Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கறுப்பு செவ்வாய்" கிரேக்க போர் தெய்வத்தின் நாளில் 650 படையினருக்கு சேதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு செவ்வாய்" கிரேக்க போர் தெய்வத்தின் நாளில் 650 படையினருக்கு சேதம்

[ வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2008, 02:49.54 AM GMT +05:30 ]

இலங்கைப் படையினர் வடக்கில் கடந்த செவ்வாய்கிழமை 16 ஆம் திகதியன்று ஒரேநாளில் பாரிய இழப்புகளை சந்தித்துள்ளமையை கொண்டு அன்றைய தினத்தை கறுப்பு செவ்வாய்க்கிழமையாக கொள்ளமுடியும் என "ட்ரான்ஸ்கரண்ட்" இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை மாத்திரம் வடக்கின் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் படையினர் பாரிய சேதங்களை எதிர்நோக்கினர். அன்றைய தினம் படைத்தரப்பின் சேதம் 650 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை என்பது, "கிரேக்கத்தின் போர் கடவுளுக்குரிய தினமாகும்" இந்த தினத்தில் படைத்தரப்பில் 170 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 480 பேர் வரை காயமடைந்துள்ளனர். இதில் 300 பேர் சிறிய காயங்களுக்கே உள்ளாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உத்தியோகபூர்வ தகவல்களின்படி இந்த இழப்புகள் குறைத்தே காட்டப்பட்டுள்ளன. படைத்தரப்பின் தகவல்படி குறித்த மோதல்களில் 120 தமிழீழ விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தரப்பில் 45 முதல் 50 வரையான போராளிகள் வரை உயிரிழந்துள்ளனர்; எனினும் காயமடைந்தவர்களின் தொகை தெரியவரவில்லை என ட்ரான்ஸ்கரண்ட் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 16 ஆம் திகதியன்று படையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர். 53 வது படையணி கிளாலி, எழுதுமட்டுவாள் வெளிசெல்லும் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டாவது முன்னரங்க நிலைகளின் மீது தாக்குதல்களை நடத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது முன்னரங்க நிலைகளை படையினர் அழித்திருந்தனர். இந்தநிலையில் இரண்டாவது நிலைகளை நோக்கி நடத்திய தாக்குதல் வெற்றியளிக்காமல் படையினர் மீண்டும் தமது பழைய நிலைகளுக்கு திரும்பவேண்டியேற்பட்டது. இதன் போது படையினர் தரப்பில் 40 பேர் பலியாகினர். 160 பேர் காயமடைந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலும் 25 பேர் வரை உயிரிழந்தனர்.

அதேநேரம் 57ஆம் மற்றும் 58 ஆம் பிரிவுப் படையினர் வன்னியின் குஞ்சுப்பரந்தன் பகுதியில் இருந்து ஏ 9 பாதையை நோக்கி தமது படைநகர்வை ஆரம்பித்தனர். இதன் இரண்டாவது நகர்வு புளியங்குளத்தில் இருந்து கிளிநொச்சியை நோக்கி மேற்கொள்ளப்பட்டது. மூன்றாவது நகர்வு மலையாளபுரத்தில் இருந்து கிளிநொச்சிக்கு நடத்தப்பட்டது. நான்காவது நகர்வு திருமுறிகண்டியில் இருந்து ஏ9 பாதையின் ஊடாக இரணைமடுவுக்கு மேற்கொள்ளப்பட்டது.

எனினும் இந்த நகர்வுகளின் போது படையினர் பலத்த எதிர்ப்புக்களைச் சந்தித்தனர். கிளிநொச்சியையும் பரந்தனையும் உள்ளடக்கிய நிலையில் 18 கிலோ மீற்றர் தூரத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மண்மேடுகளை அமைத்துள்ளார்கள். அத்துடன் குஞ்சுப்பரந்தனில் இருந்து ஆங்கிலத்தின் எல் எழுத்து வடிவிலான மண்மேடுகளை அவர்கள் பரந்தனின் மேற்குபகுதி, இரணைமடு மற்றும் கிளிநொச்சியின் தெற்கு பகுதிகளை நோக்கி அமைத்துள்ளனர்.

இந்தநிலையில் இழப்புக்களுக்கு மத்தியில் படையினர் அடம்பனில் 5 கிலோமீற்றர் மண்மேட்டு பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பை கோடிட்டு ட்ராண்ஸ்கரண்ட் தெரிவித்துள்ளது. எனவே "கறுப்பு செவ்வாய்" 650 படையினரின் சேதத்துடன் முடிவடைந்துள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

tamilwin.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.