Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் கூடி தேர் இழுத்தால்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் கூடி தேர் இழுத்தால்...

[06 - December - 2008]

இன்பராஜ்

"இலக்கு' என்ற சொல்லைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இல்லை. மனித வாழ்க்கையில் இலக்கு இல்லையேல் எதிலும் நம்மால் வெற்றி பெற முடியாது என்பது மட்டும் உண்மை.

இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள ராணுவத்தினரின் இலக்கு, விடுதலைப்புலிகளை அடியோடு அழிப்பதில் மட்டுமல்லாமல் தமிழர்களையும், அவர்களது வம்சத்தையும் முற்றிலுமாக அழிப்பதும்தான்.

ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு போர் உக்கிரத்தை எட்டியுள்ள நிலையில், நமது தொப்புள்க்கொடி உறவுகள் காக்கப்பட வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களின் இலக்குதான் என்ன?

"இலங்கையில் தேவை உடனடிப் போர் நிறுத்தம்'

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றும் வரும் இந்தப் போருக்கு சில நாட்களில் முடிவு ஏற்பட்டுவிடுமா? என்ப து கேள்வி.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் வலியுறுத்திக் கூறுவது இலங்கையில் உடனடியாக வேண்டும் போர் நிறுத்தம் என்ற ஒற்றை வரி வாசகம்தான்.

கேட்டவுடன் மனதுக்கு இதம் தரும் இந்த வாசகத்தை நோக்கித்தானே நமது பயணம் இருக்க வேண்டும்?. ஆனால் தற்போதைய போராட்டங்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தாலும், குறிக்கோள் எட்டக்கூடியதாக இருக்கிறதா என்பதை போராட்டக்காரர்கள் ஒரு விநாடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

மக்களவை உறுப்பினர்கள் ராஜிநாமா(?), உண்ணாவிரதம், மனிதச் சங்கி, ஆர்ப்பாட்டங்கள், தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாகத் தீர்மானம் என பலகட்டமாக தங்களது எதிர்ப்பைத் தமிழகத்தில் பதிவு செய்த போதிலும், நம் போராட்டத்தின் இலக்கு எந்தளவுக்கு முன்னேறியுள்ளது என்றால், அந்த இடத்தில் ஒரு புள்ளியைக்கூட நம்மால் வைக்க முடியவில்லை.

ஏனென்றால், சிங்கள அரசை உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யும்படி நாம் (தமிழர்கள்) வலியுறுத்துகிறோம்.

ஆனால், சிங்கள அரசின் அதிபர் நம்நாட்டிற்கு வந்து, நம் பிரதமரை சந்தித்து, நிதானமாகப் பேசிவிட்டு தனக்கே உரித்தான பகட்டுச் சிரிப்போடு "இலங்கையில் போர் நிறுத்தம் என்பதற்கு தற்போது வாய்ப்பே இல்லை' என அறிவிக்கிறார்.

இலங்கையில் இதே வார்த்தையை அவர் கூறும் போது சிங்களவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்வதோடு, தேர்தல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்கையும் பதிவு செய்வார்கள். ஆனால், அவர் கூறியது கோடிக்கணக் கான தமிழர்கள் வாழும் இந்தியாவில்.

"போரை நிறுத்த மாட்டோம்', "தமிழர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை' என்று இந்தியாவில் வந்து கூறும் அளவுக்கு இலங்கை அதிபருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் உறுதுணையாக இருப்பது யார்?

இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கப்பட்டதா என பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்படும் போதெல்லாம் லாவகமாக பதில் கூறியபடி தப்பிச் செல்லும் தந்திரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்?.

நடைபெற்ற போராட்டங்களை விட்டுவிட்டு இனிவரும் போரா ட்டங்களைப் பற்றி நாம் சிந்தித்தாலும் அதற்கான விடையைத் தேடினாலும் அதற்கான பதிலும், போராட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான்.

முதல்வர் கருணாநிதி தலைமையில் டிசம்பர் 4ம் தேதி பிரதமரைச் சந்திப்பது என்பது நல்ல முடிவாக இருந்தாலும், ராஜபக்ஷ இந்தியாவுக்கு வந்து செல்வதற்கு முன் இந்த முடி வை எடுத்து பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருந்தால் நமது கோரிக்கைக்கு முடிவு கிடைப்பது பற்றி ஓரளவு தகவல் தெரிந்திருக்கும். இது தாமதமாக எடுத்த முடிவாகவே கருதப்படுகிறது.

புதிய கூட்டணியைத் தேடுவதற்கும், கூட்டணியில் இருந்து சிலரைக் கழற்றி விடுவதற்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினை யை கையில் எடுக்காமல், தமிழ் இனத்தின் பரிதாபநிலை தவிர்க்கப்பட வேண்டும் என்ற ஒரே கோணத்தில் இப்பிரச்சினையை அரசியல் கட்சியினர் கையாள வேண்டிய கட்டாய தருணம் இதுவே.

"ஊர்கூடி தேர் இழுத்தால்' என்ற வாசகத்தை மனதில் கொண்டு அனைத்துத் தரப்பினரும், ஒன்றுகூடி களத்தில் இறங்கினால் மத்திய அரசு செவி சாய்க்காமலா இருந்துவிடும்.

இதுவரை நடத்திய போராட்டங்களால் இலக்கை நம்மால் எட்டமுடியாவிட்டாலும், இலக்கை அடையும் அளவுக்கான போராட்டத்தை அனைவரும் ஒன்றுகூடி நடத்தினால் வெற்றி என்ற இலக்கு தேடி வரும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

தினமணி

தினக்குரல்

தற்போதைய இந்தியரசின் கொள்கை இழுத்தடிப்பின் இலங்கையரசின் புலிகளையழிக்கும் இலக்குக்கு துணைபோகக கூடிய கால இழுத்தடிப்பு என்னும் இலக்கு நோக்கி நகருகிறது..

தமிழக அரசு மற்றையகட்சிகளின் நெருக்கடிக்கு சமாளிப்பு இழுத்தடிப்பு,கால இழுத்தடிப்பு அதாவது மத்தியரசின் கொள்கையுடன் சேர்ந்த தமிழககட்சிகளுக்கு போக்கு காட்டுகின்ற இலக்கு..

இலங்கை இலக்கு= இந்தியாரசு இலக்கு+தமிழக அரசு இழுப்பு இலக்கு= புலிகளையழிக்கும்(தமிழ்மக்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.