Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சின்னாபின்னமான தமிழ் குடும்பத்தின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சின்னாபின்னமான தமிழ் குடும்பத்தின் கதை

வீரகேசரி இணையம் 12/17/2008 9:57:21 AM - கிளிநோச்சி மாவட்டம் கல்லாறு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில், 28 வயதான நெல்லையா புஷ்பவள்ளின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இவரது தந்தை குண்டு வீச்சில் இறந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான புஷ்பவள்ளியின் கருப்பையில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது. இவரின் தாய் ஒரு கையை இழந்தார்.

மேலும் இவரின் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இவரின் இரண்டாவது மகனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழுவயதான மதியழகன் தனது வயற்றுக்கு கீழுள்ள பகுதிகளில் உணர்ச்சியை இழந்துள்ளார்.

இவரின் நிலை மீண்டும் வழமைபோல் திரும்ப வாய்ப்பில்லை என்று அவர் தற்போது சிகிச்சை பெற்று வரும் தருமபுரம் மருத்துவமனையின் மருத்துவர் பிரைட்டன் கூறுகிறார்.

தன்னால் சாப்பிட முடியவில்லை, படுக்கையில் புரண்டு படுக்க முடியவில்லை என்று மதியழகன் பிபிசி தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

புஷ்பவள்ளியின் கணவர் அவரை கைவிட்டு விட்டுச் சென்று விட்டார். அவரின் வீடும் தாக்குதலில் நாசமாகிவிட்டது. தற்போது போக்கிடமின்றி தருமபுரம் மருத்துவமனையில் இருப்பதாக பிபிசி தமிழோசை தெரிவித்துள்ளது

Edited by கறுப்பி

நன்றி. தேவையான கண்ணோட்டம் வெளிக் கொண்டு வரப்பட வேண்டிய விபரங்கள் விடையங்கள்.

போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தில் உருவான எதிர்பார்ப்புகள்.

ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் சிதைந்த கனவுகள் வாழ்க்கைகள்.

ஆழ ஊடுருவும் அணியின் கண்ணிவெடித் தாக்குதல்களில் சிதைந்த பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கைகள்.

எறிகணை வீச்சில் சிதைந்த வாழ்க்கைகள்.

கடற்படையின் தாக்குதல்களால் அழிந்த வாழ்வாதாரங்கள் வாழ்க்கைகள்.

விமானத்தாக்குதல்களால் அழிந்த வாழ்க்கைகள்

என்று வெளிக் கொண்டுவர நுற்றில் அல்ல ஆயிரக்கணக்கில் இருக்கிறது.

ஆனால் தமிழ்தேசியம் என்று கூத்தாடும் ஊடகங்கள் இராணுவத்தின் இறந்த உடல்களை வைத்து நடத்தும் கண்காட்சிகள், இராணுவம் தனது உயிருக்கு மதிப்பளித்து பணத்தால் வேண்டக் கூடியவை என்று விட்டுவிட்டு போகும் ஆயுதங்கள் தண்ணிப்போத்தல்கள் பொறுக்கி வைத்து கண்காட்சி நடத்தி அவற்றை 10 கோணத்தில் படம் பிடித்து உலகம் முழுவது அனுப்பி தனிநாட்டிற்கு அங்கிகாரம் கேட்கும் வினோதம் நடக்கிறது. இது போக 55 அடி கட்டவுட்டுக்கு தேவாரம் பாடி அபிசேகம் செய்யிற வேலை.

இந்த குடும்பத்துக்கு 'யாழ் நேசக்கரம்' தன்னாலன உதவியினை கண்டிப்பாக செய்யும். நிர்க்கதியற்று நிற்கும் இதைப்போன்ற பல உறவுகளின் துயரில் நாமும் பங்கெடுக்கிறோம்.

நன்றி. தேவையான கண்ணோட்டம் வெளிக் கொண்டு வரப்பட வேண்டிய விபரங்கள் விடையங்கள்.

போர்நிறுத்த உடன்படிக்கை காலத்தில் உருவான எதிர்பார்ப்புகள்.

ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களின் சிதைந்த கனவுகள் வாழ்க்கைகள்.

ஆழ ஊடுருவும் அணியின் கண்ணிவெடித் தாக்குதல்களில் சிதைந்த பள்ளிக் குழந்தைகளின் வாழ்க்கைகள்.

எறிகணை வீச்சில் சிதைந்த வாழ்க்கைகள்.

கடற்படையின் தாக்குதல்களால் அழிந்த வாழ்வாதாரங்கள் வாழ்க்கைகள்.

விமானத்தாக்குதல்களால் அழிந்த வாழ்க்கைகள்

என்று வெளிக் கொண்டுவர நுற்றில் அல்ல ஆயிரக்கணக்கில் இருக்கிறது.

ஆனால் தமிழ்தேசியம் என்று கூத்தாடும் ஊடகங்கள் இராணுவத்தின் இறந்த உடல்களை வைத்து நடத்தும் கண்காட்சிகள், இராணுவம் தனது உயிருக்கு மதிப்பளித்து பணத்தால் வேண்டக் கூடியவை என்று விட்டுவிட்டு போகும் ஆயுதங்கள் தண்ணிப்போத்தல்கள் பொறுக்கி வைத்து கண்காட்சி நடத்தி அவற்றை 10 கோணத்தில் படம் பிடித்து உலகம் முழுவது அனுப்பி தனிநாட்டிற்கு அங்கிகாரம் கேட்கும் வினோதம் நடக்கிறது. இது போக 55 அடி கட்டவுட்டுக்கு தேவாரம் பாடி அபிசேகம் செய்யிற வேலை.

இந்த மாதிரி எல்லா தளங்களிலும் வருகின்றது.நீங்கள் அதை படிக்காமல் மற்றவற்றை குறை சொல்லி என்ன லாபம்.அன்று போர் நிறுத்தம் செய் என்று சொல்ல வைத்தது இந்த மாதிரி தண்ணி போத்தல்களும் சிங்களவனின் உடல்களும் சிங்களவனுக்கு வக்காலத்து வேண்டிய ஒட்டுக்குழுக்களின் உடல்களை பார்த்துதான் நீங்கள் சொல்வது போல் மக்களின் பிரச்சனையை பார்த்து இல்லை.செஞ்சோலையில் இருந்து காரைதீவு வரை விமான தாக்குதல் நடத்தி படுகொலை செய்த படங்களை பார்த்து வந்ததில்லை சமாதானம்.சிங்களவனின் இறந்த உடல்களை பார்த்து வந்தது தான் சமாதானம் வரலாற்றை மீண்டும் படியுங்கள்.எல்லா நாடுகளிலும் மக்கள் ஏதோ ஒரு வகையில் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் நீங்கள் திரைக்கு முன் இருந்து விட்டு மற்றவர்களை குறை சொல்லாதீர்கள்.

'பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டாக இருப்பதாய் சொல்லியதாம்.அது மாதிரி தான் உங்கள் நிலமை'

பொன்ஸ் போர்நிறுத்த காலத்திலே நாங்கள் யுத்தத்தை எதிர்பார்த்தோம் அதனால் புலிகளின் பகுதிகளுக்கு உளவு நடவடிக்கையில் ஈடுபட்டோம் என்று சொல்லியிருக்கின்றான் அதையும் கவனத்தில் சொள்க.

Edited by THEEPAN0007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.