Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குமாரபுரத்தில் மூன்றாவது தடவை வான் தாக்குதல் : சிறுவர்கள் உட்பட ஐவர் காயம்

Featured Replies

கிளிநொச்சி, பரந்தனிலுள்ள குமாரபுரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இடம்பெற்ற வான்வழி வானூர்தித் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வன்னி வான் பரப்பில் தோன்றிய சிறீலங்கா வான் படையினர் இரண்டு குண்டுவீச்சு வானூர்திகள் இன்று பிற்பகல் 12:50 அளவில் மக்கள் குடியிருப்புக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தன.

இதன்போது இரண்டு அகவையுடைய சிறுவன் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக, ஐரோப்பிய தொலைக்காட்சியின் கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதே குமாரபுரத்தில் வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது தயாரது 31வது நாள் அந்தியேட்டி நிகழ்விற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டபோது இடம்பெற்ற தாக்குதலில் சிறுவனான மனோகரன் விதுரன் காயமடைந்துள்ளார்.

கடந்த 30 நாட்களுக்கு முன்னர் இவரது தாயாரான 33 அகவையுடைய உசா மனோகரன் சிறீலங்கா வான் படையினரது தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

காயமடைந்த விதுரன் தர்மபுரத்தில் தற்காலிகமாக இயங்கிவரும் கிளிநொச்சி பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமாரபுரத்தைச் சேர்ந்தவர்களான 12 அகவையுடைய சிறீஸ்காந் தரங்கன், இரண்டு பிள்ளைகளின் தயாரான 63 அகவையுடைய சிவராசா கெளரி, இரண்டு பிள்ளைகளின் தாயாரான் 72 அகவையுடைய, செல்லத்துரை கமலாம்பாள், மற்றும் பரந்தனைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 அகவையுடைய நாகலிங்கம் சிவராசா ஆகியோரே காயமடைந்த ஏனையோர் ஆவர்.

இவர்களில் இருவர் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து தருமபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிறீலங்கா வான் படயினர் இன்றைய தாக்குதலிலும் 9 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

வீடுகள் மட்டுமன்றி குமாரபுரத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமும், கடையும் சேதமடைந்துள்ளன.

பிற்பகல் 12:50 முதல் 1:20 வரையான 30 நிமிட நேரத்தில் 4 தடவைகள் சிறீலங்கா வான் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

கடந்த மாதம் 10ஆம் நாள் பரந்தன் குமாரபுரத்தில் சிறீலங்கா வான் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இன்று காயமடைந்த விதுரனின் தயார் உசா மனோகரன் உட்பட பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் காயமடைந்திருந்தனர்.

குமாரபுரத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயமும், கடை ஒன்றும் கடந்த 10ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலிலும் சேதமடைந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

கடந்த மாதம் 28ஆம் குமாரபுரம் மீது மீண்டும் மேற்கொள்ளப்பட்டிருந்த வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் காயமடைந்திருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது தடவையாக குமாரபுரம் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படங்களை பாக்க.........

http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

பரந்தனில் சிறீலங்கா வான்படை விமானங்கள் கொடூரத் தாக்குதல் - 2 வயது குழந்தை உட்பட 5 பேர் படுகாயம்[ ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 03:36.30 PM GMT +05:30 ]

சிறீலங்கா வான் படைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் இன்று பரந்தன் பகுதியில் நடத்திய கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட ஐந்து பொது மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மதியம் 12.50 மணியளவில் இரண்டு விமானங்கள் குமாரபுரம் பகுதியில் இந்தத் தாக்குதலை நடாத்தியுள்ளன.

கடந்த மாதம் சிறீலங்கா வான் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த திருமதி மனோகரன் என்பவரின் 31ம் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே, விமானப் படையினர் குறித்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் காயமடைந்த குழந்தை மனோகரன் விதுரன் (இரண்டு வயது) உயிரிழந்த தாயின் மகனாவார்.

கடந்த மாதம் நடைபெற்ற தாக்குதல் நடத்திய அதே இடத்தில் இன்றும் தாக்குதல் நடத்தியபோதே அப்பாவிப் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களின் விபரம்:-

இரு பிள்ளைகளின் தாயான செல்லத்துரை கமலாம்பாள் (72),

இரு பிள்ளைகளின் தாயான குமரபுரத்தைச் சேர்ந்த சிவராசா கௌரி,

நான்கு பிள்ளைகளின் தந்தையான பரந்தன் 5ம் வாய்க்காலைச் சேர்ந்த நாகலிங்கம் சிவராசா (54),

குமரபுரத்தைச் சேர்ந்த சிறீகாந்த தாரங்கன் (12),

மனோகரன் விதுரன் (2 வயது) ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 2வயதுடைய விதுரன் உட்பட இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இத்தாக்குதலில் 9 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் குமாரபுரம் முருகன் ஆலயமும் சேதமடைந்துள்ளது. அத்துடன், வர்த்தக நிலையங்களும் மேலும் சில வீடுகளும் இதில் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இதேவேளை கடந்த 30 நாட்களில் குறித்த பிரதேசத்தில் நான்கு தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

09_11_08_paranthan1.jpg

09_11_08_paranthan2.jpg

09_11_08_paranthan3.jpg

09_11_08_paranthan4.jpg

09_11_08_paranthan5.jpg

09_11_08_paranthan6.jpg

09_11_08_paranthan7.jpg

09_11_08_paranthan8.jpg

கலைஞர் கருணணணணணணா நிதி.......... அவர்களின் கவனத்திற்கு!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணணணணணணா நிதி.......... அவர்களின் கவனத்திற்கு!

அவரால் தனித்து ஒன்றும் செய்ய முடியாதாம். அப்படியான தலைவரை தான் தமிழ்நாடு கொண்டுள்ளது. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.