Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச மனித உரிமைகள் தினமும் இலங்கையின் இன்றைய நிலையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மனித உரிமைகள் தினமும் இலங்கையின் இன்றைய நிலையும்

வீரகேசரி வாரவெளியீடு 12/7/2008 10:09:36 AM - உலகில் மனித உரிமை பிரகடனத்தின் சரித்திரங்களை ஆராயுமிடத்து தற்போதைய உலகில்உள்ள பலர் நம்பவோ ஏற்றுக் கொள்ளவோ முடியாத பல உண்மைகள் புலனாகின்றன. மிக அண்மைக்காலமாக பெரும் சர்ச்சைக்குரிய நாடுகளான ஈரான், ஈராக் ஆகிய இரு நாடுகளும் அதாவது முந்தைய பாரசீகம், மெசபத்தேமியா என அழைக்கப்பட்ட நாடுகள் கிறிஸ்துவுக்கு முன் 539 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மனித உரிமை பிரகடனத்தின் பதிவில் உள்ளன.

சுருக்கமாக கூறுவதானால் பாரசீக போர் வீரர்கள், மெசப்பத்தேமியாவின் பாபிலோன் என்ற நகருக்குள் கி.மு. 539 இல் சென்று அங்கு தலைமுறை தலைமுறையாக அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுதலை செய்தபொழுது அதே வருடம் நவம்பர் மாதம் பாரசீக அரசன் பாபிலோனியாவுக்கு சென்று அங்கு ஓர் பிரகடனத்தை களி மண் பாத்திரத்தில் எழுதினாராம். அதை ""சைறஸ் மனித உரிமை பிரகடனமாக'' ஏற்றுக் கொள்கிறார்கள். இப் பாத்திரம் பிரித்தானியாவின் லண்டன் நூதனசாலையில் இருந்த பொழுதும் கடந்த இரு வருடங்களாக ஈரானின் நூதனசாலையின் கண்காட்சிக்கு இரவலாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

காலங்கள் உருண்டோடி ஐக்கிய நாடுகள் சபையின் உதயத்தை தொடர்ந்து 1946 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணைக் குழு உதயமாகியது. ஐம்பத்து மூன்று அங்கத்துவ நாடுகளைக் கொண்ட இம் மனித உரிமை ஆணைக் குழு, தனது முதல் வேலைத்திட்டமாக சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை உருவாக்குவதற்கு ஒரு குழுவை உருவாக்கியது.

இக்குழுவிலிருந்த அமெரிக்காவை சேர்ந்த திருமதி எளிறோர் நுஸ்வெல்ற், பிரான்ஸைச் சேர்ந்த ரேனேகசன், லெபனானை சேர்ந்த சாள்ஸ் மாலிக், சீனாவை சேர்ந்த திரு பென்ங் சன் சுங் ஆகியோருடன் வேறு பலரும் சேர்ந்து உருவாக்கிய ""சர்வதேச மனித உரிமை பிரகடனம்'' 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் உள்ள "பலேடு சாயிலோற்' என்ற மண்டபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த மனித உரிமை பிரகடனம் முப்பது சரத்துக்களை உள்ளடக்கியுள்ளது. இதில் முதலாவது சரத்து, சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது சரத்து இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடு மின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறப்படுகின்றது. சரத்து மூன்றிலிருந்து இருபத்தொன்று (3 21) வரை உள்ளவற்றில் மனித இனத்தின் சிவில், அரசியல் உரிமைகள் பற்றி கூறப்படுகின்றது.

அதாவது பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை பற்றி அவை கூறுகின்றன. மற்றைய சரத்துகளான இருபத்தி இரண்டிலிருந்து இருபத்தி ஏழு வரையானவை (22 27) மனித இனத்தின் பொருளாதார சமூக கலாசார உரிமைகளை உள்ளடக்கியுள்ளன. அதாவது வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் இறுதி சரத்துக்களான இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை இச் சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு, உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக் காணப்படுகிறது. இந்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை சரியான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கடமைப்பாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் உரியது. இப் பிரகடனம் நடைமுறைக்கு வந்த பொழுது ஐ.நா. வில் ஐம்பத்து எட்டு நாடுகள் மட்டுமே அங்கம் வகித்திருந்த காரணத்தினால் இவ் பிரகடனம் தனது ஐம்பதாவது வருடத்தை கொண்டாடியபொழுது விசேடமாக ""ஆசியான்'' அமைப்பை சேர்ந்த நாடுகளான மலேஷியா, சீனா போன்ற நாடுகள் இப்பிரகடனத்தை மறுசீரமைக்க வேண்டுமென கோரின.

