Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதேகொள்கைகளை வைத்துக் கொணடு அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வது எப்படி? மனோ:

Featured Replies

ஐ.தே.க அரசாங்கத்தின் அதேகொள்கைகளை வைத்துக் கொணடு அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வது எப்படி? மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்லவே? மனோ:

http://www.globaltamilnews.net/tamil_news....=3003&cat=1

நான் எந்த அதிசயத்தையும் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பு செலவினத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி வாக்களித்தால் தான் அது அதிசயம். டீபென்ஸ் வாச் இல் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பங்கேற்றதாக அறிந்ததற்குப் பிறகு நான் நினைத்தேன் ஆகக் குறைந்தது வாக்களிப்பதைத் தவிர்ப்பார்களென்று நினைத்திருந்தேன். அவ்வாறான எனது அபிப்பிராயம் உறுதியானதற்குக் காரணம் இப்போதைய ஆட்சிக்காலத்தில் 12000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான ரங்க பண்டார தெரிவித்திருந்தது.

இது எதைக்காட்டுகின்றதென்றால் ஐக்கிய தேசியக் கட்சி தந்திரேபாயமாக இருப்பது அரசாங்கத்தின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதும், அதன் மற்றெல்லா விடயங்களிலும் அரசாங்கத்தை எதிர்ப்பதும் என்பதுமாகும்.

இந்த இடத்தில் இரண்டு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஓன்று மற்றெல்லா விடயங்களிலும் அரசாங்கத்தை எதிர்ப்பது. மற்றையது அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரிப்பது. ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது. அரசாங்கம் மற்றலெ;லா வழிமுறைகளிலும் தோலிவியடைந்திருக்கிறது. இந்தத் தோல்விகளைப் பற்றி மக்களுக்கு விளங்க வைக்க நீங்கள் அதிக கஸ்டப்படத் தேவையில்லை. நீங்கள் டிபென்ஸ் வாச் போன்ற நிகழ்ச்சிகளினூடாக இன்னும் குறிப்பான விரிவான விடயங்களைப் பற்றி மக்களுக்கு அறிவூட்ட வேண்டியிக்கிறது. அரசாங்கத்தின் குருட்டுத் தனமான நடவடிக்கைகளையும் தோல்விகளைப் பற்றியும் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இப்போது ஒரேயொரு வழிமுறை தான் இருக்கிறது. அது தான் யுத்தம். யுத்தம் ஒன்று தான் அதனைப் பாதுகாக்கும் என்பது தான் உண்மை. மற்றெல்லாவற்றையும்விட மற்றெவரையும் விட போரைப் பற்றி அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

அரசாங்கத்தின் மற்றெல்லாத் தோல்விகளையும் நீங்கள் எதிர்த்தாலும் அது எந்த வகையிலும் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் நீங்கள் போரை ஆதரிக்கும் போது, அது குறிப்பிடத் தகுந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரசாங்கத்தைப் பலப்படுத்தும். அரசாங்கத்தின் மற்றத் தோல்விகள் பற்றிய பிரச்சாரம் எப்போது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால், அரசாங்கத்தின் போருக்கெதிரான பிரச்சாரத்தோடு பிணைக்கப்படும் போது தான். இல்லாவிட்டால் இந்த முயற்சிகளெல்லாம் நேரத்தை விரயப்படுத்தும் நடவடிக்கைகள் தான்.

இதனூடக சிங்கள் மக்கள் வந்தடையும் மிகப் பெரும் அபாயகரமான முடிவு என்னவென்றால் அவர்கள் தொடர்ச்சியாக யுத்தத்தை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்தடைந்து விடுவார்கள் என்பது தான். அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரிப்பது தான் முடிவென்றால் அரசாங்கத்தை மாற்றுவதற்காக மக்கள் ஏன் இவ்வளவு கஸ்டப்பட வேண்டும்? எதிர்க்கட்சியினரிடம் அதிகாரத்தைக் கையளிக்க மக்கள் ஏன் இவ்வளவு கஸ்டப்பட வேண்டும்.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியும் எதிர்த்தரப்பினரும் அரசாங்கத்தின் போர் முனைப்புகளுக்கு சவால் விடுக்காது இருக்கும் பட்சத்தில் எத்தகைய மாற்றங்கம் ஏற்படப் போவதில்லை. அரசாங்கம் இப்போதிருப்பதைப் போலவே சௌகரியமாக இருந்து கொள்ளும்.

ஆகவே எப்படியிருந்த போதும் போருக்கு எதிரான தந்திரோபாயம் என்பது அவசியமானதாகவே இருக்கிறது.

அரசாங்கம் குரூரத்தரமான அடக்குமுறையாளன் என்பது மட்டுமல்ல அது வெட்கங்கெட்ட தனமுடையதுமாகும். இன்றைய நிலையில் அரசாங்கத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும் பட்சத்தில் அது மற்றவர்களுடைய சுலோகங்கள், முழக்கங்கள்;, தந்திரோபாயங்கள், தேர்தல் அறிக்கைகள் என்பவற்றையும் எந்தத் தயக்கமுமில்லாமல் எடுத்து விடும்.

