Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரா அல்லது போர் நிறுத்தமா?

Featured Replies

போரா அல்லது போர் நிறுத்தமா?

கலாநிதி குமார் ரூபசிங்க

வன்னிக் களமுனையில் இரு தரப்பினருக்கும் இடையிலான போர் இரக்கமற்ற வகையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அத்துடன் பரஸ்பரம் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. அண்மைக் காலமாக இடம்பெற்ற மோதல்கள் அனைத்தும் பலத்த மழைக்கு மத்தியிலேயே இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் கிளிநொச்சியில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு விருப்பம் கொண்டுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் படையினரால் கைப்பற்றப்பட்டு விட்டது என்ற செய்தியினையும் உலகத்துக்கு அறிவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை, கிளிநொச்சி பிரதேசமானது ஒருபோதும் தங்களிடமிருந்து வீழ்ந்து விடாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் அன்றைய தின உரையின் பிரகாரம் பார்க்கையில் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கத்தால் ஒருபோதும் முடியாது என்பது தெளிவாகின்றது. மக்கள் இல்லாமல் வெறிச்சோடிப் போய்க் கிடக்கும் கிளிநொச்சி நகர் முரட்டுத் தனமாக முற்றுகை இடப்படும் போது விடுதலைப் புலிகள் பார்வையாளர்களாக நின்றுகொண்டிருக்க முடியுமா? இல்லையா? என ஆர்வம் உள்ள தரப்பினர்கள் அனைவரும் மிக ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தமது நிலைகளைத் தக்கவைத்துக் கொள்வதிலும், எதிர்த் தரப்பினருக்கு அதிகமான சேதங்களை ஏற்படுத்துவதிலும் இரு தரப்பினரும் பரஸ்பரம் தயாராகி உள்ளனர் என்பதனையே இது காட்டுகின்றது.

போரின் விளைவுகள் மிகவும் கோரமானவை. அதிக எண்ணிக்கையிலான மக்கள் (2 இலட்சம் தொடக்கம் 3 இலட்சம் வரையானவர்கள்) போரினால் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும் அதிகமான மக்கள் வசிப்பதற்கு இடமில்லாமல் மர நிழல்களில் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். உணவு விநியோகமானது சீராக இல்லை. சிறுவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளனர். அங்கு மக்கள் படும் அவலங்கள் தென் மாகாணத்திலுள்ள மக்களை சென்றடையவில்லை. அங்குள்ள அதிக எண்ணிக்கையிலான மக்களின் வலி, வேதனைகள், நம்பிக்கையின்மை, கஷ்டங்கள், போன்றவற்றை ஊடகங்கள் மிக அரிதாகவே படம் பிடித்துக் காட்டுகின்றன. அதற்கு மாறாக போர் நடவடிக்கைகளுக்கு அவை தொடர்ச்சியாக தீனி போட்டு வருகின்றன. பரஸ்பரம் நாசம் விளைவிக்கும் போருக்குள் பொது மக்கள் சிக்குண்டுள்ளனர் என்பதை அவை வெளிக்காட்டத் தயங்குகின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு மக்களை வருமாறு கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை அங்கிருந்து தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி அதிகளவு மக்களை வரத் தூண்டும் நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்பு அளிக்கவும் அரசாங்கம் விரும்புகின்றது. ஆனாலும் சொற்ப அளவான மக்கள் பிரிவினரே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தமது இடங்களை விட்டு வெளியேறுவதற்கு உண்மையில் மக்கள் விருப்பம் அற்றவர்களாகவே இருக்கின்றனர் என்பது தெரிகிறது. தத்தமது வசிப்பிடங்களில் வசிக்குமாறும் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் மக்களில் சிலரை விடுதலைப் புலிகள் சிலவேளை வற்புறுத்தி இருக்கலாம்.

