம் ஆகாத இந்தப் பெண் 3 மாதக் கர்ப்பிணியாக இருந்தமை வைத்திய பரிசோதனையின் போது உறுதியாகியதையடுத்து, இது தொடர்பாக பொலிசாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

பொலிசாரின் பூர்வாங்க விசாரணைகளின் பின்னர், 16 வயதக்குக் குறைந்த பெண்ணை ஒப்புதலுடனோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ உடலுறவு கொள்வதென்பது, நியதிச்சட்டக் பாலியல் வல்லுறவு என்ற சட்டவிதிக்கு அமைய இந்த வழக்கில் எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரினால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அரச சட்டவாதி செல்வி சுகந்தி கந்தசாமி வழக்குத் தொடுனர் தரப்பிலான சாட்சிகளை நெறிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண் சாட்சியமளிக்கையில், வீட்டில் தான் தனியாக இருந்தவேளை, எதிரி தமது வீட்டிற்கு வந்து தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஆசைகாட்டி, தன்னுடன் உடலுறவு கொண்டு பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாகத் தெரிவித்தார். தான் 3 கர்ப்பம் தரித்திருப்பது பற்றி அவரிடம் கூறுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றபோது, அங்கே அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பதைக் கண்டதாகவும், இதனால் மனமுடைந்து மண்ணெண்ணெணைக் குடித்துத் தற்கொலை செய்ய முயற்சித்தபோது, தனக்கு சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும், தான் கர்ப்பம் தரித்திருந்தமை வெளியில் தெரியவந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் கூறியதை எதிரி மறுத்துரைத்தார். இதனையடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதி எம்.இளஞ்செழியன் தமது தீர்ப்பில் தெரிவித்ததாவது:

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் எதிரி உடல் உறவு கொண்டது சாட்சியங்களின் மூலம் எண்பிக்கப்பட்டுள்ளது. எதிரியுடனான உடலுறவு காரணமாக பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமடைந்தமை வைத்தியரின் சாட்சியத்தின் மூலம் ஒப்புறுதி் செய்யப்படடுள்ளது, கர்ப்பம் காரணமாக அந்தப் பெண்ணுக்குப் பிறந்த ஆண்குழந்தை தந்தை யார் என தெரியாமல் வளர்ந்துள்ளது. வந்ததாகவும் அந்தக் குழந்தையை எதிரி பராமரிக்கவில்லை. குழந்தைக்கு 5 வயதானபோது அது கிணற்றில் தவறி வீழ்ந்து இறந்துவிட்டது என்பதும் சாட்சியங்களில் தெரியவந்துள்ளது. 16 வயதுக்குக் குறைந்த சிறுமியை குழந்தை ஒன்றைப் பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் எதிரிதான் என்பது நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. கல்யாணம் செய்வதாக ஆசை காட்டி, பாலியல் உறவு கொண்டு கர்ப்பம் தரிக்கச் செய்து, ஆண்குழந்தை பெறுவதற்குக் காரணமாக இருந்து பெண்ணையும் குழந்தையையும் ஏமாற்றி கைவிட்ட எதிரிக்கு 12 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ஐயாயிரம் ரூபா தண்டமும் கடும் தண்டனையாக விதிக்கப்படுகின்றது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு? நட்டயீடாக ஒரு லட்சம் ரூபா பெண்ணுக்குச் செலுத்த வேண்டும் எனவும் இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.என நிதிபதி எம்.இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

Virakesari.lk

இந்த அதிரடித்தீர்ப்புக்களை தாங்காத ஒட்டுக்குழுக்களும், இராணுவத்தினரும் அழுது புலம்பி அவரை ஒருமாதிரி வவுனியாவில் இருந்து இடமாறம் செய்து போட்டினம் கண்டியளோ ! அது தானே பார்த்தேன், யார் துணிந்து இப்படியான தீர்ப்பை சொல்லுற நாட்டாமை என்று. அது நம்ம இளஞ்செழியன். :unsure:

Edited by vidivelli

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.