Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது – ஐ.தே.க:

Featured Replies

அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது – ஐ.தே.க:

www.globaltamilnews.com

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், யுத்தத்தை முன்னிலைப்படுத்தி பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டி சபையில் பிரேரணை ஒன்றினைக் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று திங்கட்கிழமை நம்பிக்கையில்லாப், பிரேரணையையும் சமர்ப்பிக்கவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடனேயே அரசாங்கத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய துறை அமைச்சும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இணைந்து முரண்பாடான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலமாக அரசாங்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலரை இழந்துவிட்டது.

ஹெஜிங் ஒப்பந்தம் அமைச்சரவையின் அனுமதியுடனேயே செய்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி பாராளுமன்றத்தில் அண்மையில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள நிலையில் ஹெஜிங் ஒப்பந்தம் அமைச்சரவைக்கு கொண்டுவரப்பட்ட விடயம் தொடர்பில் தமக்கேதும் தெரியாது என்று அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற மற்றுமொரு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே அரசாங்கத்திற்கு எதிராக தாம் திகதி குறிப்பிட்டு நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அஞ்சி அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் ஆளுந்தரப்பு வட்டாரங்களிலிருந்து தமக்குக் தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் திகதி குறிப்பிட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் இன்று திங்கட்கிழமை கட்டாயமாக சமர்ப்பிப்போம் என்றும் அவர் சொன்னார்.

இதேவேளை, யுத்தத்தை முன்னிலைப்படுத்துகின்ற அரசாங்கத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் சபையில் கடந்த வெள்ளிக்கிழமை பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தது.

எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜயசேகர, தலத்தா அத்துகோரளை, கயந்த கருணாதிலக்க ஆகியோரினால் பாராளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்பட்ட அந்த பிரேரணையை குறுகிய காலத்திற்குள் ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்குமாறும் அக்கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

விமானப் படைக்காக கொள்வனவு செய்யப்பட்ட மிக் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடிகள், மிஹின் லங்கா விமான சேவையை ஆரம்பிப்பதாகக் கூறி 9250 மில்லியன் ரூபாவை வீணடித்தமை, ஹெஜிங் ஒப்பந்தம், 2009ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கென 6,800 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் சமுர்த்தி, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்திற்கான செலவினங்கள் தொடர்பில் அக்கறை காட்டவில்லை.

அத்துடன், அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட துறைகளுக்கு சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்மொழிவுகள் இல்லை, சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் அகதி முகாம்களில் வாழ்கின்ற நிலையில் உள்ளூரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்கின்றவர்களுக்கு முறையாக நிவாரணங்களும் வளங்களும் வழங்கப்படுவதில்லை.

எனினும், 110 அமைச்சர்களுக்காக பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியே அந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் அரசாங்கத்திற்கு எதிராக இன்று திங்கட்கிழமை சமர்பிக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஹெஜிங் ஒப்பந்தம் தொடர்பில் மட்டுமே குறிப்பிடப்படவுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.