ஆனாலும், இவ்வளவு அதிகமான மக்களை தமது இடங்களை விட்டு வெளியேற விருப்பமற்றவர்களாக ஆக்குவது என்பது முடியாத காரியம். உண்மையிலேயே அதிகளவான மக்கள் அவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து கவலை அடைந்துள்ளனர். அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து யுத்த நவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அல்லது அவர்களின் சொந்த பந்தங்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள் என பலர் இந்த போரில் ஈடுபட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பணியாற்றுதல் நடவடிக்கை என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கின்றது. இராணுவத்திடம் சிக்கி துன்புறுத்தல்களை அனுபவிப்பதை விட போரில் மடிந்து விடுவது மேலானது என அவர்களில் சிலர் நினைக்கின்றனர். நிலைமை என்னவென்றால் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களின் ஊடாகவே அகதிகள் மிகவும் பிரயத்தனத்துடன் வெளியேறிச் செல்ல வேண்டி இருப்பதாகும். பொதுமக்கள் உதவி அற்றவர்களாக இருக்கின்றனர். அத்துடன் அவர்கள் அரக்கர்களுக்கும், ஆழ்கடலுக்கும் இடையில் அகப்பட்டுள்ளனர். போர் என்பது வெறுமனே நிலப்பரப்புகளை வெற்றிக் கொள்வது தொடர்பான மாயா ஜால நிகழ்வு அல்ல. மக்களின் மனங்களையும், எண்ணங்களையும் வெல்லவே போர் என அர்த்தப்படுகின்றது.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் துரதிர்ஷ்டம் என்னவென்றால் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலைப் புலிகளின் மார்க்கத்தினாலோ என்னவோ சர்வதேசத் தோடு நேரடியாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ் நாடு, டில்லி மற்றும் டொரண்டோ, இலண்டன், நியூயோர்க், மெல்போர்ன், போன்ற நாடுகளில் பல இடங்களில் விடுதலைப் புலிகளினால் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு ஒருமித்த குரலை ஓங்கி ஒலித்துள்ளதுடன் போர் நிறுத்தத்திற்கும் வலியுறுத்தியுள்ளது. தமிழ் நாட்டு முதலமைச்சர், மக்கள் பிரதிநிதிகளின் குழுவுடன் புதுடில்லிக்குச் சென்று இந்தியப் பிரதமரை சந்தித்திருக்கிறார்.

போர் நிறுத்தத்திற்கான அழைப்பு

போர் நிறுத்தத்திற்கான அழைப்பு முன்னொரு போதும் இல்லாதவாறு கடந்த காலாண்டில் மிகவும் அதிகரித்திருந்தது. இதில் எந்த மாற்றுவழிகளும் இல்லை. ஆனால் இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகிக்கும் என்றால் இலங்கை போர் நிறுத்தம் ஒன்றிற்கு சென்றே ஆக வேண்டும் என்று ஜாதிக்க ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த சிறிவர்னசிங்க தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். ஜாதிக ஹெல உறுமயவின் ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக அவர் வெளியிட்டு இருந்த அறிக்கையினால் அக்கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சரான சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் அமளிதுமளியொன்றுக்கு முகங் கொடுக்க நேரிட்டது. அதன் போது ஜாதிக்க ஹெல உறுமய கட்சி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அமைச்சர் சம்பிக்க வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்தப் பூனை தற்போது பைக்கு வெளியே இருக்கலாம். இந்நிலையில் அவர் சொல்வது போல் பார்த்தால் நெருப்பில்லாமல் புகையாது. ஜாதிக்க ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரினால் நிதர்சனமாக வெளியிடப்பட்ட இந்த ஊகக் கருத்தினால் கொழும்பு பரபரப்படைந்தது. இது மக்களினதும் அபிப்பிராயத்தை பரிசோதிப்பதற்கான உள்ளக ஒழுக்காக இருந்ததா? இந்தியாவின் அழுத்தம் இலங்கை அரசாங்கத்தை உறுத்துகின்றதா? என்பதை காலம் மட்டுமே பதில் சொல்லும்.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை முன்வைத்து அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்கு உதவ மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி தென்னிந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் மக்களை அணிதிரட்டியுள்ளது. இதன் மூலம் சர்வதேசத்தின் பார்வை திசைத்திரும்பியுள்ளதுடன் ஆச்சர்யத்திற்கும் உள்ளாகியுள்ளது. இதற்காகவென தென்னிந்தியாவிலுள்ள சில தமிழ் அரசியல் கட்சிகள் ஆயுதப் போராட்டத்துக்கு எதிரான பல தீர்வுகளையும் முன்வைத்தன. அத்தீர்வுகளை வலியுறுத்தக்கோரி மத்திய அரசுக்கு எதிராக பெருமளவிலான பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், மறியல் போராட்டங்கள், கடையடைப்பு என தென்னிந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் அளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசும் இலங்கை அரசும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரும் வரையில் இந்த போராட்டங்கள் தொடர்ந்தும் நடத்தப்படும் என்று தென்னிந்நிய அரசியல் கட்சிகள் அறிவித்தன. ஆயினும் இந்தியாவின் இந்த போராட்டங்களுக்கு செவி சாய்க்கவோ அல்லது அதனால் தமது நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றங்களைக் கொண்டு வரவோ இலங்கை அரசு தயாராக இல்லை என்பது மட்டும் வெளிப்படுகின்றது. ஆயினும் தென்னிந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் நின்றுவிடவில்லை. அவை வெளி மாநிலங்களிலும் கையாளப்பட்டன. அண்மையில் இந்தியாவிலுள்ள அனைத்துக் கல்லூரிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியொன்று தென்னிந்தியாவில் ஆரம்பித்து டெல்லி வரை கொண்டுசெல்லப்பட்டது.

