Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''பயந்தவன் தரித்திரம்.. துணிஞ்சவன் சரித்திரம்!' புலிகள் ஆதரிப்பில் சீமான் சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆதரிப்பில் சீமான் சீற்றம்

''பயந்தவன் தரித்திரம்.. துணிஞ்சவன் சரித்திரம்!'

டிசம்பர் 14--ம் தேதி, ஈரோட்டில் தமிழ் தேச பொது வுடைமைக் கட்சி, 'தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடத்தியது. அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சீமான், ''ராஜீவை விடுதலைப்புலிகள் கொன்னுட்டாங்கன்னு காங்கிரஸ் காரர்கள் பல்லவி பாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் களைத் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு லட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ்... அது சர்வதேசத் தீவிரவாதம் இல்லையா?'' என்று ஆவேச உரைவீச்சு நிகழ்த்த...

''விடுதலைப் புலிகளை ஆதரித்தும், ராஜீவ்காந்தியைத் தாக்கியும் பேசிய இயக்குநர் சீமானை தேசிய பாது காப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்!''என்று காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்கள் காங்கிர ஸார்.

சீமானிடம் பேசினோம். ''ராமேஸ்வரத்துல பேசினதுக் காக என்னை கைது

செஞ்சாங்க. என்ன பேசினேன்னு இன்னும்கூட எவனுக்கும் தெரியல. இப்ப பேசினதுக்காக மறுபடி உள்ளே போட்டா, இன்னும் அதிகமாகத்தான் பேசுவேன். நான் என்ன பொம்பள கையைப் பிடிச்சு இழுத்தேனா? கோடி கோடியா மக்கள் பணத்தைக் கொள்ளையடிச்சேனா? தமிழ் இன விடுதலைக்காகப் போராடுறேன். அதுக்காக சிறையில போடுறாங்கன்னா, கோடி முறை சிறைக்கு செல்ல தயார். சாக பயந்தவன் தரித்திரம் ஆகிறான். சாகத் துணிஞ்சவன் சரித்திரம் ஆகிறான்.

அன்றைய கூட்டத்தில் நான் பேசினதைக் கேட்டு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பேர் கைதட்டினாங்களே... அவங்க மேல என்ன வழக்கு போடுவாங்க? சீமான் பேசு வதை நிறுத்தி விட்டான் என்றால் ஒண்ணு, தமிழ் ஈழம் அடைந்திருக்கவேண்டும்... இல்லை, இந்த சீமான் உயிர் போயிருக்கவேண்டும்.

மும்பை நகருக்குள்ள புகுந்த பயங்கரவாதிகளை அறுபது மணி நேரத்துல அழிச்சுட்டோம். இலங்கையில இருக்கிற விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள்னா அவங்களையும் அறுபது மணி நேரத்துல சிங்கள அரசால் அழிச்சிருக்க முடியும்தானே? இல்லை, ஆறு மாசத்துல அழிச்சிருக்கலாம். அட... ஆறு வருசத்துல யாவது அழிச்சிருக்கலாம். முப்பத்தாறு வருஷமா போராடிக்கிட்டு இருக்காங்களே. அப்ப அது தீவிரவாத இயக்கம் இல்லை. வலிமையான மக்கள் விடுதலைக்கான ராணுவம்னு உறுதியாகுதே!

இத்தனை வருஷமா ஆயிரக்கணக்கில் ஈழத் தமிழர் களை படுகொலை செய்து கொண்டிருக்கிறார்களே... அமைதிப்படை என்ற பெயரில் இரண்டு லட்சம் பேரை அனுப்பினார்களே... அவர்கள் அப்பாவி தமிழர்களைத் தானே அழித்தார்கள். அது அமைதிப்படையில்லை, அநியாயப்படை! அவங்க செஞ்ச ஒரு நன்மையையாவது விரல் நீட்டிச் சொல்லமுடியுமா?

உலகிலேயே பிரபாகரன் போன்ற இன்னொரு வீரன் இல்லை. அதனால்தான், இந்த வீரனை விட்டுவைத்தால் உலகத்திலேயே வலிமை மிக்க ராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என்று பயப்படுகின்றனர். அண்டை தேசத்துல நம் சகோதரர்கள் படுறபாட்டைப் பத்தி பேசறதை தடுக்கற நாடு, என்ன ஜனநாயக நாடு? இலங்கையில எல்லா சித்ரவதைகளும் ராணுவக்கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில்தான் நடைபெறுகிறது. புலிகள் வசமிருக்கும் பகுதிகளை மீட்டெடுத்து, அங்கிருக்கற மக்களை வாழவைக்கப் போவதா ராஜபக்ஷே சொல்லிக் கிட்டு இருக்கானே(!)... எல்லாரையும் கொன்னுட்டு பிணங் களையாடா வாழவைக்கப் போற?'' என்று ராமேஸ்வர தொனியில் குரலை உயர்த்திக் கொந்தளித்தார் சீமான்.

''நீங்கள் விடுதலைப்புலி அமைப்பிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுவதாக சுப்ரமணியன் சுவாமி போன்றோர் சொல்கிறார்களே?'' என்றோம்.

''அவர்கள் எப்படி ராஜபக்ஷேவிடம் பெட்டி பெட்டி யாக பணம் வாங்கிக்கொண்டு விடுதலைப்புலிகளை எதிர்த்துப் பேசுகிறார்களோ... அதேபோல், நானும் விடுதலைப்புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர்களை ஆதரித்துப் பேசுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! இந்த அவதூறெல்லாம் என்னை முடக்கிவிடாது!'' என்றார் சீமான்.

விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.