Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் அனுபவமுள்ள படையணிகளினால் படைத்தரப்பு பெரும் இழப்புக்களை சந்திக்கிறது: சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. இதனால் தான் படைத்தரப்பு இழப்புக்களை சந்தித்து வருகின்றது என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் "பிஸ்னஸ் டுடே' நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது நான் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக இருந்தேன். போர் நிறுத்த காலகட்டத்தில் படையினருக்கான பயிற்சிகளை நான் அதிகரித்திருந்தேன். போரை நாம் எதிர்பார்த்தோம்.

இராணுவத் தளபதியாக நான் பதவி ஏற்றதும் துருப்புக்களுடன் தயாராக இருந்தேன். இராணுவத்தின் சிறப்பு அணிகள் பலவற்றை விடுதலைப் புலிகளின் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தேன். எனது சிந்தனைகள் மரபு வழியிலானது அல்ல, அது வேறுபட்டதாகவே இருந்தது. இளநிலை அதிகாரிகளை களமுனைக் கட்டளை அதிகாரிகளாக நியமித்தேன்.

உதாரணமாக, ஐந்தாவது நிலையில் உள்ள மூத்த அதிகாரியையே யாழ். குடாநாட்டின் கட்டளை அதிகாரியாக நியமிப்பது வழக்கம். ஆனால், மூத்த அதிகாரிகளின் நிலையில் 15ஆவது இடத்தில் இருந்தவர் யாழ். குடாநாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. ஆனால் அதன் பலாபலன்கள் அதிகம்.

அதனைப் போலவே 58ஆவது படையணியின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்தர் சில்வா மூப்பு அடிப்படையில் 45ஆவது இடத்தில் இருப்பவர். அவர் தற்போது பூநகரியை கைப்பற்றியுள்ளார்.

இதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆதரவும் எனக்கு இருந்தது. நாம் இருவரும் இணைந்து தேவையான ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் கொள்வனவு செய்ததுடன் பயிற்சி மற்றும் உத்திகளையும் வடிவமைத்திருந்தோம்.

பதவிக்கு நாம் வந்தபோது 40,000 சிப்பாய்களுக்கு தலைக் கவசம் கிடையாது, பலரிடம் ஒரு தொகுதி சீருடைகளும் ஒரு சோடி சப்பாத்துக்களுமே இருந்தன. 40,000 பேருக்கான அங்கிகளுக்கும் தட்டுப்பாடு காணப்பட்டது. எல்லாவற்றையும் நாம் சீர்செய்தோம்.

விடுதலைப் புலிகள் போர் ஆரம்பிக்கும்போது 10 ஆயிரம் பேரைக் கொண்டிருந்தனர். பின்னர் மேற்கொண்ட படைச் சேர்ப்புக்களால் அவர்களின் பலம் 15 ஆயிரமாக உயர்ந்தது. ஆனால் அவர்களில் 12 ஆயிரம் பேர் தற்போது கொல்லப்பட்டு விட்டனர். எனவே, அவர்களில் தற்போது 2,500 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களுக்கு ஆட்பற்றாக்குறை உள்ளது.

எனினும் விடுதலைப் புலிகள் வசம் அனுபவமுள்ள படையணிகள் உள்ளன. எனவேதான் படைத்தரப்பு அதிகம் இழப்புக்களை சந்தித்து வருகின்றது. மிதிவெடிகளில் சிக்கி 500 படையினர் கால்களை இழந்துள்ளனர். வன்னியில் ஒவ்வொரு அங்குல நிலமும் பொறி வெடிகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, அது இலகுவான நடவடிக்கை அல்ல. என்றார் இராணுவத் தளபதி.

www.tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.