Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நாம் என்னதான் விட்டுக்கொடுப்புகளை செய்தாலும் அரசின் போர் முனைப்பு ஒருபோதும் அடங்காது'

Featured Replies

"நாம் என்னதான் விட்டுக்கொடுப்புகளை செய்தாலும் அரசின் போர் முனைப்பு ஒருபோதும் அடங்காது'

இந்த அவசரகாலச் சட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு பிரகடனம் என்று கூறப்பட்டாலும் இது பொதுமக்களை பாதுகாக்கின்ற சட்டமல்ல. மாறாக, அரசையும் அரச அடிவருடிகளையும் பாதுகாக்கின்ற சட்டமாகவும் குறிப்பாக இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களின் குரல்களை நசுக்கின்ற, உரிமைப் போராட்டங்களை அழிக்கின்ற பயங்கரமான சட்டமாகவேயுள்ளது.

இந்த அவசரகாலச் சட்டப் பிரேரணையை இச்சபையிலே சமர்ப்பித்து பிரதமர் பேசும்போது உண்மைக்கு மாறான கருத்துகளை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து சபையில் உரையாற்றிய அரசசார்பு உறுப்பினர்களும் உரையாற்றும்போது ஒத்த கருத்துக்களையே வரிபிசகாது கூறுகிறார்கள். இவற்றில் இருந்து நாம் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுகிறோம். அரசு தற்போது சந்தித்துள்ள அரசியல் இராணுவ பொருளாதார இராஜதந்திர தோல்விகளை பின்னடைவுகளை மக்கள் மத்தியிலிருந்து மூடிமறைத்து மக்களை திசை திருப்பும் நோக்கமாகவே இந்தப் பேச்சுக்கள் அமைந்துள்ளன.

ஆனால், மக்கள் எதிர்பார்க்கின்ற சமாதானம் இந்த உலகம் எதிர்பார்க்கின்ற பேச்சுவார்த்தையின் ஊடான நிரந்தர தீர்வு இந்தப் பிறவியிலும் கிட்டப்போவதில்லை. யுத்தம்தான் இறுதியான உறுதியான முடிவு. யுத்தம்தான் இறுதியான உறுதியான முடிவென்றால் இந்த நாடு அழிவதைத்தவிர வேறுவழியில்லை. இதைத்தான் அரசியல்வாதிகளான நீங்கள் விரும்புகின்றீர்களா? தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் வாழ்ந்தால் உரிமையுடன் வாழவேண்டும். மடிந்தால் பெருமையுடன் மடியவேண்டும். இதுதான் எங்கள் முடிவு.

இன்றைய உலகில் மோசடிகள், ஊழல்கள், கொலை, கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள், மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், கப்பம் கோரல், காணாமல்போதல் அற்ற சமுதாயத்தை கொண்ட அரசையே ஒரு பரிபூரண மக்கள் அரசாக, ஜனநாயக சோஷலிச குடியரசாக கொள்ள முடியும். ஆனால், 1972 ஆம் ஆண்டு முதல் தன்னைத்தானே ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசாக பெயர் மாற்றிக்கொண்டு இலங்கைத்தீவு சிங்கள பௌத்த மக்களுக்கே சொந்தமானது இத்தீவில் சிங்கள பௌத்த அடையாளங்கள், விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வளர்க்கப்பட வேண்டும் என்ற மாமதையில் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பும் அதை நிறைவேற்றுகின்ற இந்த பாராளுமன்ற நடைமுறைகளும் இருக்கும் வரைக்கும் இந்த நாட்டை அல்லது இந்த நாட்டை ஆளுகின்ற அரசை ஜனநாயக சோஷலிச குடியரசு என்று எப்படி கூற முடியும்?

இன்று தமிழ் மக்களின் தாயக பூமியான வட, கிழக்கு பெரும் நிலப்பரப்பு இராணுவ அழுத்தம், பொருளாதார நெருக்குதல், போக்குவரத்துத்தடை என மும்முனைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. எமது மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு யுத்தத்தை என்றுமில்லாதவாறு அதிதீவிரமாக ஏவி விட்டிருக்கிறது. வகை தொகையற்ற கொலைகள், கைதுகள், சிறைவைப்புகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், காணாமல்போதல்கள், எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்கள் என தொடர்ச்சியான போர் நடவடிக்கைகள் இறுக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் வாழ்விடங்கள் இராணுவ அரண்களினாலும் படை நிலைகளாலும் நிரப்பப்பட்டிருக்கின்றன. மறுபுறத்தில் உணவுத் தடை, பொருளாதரத்தடை, போக்குவரத்துத்தடை, விவசாயத்தடை, மீன்பிடித்தடை, எரிபொருள் தடை, கல்வித்தடை, சுயதொழில்த் தடை என்று எம்மக்கள் உயிரோடு வாட்டிவதைக்கப்படுகிறார்கள். அரச படை நடவடிக்கையினால் இன்று வரை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 12,500ற்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சமயத் தலங்களும் பாடசாலைகளும் குண்டு வீச்சினால் நாசமாக்கப்பட்டுள்ளன. எட்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வடக்கு, கிழக்கில் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அதேவேளை, தமிழ் பத்திரிகையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், மனிதாபிமான ஊழியர்கள், வர்த்தகர்கள், மதகுருக்கள் போன்று பலர் காணாமல்போயும் கொலை செய்யப்பட்டுமுள்ளனர்.

வன்னிப் பிரதேச மக்களை பொறுத்தமட்டில் முற்றுமுழுதான அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சார்ந்த மாந்தை கிழக்கு, துணுக்காய், மல்லாவி, பூநகரி, முழங்காவில், அக்கராயன், கிளிநொச்சி, பரந்தன் என 2 1/2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தற்போதைய யுத்தத்தினால் சொந்த வீடுகளிலிருந்து குடிபெயர்ககப்பட்டுள்ளார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.