போருக்கான முழக்கத்தை ஜே.வி.பி. முன்னெடுத்தது. பேச்சுவார்த்தையின் ஆரம்ப காலகட்டத்தில் அது அதனை அரசாங்கத்தின் கைகளில் கொடுத்து விட்டது. அரசாங்கம் பெரிய ஆர்வம் எதுவுமில்லமாமல் அதனைக் கையில் எடுத்துக் கொண்;டது. பின்னர் தான் அது அறிந்து கொண்டது இந்தப் போர் முழக்கம் என்பது ஒரு மந்திரக் கோல் என்று. இந்த மந்திரக் கோல் அரச பொக்கிசத்திற்கான திறவு கோல். எல்லாவகை தண்டனைகளிலிருந்தும் தப்ப வைக்கும் கோல். அடக்கி ஒடுக்கவும், கொளையைடிப்பதற்கும் அதனை ஆர்ப்பரிப்பதற்கும் உதவும் ஒரு கோல் என்று. இப்போது அரசாங்கம் ஜேவிபியை அரசாங்கத்திலிருந்து துரத்தியடித்துவிட்டு போர் முழக்கம் என்கிற அந்த மந்திரக் கோலை தான் கையகப்படுத்திக் கொண்டது. பாவம் ஜேவிபி அதற்காக முறையிடக் கூட முடியவில்லை. அதேவேளை போரின் பெயரால் அரசாங்கம் முன்னெடுக்கும் போரை அரசாங்கத்திற்கு வெளியிலிருந்தே ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. யாருமே ஜேவிபியின் மற்றைய கோசங்களுக்கோ முழக்கங்களுக்கோ செவி கொடுக்கவில்லை. அதற்கு மேலாக என்ன நடந்தது, கட்சி இரண்டகப் பிளவு பட்டது.

அரசாங்கத்திற்கு நன்றி.

கொழும்பிலிருந்து டோகாவிற்குச் செல்லுவழியில் விமானத்தில் சோமவன்ச அமரசிங்கவிடம் இதனை நான் சொன்னேன்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பாருங்கள். மிகப்பெரிய விலை கொடுத்து 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இருந்து வந்த பாரிய அழுத்தங்களுக்கு மத்தியில் அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொண்டது. அதிகாரப்பகிர்வினூடாக மாகாண சபை அமைப்பு முறைகளை உருவாக்கியது. இது தான் ஐகிய தேசியக் கட்சியின் அரசியல் முழக்கமா இருந்தது. அதிகாரப் பகிர்வு எனும் விடயத்த்pல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடதுசாரிக்கட்சிகள் என அழைக்கப்பட்ட கட்சிகள் செய்ய முடியாத ஒரு முற்போக்கான விடயத்தை ஒரு முதலளித்துவக் கட்சி செய்து காட்டியது.

13வது திருத்ததச் சட்டத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஜேவிபியுடன் இணைந்து எதிர்த்தது. 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் மகிந்த ராஜபக்ச பெரும் பங்கு வகித்தார். இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரத்திலும் அவர் முன்னிலை வகித்தார்.

இப்போது நிலைமையைப் பாருங்கள் கடவுள் கொடுத்ததைப் போல மகாணசபை முறைமையையும், 13வது திருத்தச் சட்டத்தையும் இப்போது மகிந்த கையிலெடுத்துள்ளார். தானே 13வது திருத்தச் சட்டத்தை உருவாக்கியது போல இப்போது இந்தியாவுடன் இணைந்து செயற்படுகிறார் மகிந்த. ஐக்கிய தேசியக் கட்சிக்கு யாரும் எந்த நற்பெயரையும் கொடுக்கவில்லை. மகிந்த 13வது திருத்தத்சட்டத்தை தனது முழக்கமாகவே எடுத்துக் கொண்டு விட்டார். ஜேவிபியைப் போலவே ஐக்கிய தேசியக் கட்சியும் பிளவு பட்டு விட்டது. அரசாங்கத்திற்கு நன்றி.

மகிந்த ராஜபக்ச ஜேவிபியினரும் ஐ.தே.கட்சியினரும் விதைத்ததை அறுவடை செய்கிறார். ஐதேகவினரும் ஜேவிபியினரும் மகிந்த ராஜபக்ச முன்னெடுக்கும் போருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். ஜேவிபியை மறந்து விடுவோம். அது தனது போர், அதிகாரப்பகிர்வு மற்றும் இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாவிடின் அது முன்னால் ஓரடியையும் எடுத்து வைக்கப் போவதில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் இருந்த போது இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முனைந்த கட்சி. இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரேயொருமுறை இடம் பெற்ற அதிகாரப்பகிர்வுக்கு அடிப்படையான 13வது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்த கட்சி. ஆனால் பாருங்கள் இன்று என்ன நடக்கிறது?

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்த பலமும் இல்லாமலிருக்கிறது இந்தச் சாரமற்ற போரை எதிர்ப்பதற்கு. இந்தப் போரினால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவோ அல்லது பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டவோ முடியாது என்பதனைச் சொல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு தார்மீக பலம் இல்லாமலிருக்கிறது. இந்த நாட்டில் ஏற்கெனவே உள் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது. நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்சட்டத்தில் குறித்துக்காட்டப்பட்ட அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கும்படி ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சொல்ல இயலாமல் இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் மனங்களை போரினால் வெல்ல முடியாது என்பதைச் சொல்ல முடியாமலிருக்கிறது. சர்வதேச சமூகத்தை எதிரியாக்காதே என்று உரத்துச் சொல்ல முடியாமலிருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சிக்கு.

இப்போது அரசாங்கத்தோடு சிற்சில இடங்களில முரண்படும் சில கோசங்களுடன் அரசாங்கம் நடாத்தும் போருக்கு ஆதரவாக கோரஸ் போட்டுக் கொண்டு அரசாங்கத்தின் யுத்தத்தை ஆதரிக்கத் தான் முடிந்திருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சிக்கு.

ஓன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியைத் தழுவி வருவது ஏன்?

அரசாங்கத்தின் அதேகொள்கைகளை வைத்துக் கொணடு அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வது எப்படி? மக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்லவே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.