Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TMVPயின் தலமைப் பொறுப்பு தொடர்பில் முரண்பாடு வலுக்கிறது

Featured Replies

TMVPயின் தலமைப் பொறுப்பு தொடர்பில் முரண்பாடு வலுக்கிறது – தற்கொலையாளிகள் தன்னிடம் இல்லை கருணா:

http://www.globaltamilnews.net/tamil_news....=3023&cat=1

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் நந்தகோபன் அண்மையில் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

ரி.எம்.வி.பி கட்சியின் தலைவராக பதிவுசெய்வதில் கருணாவும் பிள்ளையானும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறில்லாது போனால், தமக்கு நெருங்கிய ஒருவரை தலைவர் பதவியில் அமர்த்த இருவரும் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

ஐ.தே.க. கூறுவது போல் தற்கொலையாளிகள் தன்னிடம் இல்லை – கருணா:

ஐ.தே.க. கூறுவது போல எம்மிடம் தற்கொலை போராளிகள் இல்லையென்பதை தெரிவித்து கொள்கின்றேன். ஏனென்றால் நாங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ளவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் (கருணா அணி) விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான குழு நிலைவிவாதம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர் இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் சுமூகமான உறவுகளே நீடித்தன. எனினும் நிலைமை சற்று மோசமடைகின்றது. திட்டமிட்டு கொலைகள் இடம்பெறுகின்றன. இதனை தடுத்து நிறுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

தொப்பிகல மீட்கப்பட்டபோது 500க்கு மேற்பட்ட புலி உறுப்பினர்கள் தம்மிடம் சரணடைந்தனர். எனினும் தமது இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களில் பலர் வெளிநாடுகளுக்கும், சொந்த வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் புலிகளிடமிருந்து தாம் பிரிந்தபோது பலர் கொலை செய்யப்பட்டனர். தனது பெயரைக் கூறியவர்கள் பலியெடுக்கப்பட்டனர. புலிகளிடம் மீண்டும் சரணடைந்த மூத்த தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஜனநாயக நீரோட்டத்திற்குள் இணைந்து கொண்ட எம்மிடம் 100 தற்கொலை போராளிகள் இருக்கின்றனர் என்று கூறுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.

யுத்தத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்ற புலி பயங்கரவாத இயக்கத்தை 30 நாடுகள் தடை செய்துள்ளன. பிரபாகரனின் வரட்டு கௌரவமும், கொள்கையும் சிலருக்குப் புரியாது. தாழ்ந்து கொண்டிருக்கின்ற புலிகளின் கப்பலில் ஏறி சிலர் சவாரி செய்து கொண்டிருக்கின்றனர். ஆயுதங்களை வீசிவிட்டு வெளியேறியமையினால் கிழக்கில் வரலாற்று நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி துணிந்து விடயங்களை மேற்கொண்டு வருகின்றார். நீண்டகால யுத்த பூமியை உடனடியாக சமாதான பூமியாக மாற்றமுடியாது. இலங்கை இராணுவம் பலம் பொருந்திய இராணுவம் எனினும் புலிகளை ஏன் தோற்கடிக்க முடியாமலிருந்தது.அன்று முறையான அரசியல் தலைமைத்துவம் இருக்கவில்லை. எனினும் இன்று முறையான அரசியல் தலைமைத்துவம் இருப்பதனால் வடக்கும் விரைவில் மீட்கப்படும்.

இராணுவத்தினரால் இன்று இன சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சிலர் கூறுகின்றனர். எனினும் தமிழ் இளைஞர்கள் அன்று பலியெடுக்கப்பட்ட போது ஒன்றுமே பேசாமல் இருந்தனர். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தீர்மானம், திட்டமிடல், அமுலாக்கல் ஆகிய மூன்று விடயங்களையும் திறம்பட மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானத்தையும் திட்டமிடுவதை கோத்தபாயா ராஜபக்சவும்,இராணுவத் தளபதி அதனை அமுல்படுத்தியும் வருகின்றனர். இராணுவ நடவடிக்கையின் வெற்றி சிங்கள அரசாங்கத்தின் வெற்றியல்ல தமிழர்களின் வெற்றியாகும்.

யுத்தம் கொடுமையானது, கொடூரமானது என்பதை மும்பை தாக்குதல் உணர்த்தியிருக்கும். எனினும் இங்கு பாரிய நடவடிக்கை நிதான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கம் நினைத்தால் பொருளாதார தடையை ஏற்படுத்தலாம். ஆனால், அரசாங்கம் மனிதாபிமானத்தை மதிக்கின்றது எனவும் கருணா தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.