Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழன் தலைமீது விழ எதற்கும் தடையில்லை!--ஈழமுரசு

Featured Replies

கசாப்புக் கடைக்காரனிடம் கருணையை எதிர்பார்த்ததாம் ஆடு. இன்று சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களுக்கு நீதி நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறவைக்கு.

இந்தப் பழமொழிதான் நன்கு பொருந்தும்.‘பேசித் தீருங்கள், பேசித் தீருங்கள்' என்று இன்னும் கீறல் விழுந்த ஒலித்தட்டுபோல் புலம்பிக் கொண்டிருக்கும் உலக நாடுகள் முதலில் சிறீலங்காவிடம் சென்று கேட்கட்டும், தமிழர்களுக்கு என்ன கொடுப்பீர்கள் என்று.

தமிழர்களுக்கு சாவையும் அழிவையும்தான் தருவோம் என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும்.

உலகின் எந்த நாடும் தனது நாட்டு மக்கள் மீதே வான் வழியான தாக்குதலை நடத்தியது கிடையாது. ஏன் அருகிலுள்ள இந்தியா கூட இலங்கையில் தமிழர்கள் மீதும், பாகிஸ்தானுடனான போரின் போது மட்டுமே விமானத் தாக்குதலை நடத்தியிருக்கும். தமது நாட்டில் எத்தனையோ குழுக்களுடன் அது இன்றும் போராடி வருகின்றது. ஆனால், தனது நாட்டில் எங்குமே அது வான் வழியாகத் தாக்குதலை நடத்தியது கிடையாது.

உலகில் வேறு எந்த நாட்டை எடுத்து நோக்கினாலும் தமது நாட்டு மக்கள் மீது தமது வான் படையின் மூலம் தாக்குதல் நடத்தியதாக வரலாறு இருக்காது. ஆனால், சிறீலங்கா மட்டும் அதற்கு விதிவிலக்கு. கடந்த நான்கு ஆண்டுகளில் வான் வழியாக மட்டும் 14 ஆயிரம் தொன் குண்டுகளை தமிழர் தலை மீது கொட்டியதாக அது பெருமைப்படுகின்றது. அதனை பெரும் வெற்றியாக அது அறிவிக்கின்றது. ஒரு காலத்தில் தமிழர்களின் தலைமீது மலக் குண்டுகளை வீசிக்கூட மகிழ்ந்தது சிங்களம்.

ஒருமுறை கேணல் கிட்டுவிடம் ஒரு சர்வதேச ஊடகவியலாளர் "உங்கள் தமிழீழம் எதுவென்று" கேட்டபோது, அவர் சற்றும் கூடத் தயங்காமல் அளித்த பதில், "எங்கெல்லாம் சிறீலங்கா வான் படை தாக்குதல் நடாத்துகின்றதோ, அதெல்லாம் தமிழரின் பிரதேசம்தான்" என்று. அவ்வளவிற்கு சிறீலங்கா வான்படை தமிழர் தாயகத்தில் குண்டு போடாத இடமில்லை என்ற அளவிற்கு அதன் அழிவுத் தாக்குதல்கள் ஆயிரம் ஆயிரம். இந்த வான் படையின் தாக்குதலில் அழிந்துபோன தமிழ் மக்களும், அவர்களின் சொத்துக்களும் கணக்கிட முடியாதவை. அங்கங்களை இழந்தும், எதிர் காலத்தைப் பறிகொடுத்தும் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பல ஆயிரக்கணக்கானவர்கள்.

இந்த நிலையில்தான் சிறீலங்காவின் வான்படை புதிய அவதாரம் எடுத்திருக்கின்றது. மனித குலத்திற்கே நாசத்தை விளைவிக்கக் கூடியவை, அணுகுண்டினைப் போன்ற மோசமான அழிவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்று சர்வதேச மனித நேயமிக்க நாடுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திவரும் கிளஸ்ரர் என அழைக் கப்படும் கொத்தணிக் குண்டுகளை தமிழர்களின் தலை மீது கொட்டி மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் ஒரு காட்டுமிராண்டித்தனமான நிலைக்கு சிறீலங்கா சென்றிருக்கின்றது.

கடந்த வாரம் வன்னிப்பகுதியில் இந்த வகையான குண்டுகளை வீசி அது மேற்கொண்ட மிகப்பெரும் அழிவு நடவடிக்கையில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என வயது வேறுபாடின்றி கொல்லப்பட்டும், காயப்பட்டும் தமது அங்கங்களை இழந்தும் அங்கவீனர்களாகியுள்ளனர்.

நோர்வேயில் இந்தக் கிளஸ்ரர் ரக குண்டுப்பாவனைக்கு எதிரான உடன்படிக் கையில் 100க்கும் அதிகமான உலக நாடுகள் கைச்சாத்திடவுள்ள மாநாடு புதன்கிழமை நடக்கவிருந்த நிலையில், நான்கு நாட்களுக்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை சிறீலங்கா வான் படை தமிழர்களின் தலை மீது அந்தக் குண்டுகளைக் கொட்டியுள்ளது.

சர்வ தேசரீதியில் இந்தக் குண்டின் பாவனையைத் தடைசெய்வதற்கு, இதுவரை தடைக்கு ஆதரவளிக்காத நாடுகளை யெல்லாம் ஒன்று திரட்டுவதற்கு மனித நேயம் மிக்க நாடுகள் எல்லாம் இணைந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தனது நாட்டு மக்கள் என்று சொல்லுகின்ற மக்களின் மீதே கொத்தணிக் குண்டுகளை வீசி ஒரு மோசமான இனப் படுகொலையை நடத்திக் கொண்டிருக்கின்றது சிங்கள இனவாதம்.

சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசியது மட்டுமல்ல, சர்வதேச போரியல் விதி முறைகளுக்கு முரணாக அகதிகளாக இடம் பெயர்ந்து தங்கியிருந்தவர்களின் முகாம் மீது தனது தாக்குதலை நடத்தியுள்ளது. அதுவும் ‘பாதுகாப்பு வலயம்' என அந்த இடத்தைப் பிரகடனப்படுத்தி, அங்கு சென்று மக்களைத் தங்குமாறு பணித்துவிட்டு அந்தப் பகுதியின் மீதே தாக்குதலை நடத்தியிருக்கின்றது.

ஆலயங்களில் போய்த் தங்குங்கள் என்று கூறிவிட்டு இவ்வாறுதான் நவாலி தேவாலயத்திலும் சிறீலங்கா வன்படை உயிர்ப்பலியெடுத்ததை யாரும் இலகுவில் மறந்திருக்க மாட்டார்கள். இப்படியான கோர வெறிகொண்ட சிங்கள இனவாத அரசிடம் இருந்து, இந்த சர்வதேசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்துவிடப் போகின்றது? சாவையும் அழிவையுமா? என்ற கேள்வியே இறுதியாக தமிழர்களிடம் எழுந்து நிற்கின்றது.

http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக்கேள்விக்கு யார் பதில் சொல்வது?!!!!!!

  • தொடங்கியவர்

இந்தக்கேள்விக்கு யார் பதில் சொல்வது?!!!!!!

சில ஒட்டுக்குழு தமிழர்களிடம் தான் என நினைக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.