கொம்மியூனிஸ்ட் கட்சிகளின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வகையிலான போராட்டங்கள் தற்போது அனைத்துக் கட்சிகள், அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இவற்றில் பாரதீய ஜனதாக் கட்சியான எதிர்க்கட்சி ஒருபடி முன்னேறி தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு ஆறு மாத காலப் பகுதியில் தீர்வு காண்போம் என்று அறிவித்தது. அவர்கள் அவ்வாறு எடுக்கப் போகும் தீர்வு அரசுக்கு முரணானதாக இருக்க மாட்டாது எனவும் அக்கட்சி தெரிவித்தது. இவ்வாறு அறிவித்த பாரதீய ஜனதாக் கட்சிக்கு ஆதரவான மேலும் சில கட்சிகளும் இக்கருத்தினையே முன்வைத்திருப்பதாக சில தகவல்கள் தெரிவித்தன.

பாரதீய ஜனதாக் கட்சியினால் வெளியிடப்பட்ட இக்கருத்து இத்தருணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதற்கான காரணம் இந்திய அரசியலமைப்பன் பிரகாரம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதே ஆகும். அதனால் இலங்கைப் பிரச்சினையை தமது அரசியல் பிரச்சினையாக மாற்றி எதிர்வரும் தேர்தலின் போது தத்தமது அரசியல் கட்சிகளை நிலைநிறுத்திக் கொள்ளவே சில கட்சிகள் முயற்சித்து வருகின்றன. கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதுடன் அவை குறித்து அமெரிக்காவின் தலையீட்டுடன் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் சில கட்சிகளின் முனைப்பாக உள்ளது. எதிர்வரும் தேர்தலில் வெற்றியைக் காண்போம் என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு நீண்ட தீர்வினை முன்வைக்கவும் காத்திருக்கின்றது போலும். இந்நிலையில் மும்பாயில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக இந்தியாவிலுள்ள முஸ்லிம் கட்சிகள் தீவிரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் மறுபுறமாக தமது தொடர்பாடல் ஊடகங்கள் வாயிலாக மக்கள் படும் அவதிகளையும் அவை தொடர்பான அதிர்ச்சியூட்டும் புகைப் படங்களையும் வெளி உலகுக்கு அனுப்பி வருகின்றன. அத்துடன் தமிழினத்தை கூண்டோடு அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான புகைப் படங்களை வெளியிடுவதற்கும் இந்த ஊடகங்களை புலிகள் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர். ஆயினும் இந்த விவாதமானது பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இலங்கை அரசாங்கம் உணவுப் பொருட்களை அனுப்பியதை திருப்திப் படுத்தவில்லை. மாறாக அந்தப் புகைப்படங்களின் சக்தி அவற்றை நம்பச் செய்கிறது. மேலும் விடுதலைப் புலிகளின் சிறு குழுவினர் தென்னிந்தியாவில் அமைப்பொன்றை கட்டமைப்பதற்காக மிக நெருக்கமாக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். ஊடகம், தென்னிந்திய சினிமாத்துறை என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கன.

கடந்த காலங்களில் மிகப் பிரபலமான இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களால் மிகப் பாரிய அளவிலான இரசிகப் பெருமக்களிடமிருந்து விடுதலைப் புலிகளுக்கு அனுதாபத்தினைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியானது தென்னிந்திய மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளதுடன் இலங்கை அரசாங்கமானது உதவி செய்யவில்லை என்ற எண்ணத்தையும் தோற்றுவித்துள்ளது. தென்னிந்திய மக்கள் சமூகம் டில்லியில் இருக்கின்ற இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தையும் சென்னையிலுள்ள கவுன்சிலர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டுள்ளது.

தொடரும்

http://www.thinakkural.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.