Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடப்பெயர்வினால் திணறும் கிளிநொச்சி மாவட்டம்: சுகாதாரப் பணிப்பாளர்

Featured Replies

இடப்பெயர்வினால் திணறும் கிளிநொச்சி மாவட்டம்: சுகாதாரப் பணிப்பாளர்

[ஞாயிற்றுக்கிழமை, 14 டிசெம்பர் 2008, 04:27 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி மாவட்டத்தின் பொது மருத்துவமனை உட்பட்ட பத்து மருத்துவமனைகள் இடம்பெயர்ந்து இயங்குவதுடன் 2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் இம்மாவட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர் என்று கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட மாவட்ட நிலவர அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சி மாவட்டத்தின் மக்கள் தொகையில் 44 ஆயிரத்து 893 பேர் தவிர ஏனையவர்கள் இடம்பெயர்ந்தவர்களாகவே உள்ளனர்.

2 லட்சத்து 17 ஆயிரத்து 903 பேர் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

இம்மக்களுக்கு பத்து மருத்துவமனைகள் இடம்பெயர்ந்த நிலையில் இயங்குகின்றன. ஆறு மருத்துவமனகைள் ஏனைய மருத்துவமனைகள் மற்றும் பொது சுகாதார நலத்துறை நிலையங்களுடன் இணைந்து இயங்குகின்றன.

பொது மருத்துவமனை பகுதியாக தருமபுரம் மருத்துவமனையுடனும் விசுமடு மகாவித்தியாலயத்திலும் இயங்குகின்றது. நகரில் உள்ள பொதுமருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவு இயங்குகின்றது.

இடம்பெயர்ந்த நிலையில் மூன்று சுகாதார மருத்துவ அதிகாரி செயலகங்கள் இயங்குகின்றன.

தொடரும் போரினால் மக்கள் பெரும் அவலங்களையும் இடர்களையும் சந்திக்கின்றனர். வன்னியில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இடம்பெயர்ந்த ஏற்ற இடங்கள் இன்றி அவலப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

173 பாடசாலைகள் தமது இடங்களை விட்டு இடம்பெயர்ந்து கொட்டில்களிலும் மரங்களின் கீழும் இயங்குகின்றன. இடம்பெயர்ந்த மாணவர்களில் 9 ஆயிரத்து 556 பேர் பாடசாலைகளுக்கு வரவில்லை.

ஏழு உதவி அரச அதிபர் அலுவலங்கள் தமது இடங்களில் அலுவலகங்களை கைவிட்டு இடம்பெயர்ந்துள்ளன.

மன்னாரில் - 02

முல்லைத்தீவில் - 02

வவுனியாவில் - 01

கிளிநொச்சியில் - 02

உதவி அரச அதிபர் செயலகங்கள் இடம்பெயர்ந்து விட்டன.

பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ளன. அண்மைய மழை காரணமாகவே கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்ட நிலங்களில் 163.2 மில்லியன் ரூபா பெறுமதியான பயிர்கள் அழிந்துள்ளன.

பல நூற்றுக்கணக்கில் மக்கள் தொழில்களை இழந்துள்ளனர். அவர்கள் குறைந்த அளவு நிவாரணத்தில் தங்கியுள்ளனர். அரிசி ஓரளவு இருந்தாலும் மரக்கறிகளுக்கு கடல் உணவுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

எரிபொருட்கள் தட்டுப்பாட்டால் மக்களுக்கான பொதுப் போக்குவரத்துக்கள் போதாமையாக உள்ளன.

இடம்பெயர்ந்த மக்களில் 50 வீதமானவர்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை. கிணறுகளும் சுத்தமற்ற நிலைமை காணப்படுகின்றது. பொதுக்கிணறுகளுக்கு குளோரின் போடும் நடவடிக்கை நடைபெறுகின்றது.

