Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேசியப் பிரச்சினைக்கு பெடரல் முறையில் தீர்வு காண முடியும் - கே.என்.சொக்ஸி:

Featured Replies

தேசியப் பிரச்சினைக்கு பெடரல் முறையில் தீர்வு காண முடியும் - கே.என்.சொக்ஸி:

http://www.globaltamilnews.net/tamil_news....=3010&cat=1

மாநிலங்களின் சம்மேளனமாக இலங்கை உருவாகுவதை தான் நியாயப்படுத்துவதாக தெரிவித்திருக்கும் ஐ.தே.க எம்.பியும் முன்னாள் அமைச்சருமான கே.எம்.சொக்ஸி சம்மேளனம் என்பது ஈழம் அல்ல என்றும் அது பிரிவினைக்கு இட்டுச் செல்லாது என்றும் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் அவசரகால நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சொக்ஸி, சர்வதேச பிரதிநிதிகள் குழுவானது தனது கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்க வேண்டுமெனவும் மாநிலங்களின் சம்மேளனத்தை அடிப்படையாகக் கொண்ட விதத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும என்றும் கேட்டுக் கொண்டார்.

தான் குறிப்பிடுபவை தனது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தெரிவித்தார். இன்றுடன் 240 ஆவது அவசர காலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் தான் கலந்து கொண்டுள்ளதாகவும் துரதிர்ஸ்டவசமாக இலங்கைக்கு ஒளிக்கீற்று கூட தென்படவில்லை. எந்தவொரு யுத்தத்திலும் எந்தவொரு தரப்பும் வெற்றி காண்பதில்லை. இருதரப்புக்கும் ஆட்கள், உடமைகள் இழப்புகள் ஏற்படுகின்றன. இறுதியில் எஞ்சுவது கசப்புணர்வு மட்டுமே எனவும் தெரிவித்தார்.

தேசியப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட தீர்வு அவசியம். கட்சி அரசியலுக்கு அப்பால் சகல தரப்பினரும் ஒன்றுபட்டுத் தீர்வு காண வேண்டும். தனிநாட்டுக் கோரிக்கையை எமது நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால்;, உள்மட்ட சுயாட்சி மற்றும் உள்மட்ட சுயநிர்ணயம் என்பவற்றுக்கான விதைகள் ஆழமாக வேரூன்றி விட்டன. இந்தக் கோரிக்கைகளை சகல அரசியல் கட்சிகளும், பிரஜைகள் அமைப்புகளும் தலையாய தேசிய பிரச்சினையாக அங்கீகரித்துத் தீர்வு காண வேண்டும்.

மாகாண முறைமை மற்றும் அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் என்பன ஏற்கெனவே எம்மிடம் உள்ளன. சில அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆதலால், சமாதானத்தை வென்றெடுக்க அதிகாரப் பகிர்வு பாதையில் நாடு மேலும் முன்னேறிச் செல்ல முடியும். தீர்வுக்கு சம்மேளனத்தை பயனுள்ளதொன்றாக பரிசீலிக்க முடியும்.

இலங்கையானது சுமார் 200 வருடங்களாக ஒற்றையாட்சி முறையில் நிர்வாகிக்கப்படுகிறது. 1815 ஆம் ஆண்டில் கண்டியை பிரிட்டிஸார் கைப்பற்றி இலங்கை முழுவதையும் ஆட்சி செய்த காலம் தொடக்கம். ஓற்றையாட்சி நடைமுறையிலிருந்து வருகிறது.

1948 ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த காலத்திலும் தற்போதும் ஒற்றையாட்சி முறைமையே நடைமுறையிலிருக்கிறது. அதேசமயம், இந்த நாட்டில் மூன்று பிரதான இனங்களும், நான்கு மதங்களும் இருக்கின்றன என்பதையும் நாங்கள் பல்லின, பலமத மக்களும் வாழும் தேசம் என்பதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும் என்றார். சோக்ஸி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.