இலங்கை இப்பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில் இலங்கை ஐ.நா. வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆங்கிலேய காலனித்துவத்திடமிருந்து இலங்கை அதே ஆண்டில் தான் சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. நாம் ஏற்கெனவே பார்த்த சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் சரத்தில் எவற்றை இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு சாதகமாக இலங்கை ஆட்சியாளர் பாவித்துள்ளார்கள்? உண்மையை கூறுவதானால் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை சரத்துக்களையும் இலங்கை மீறியுள்ளதற்கான ஆதாரங்கள் பல உள்ளன.

இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்ட குடியுரிமை, வாக்குரிமை பற்றி எடுத்துக் கூறும் சரத்தான இருபத்தியொன்று (21) மீறப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து 1956 ஆம் ஆண்டு சிங்களச்சட்டம் மூலம் சரத்து 2 உம் 3 உம் மீறப்பட்டுள்ளன. 1956 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இனக் கலவரங்கள் மூலம் சாரம் 3, 5, 12, 17 ஆகியவை மோசமாக மீறப்பட்டுள்ளன.

நூறு ஆண்டுகளுக்கு மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களை 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் நாடு கடத்தியதன் மூலம் சாரம் 4, 15, 23 ஆகியவை மீறப்பட்டுள்ளன. தமிழ் மாணவர்கள் சம கல்வி மறுக்கப்பட்டு தரப்படுத்தல் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் சாரம் 26 மீறப்பட்டுள்ளது. தொடர்ச்சியான அவசரகால நிலையுடன் கூடிய பயங்கரவாதச் சட்டம் மூலம் சரத்துக்கள் 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 மீறப்பட்டுள்ளன.

இது பற்றி மேலும் விபரிப்பதானால் அடிதடி, கல் எறி, தீவைப்பு போன்றவற்றால் தமிழர் மீது ஆரம்பிக்கப்பட்ட அடக்கு முறை இன்று எறிகணை, விமானத் தாக்குதல், கிளஸ்ரர் குண்டு வீச்சுக்கு வந்துள்ளது. இவை குறித்த விமர்சனங்களுக்கான இலங்கையின் மாறுபட்ட ஆட்சியாளர்களின் பதில் இது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்பதாகும். இது உண்மையாக இருந்தால் எந்த அரசு தனது மக்கள் மீது, இரு நாடுகளுக்கு இடையிலான போரில் பாவிக்கப்படும் ஆட்டிலெறி ஏவுகணைத் தாக்குதலையும் விமானத் தாக்குதலையும் தற்பொழுது கிளஸ்ரர் குண்டு வீச்சையும் மேற்கொள்கிறது?

இது மட்டுமல்லாது எங்கு உணவு, உடை, மருந்து போன்றவற்றால் அவதியுறும் மக்களுக்கு கொடுக்காது அவர்கள் தஞ்சம் கோரியுள்ள மண்டபங்கள் மீது கிளஸ்ரர் குண்டுகளை வீசி குழந்தைகளில் இருந்து முதியோர்வரை கொல்வார்கள்?

இலங்கை அரசாங்கம் கிளஸ்ரர் குண்டுகளை பாவிக்கிறது என்ற குற்றச்சாட்டை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நிராகரித்துள்ளார் என பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒரு ஜனநாயக அரசு, மனித உரிமைகளை மதிக்கும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையா? இது தான் தமிழ் மக்களுக்கு கடந்த அறுபது வருடங்களாக கிடைக்கப் பெற்ற தீர்வா? இப்படியõன மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் அரசு எப்படியாக நாட்டின் இறையாண்மை பற்றி பெருமை கொள்ள முடியும் என்பது பற்றி இந்த சர்வதேச மனித உரிமை தினத்தில் தன்னும் ஒரு தடவை சிந்திக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.