அத்துடன், மாற்றுவலுக் கொண்டவர்களை பராமரிக்கும் முதியவர்களை பராமரிக்கும் 10 நிறுவனங்கள் இருப்பிடம் - மலசலகூட வசதிகள் ஊட்ட உணவுகள் அவர்களுக்கான சிறப்புத்தேவைகள் இல்லாத நிலையில் பெரும் அன்றாட வாழ்வில் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன.

கல்லாறு மக்கள் குடியிருப்பு மீது இரவு வேளை நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஒருவர் இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

ஐந்து வயது சிறுவன் வலுவிழந்துள்ளான்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 2,100 பேர் உடலுறுப்புக்களை இழந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான சூழலில் மலேரியா பாதிப்பு தொடங்கியுள்ளது.

2008 இல் 44 பேர் மலேரியாப் பாதிப்புக்குட்பட்டுள்ளனர். மழை வெள்ளம் நுளம்புப் பெருக்கத்தை அதிகமாக்கியுள்ளது.

கடந்த மாதத்தில் மட்டும் தருமபுரம் மருத்துவமனையில் நான்கு பேரின் இறந்த உடலங்கள் கொண்டுவரப்பட்டன. 23 பேர் காயமடைந்து அனுமதிக்கப்பட்டனர். பாம்புக் கடிக்கு இலக்காகி 86பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்காக காத்திருக்கும் மருந்துப் பொருட்கள்

இந்த ஆண்டின் 4 ஆவது காலாண்டுக்கான மருந்துப் பொருட்கள் வவுனியாவில் இருக்கின்றன. இவை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்கின்றன.

அனுமதி கிடைத்தால் தான் அவற்றை கொண்டு வரமுடியும். இதற்கான வேண்டுகை இரண்டு மாதங்களின் முன்கொடுக்கப்பட்ட போதும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

மூன்று மாதங்களாக உயிர்காப்பு ஒட்சிசன் கொள்கலன் உருளைகள் அனுமதிக்கப்படவில்லை. சில நெருக்கடியான நோயாளர்கள் ஒட்சிசன் இன்மையால் இறந்திருக்கின்றனர்.

மலேரியாவை தடுக்க முன்நடவடிக்கை செய்யப்பட தேவையான பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் இவை அனுமதிக்கப்படவில்லை. அவசரமாக ஒட்சிசன் உள்ளிட்ட அவசிய மருந்துகள் கொண்டுவரப்பட வேண்டும்.

மேலும், எரிபொருட்கள் கடந்த மூன்று மாதங்களாக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனை மின்பிறப்பாக்கிகள்-நோயாளர்-காவூர்திகள் இயங்க முடியாத அளவுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும், ஊட்ட உணவளிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. மாவட்டத்தில் பொதுவாக மக்களிடம் குருதிச்சோகை ஊட்டமின்மை காரணமான நோய்கள் அதிகரித்துள்ளன.

15 வீதமானத்துக்கும் அதிகமான கருவுற்ற தாய்மார் குருதிச்சோகைப் பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். 5 வீதமானோர் குருதிச்சோகைப் பாதிப்புக்கு அதிகம் உட்பட்டுள்ளனர். ஊட்ட உணவுப்பாதிப்பால் அதிகம் சிறார்கள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் கடந்த மாதம் ஆறு கருச்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 41 ஆயிரத்து 407 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 280 பிறப்புக்களும் 11 இறப்புக்களும் நிகழ்ந்துள்ளன என்றார் த.சத்தியமூர்த்தி.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மிகவும் கஸ்டமான ஒன்று. முல்லைத்தீவு மருத்துவமனையும், இது போன்றதொரு நிலையை எட்டியுள்ளதால், மிகவும் மக்கள் அவதிப்படுகின்றார்கள். இராணுவக் குண்டு தாக்குதலில் இருந்து காயப்படுபவர்களைக் காப்பாற்ற வேண்டிய அதே வேளை, மழை, போன்ற காலநிலைகள், பாம்புக்கடி போன்றவற்றாலும், மக்களைக் காக்க வேண்டிய தேவை உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.