Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன அழிப்பின் உச்சத்தை மூடி மறைக்கும் எத்தனங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பின் உச்சத்தை மூடி மறைக்கும் எத்தனங்கள்

[24 டிசம்பர் 2008, புதன்கிழமை 10:00 மு.ப இலங்கை]

"இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகின்றனர் எனக் கூறப்படுவதில் எந்தவித உண்மையுமில்லை."

- இவ்வாறு மலேசியாவில் போய் திருவாய் மலர்ந்தருளியிருக்கின்றார் ஜே. வி. பியின் எம்.பியும் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன்.

இலங்கையின் சிறுபான்மையினரான ஈழத் தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் மேலாண்மைத் திமிரிலும் பௌத்த - சிங்களப் பேரினவாத மமதையிலும் மிதக்கும் ஒரு கட்சியின் முந்தானையில் தொங்கிக் கொண்டிருப்பவரிடம் - அவர் தம்மையும் ஒரு தமிழனாக அடையாளப்படுத்திக் கொண்டாலும் கூட - இத்தகைய கருத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்.

பேரினவாதத்தினால் பெரும் இனவழிப்பை எதிர்கொண்டு, வரலாற்றில் மிகவும் மோசமான அழிவுகளை சந்தித்தபடி, சொல்லொணாத் துன்ப, துயரங்களில் சிக்குண்டு துவண்டுபோய்க் கிடக்கின்றது ஈழத் தமிழினம்.

"இந்த நாட்டின் வரலாற்றிலேயே இப்போதைய மஹிந்த அரசைப்போல கொடுமையான - கொடூரமான - அரசைத் தமிழர்கள் சந்தித்ததேயில்லை" - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கூறுகின்றமை போன்று பேரழிவு நாசங்களை இந்த அரசின் கைகளில் சிக்கித் தமிழினம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றது.

ஆனால்,ஜே.வி.பியின் எம்.பியான சந்திரசேகரனோ மலேசியாவுக்குப் போயிருந்துகொண்டு, இலங்கையில் தமிழருக்கு எதிராக இனப்படுகொலை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று நியாயம் பிளக்கின்றார்.

‘இனவழிப்பு’ என்பது வெறுமனே இனம் சார்ந்த மக்களைக் கொன்றொழிப்பது மட்டுமல்ல. அந்த இனம் தனித்துவமான தேசமாக - தேசியமாக - தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை இலக்குவைத்து அழிப்பதையும் கூட அது உள்ளடக்கும்.

பௌத்த - சிங்களப் பேரினவாத அரச ஒடுக்குமுறை, இலங்கைத் தீவில் தமிழர்கள் ஒன்றுபட்ட ஒரு தேசியக் கட்டமைப்பாக விளங்குவதற்கு அடிப்படையாக உள்ள ஒவ்வொரு ஆதாரத்தையும் இலக்கு வைத்துத் தாக்கி அழித்து வருகின்றது.

மொழி உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை, தாயகத் தனித்துவத்தைப் பேணும் நில உரிமை, பொருளாதாரத்தைப் பேணும் உரிமை என்று ஒவ்வொன்றாகப் பறித்து வந்த அடக்குமுறை நடவடிக்கை இன்று தமிழர்களின் வாழ்வியல் உரிமைகளையே கேள்விக்கு உள்ளாக்கி அவர்களைப் பேரவலப்பட வைத்திருக்கின்றது.

இப்படிப் பல்பரிமாண அரச ஒடுக்குமுறையின் விளைவாக இலங்கைத் தீவில் தனித்துவமான தேசிய இனம் என்ற தனது அடையாளத்தைப் பறிகொடுத்துப் பரிதவிக்கும் அளவுக்குத் தமிழினம் சிதறி, நலிவுற்று, தள்ளாடுகின்றபோது, தன்னைத் தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் இனப்படுகொலையோ அல்லது இனவழிப்போ இடம்பெறவேயில்லை என்று வாதிப்பது வேதனைக்குரியது. பேரினவாதக் கட்சி ஒன்றின் முந்தானையில் தொங்கிக்கொண்டு - ஒட்டிக்கொண்டு - அரசியல் நடத்தும் ஒருவரிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும். இப்படியான கூற்றைத்தான் நாம் செவிமடுக்க முடியும்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றமையைத் தாங்க முடியாமல் தமிழகம் இன்று கொதித்துக் கொந்தளித்து, கிளர்ச்சியுற்று நிற்கின்றது. தமிழகம் எங்கும் எழுச்சிகள், எதிர்வினைகள் பெருகியுள்ளன.

தமிழகத்தில் அரசியல்வாதிகள் மட்டுமல்லர், சமூகத்தின் சகல அங்கங்களைச் சேர்ந்தவர்களும் இலங்கையில் அவலப்படும் தங்களின் இரத்த உறவுகளுக்காக வீறுகொண்டு நிற்கின்றனர்.

நடிகர்கள், கலைஞர்கள், வர்த்தகர்கள், வசதியுள்ளவர்கள் என்றுமட்டுமல்ல - சிறையில் உள்ள கைதிகள், ஏழைகள், அரவாணிகள், வலது குறைந்தோர் என சமூகத்தின் சகல மட்டங்களைச் சேர்ந்தோரும் - ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் கொதித்தெழுந்து தமது உணர்ச்சிப் பிரவாகத்தை வெளிப்படையாகக் காட்டுகின்ற சூழ்நிலையில், தம்மை இந்திய வம்சாவளிப் பிரஜை என அறிமுகப்படுத்திக் கொண்டே ஈழத் தமிழர்களின் அவல நிலையை மூடி மறைக்கும் விதத்தில் - அவர்கள் இனப்படுகொலை ஆபத்தில் இல்லை என்று சந்திரசேகரன் எம்.பி. கூறுகின்றமை வேதனைக்குரியதே.

புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையே இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது. அரச கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் வகைதொகையின்றி இடம்பெறும் காணாமல் போதல்கள், கடத்தல்கள், சட்டவிரோதப் படுகொலைகளில் இருந்து - வன்னியில் வல்வளைப்புக்குள் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடை முதல் அப்பிரதேசங்கள் மீது நடத்தப்படும் கண்மூடித்தனமான யுத்தத் தாக்குதல்கள் வரை - அனைத்துக் கொடூரங்களுமே தமிழினத்துக்கு எதிரான இனவழிப்புச் செயற்பாடுகளின் அங்கங்களே. இதனைப் பேரினவாதிகளுக்கு காவடி தூக்கும் அரசியல்வாதிகள் தமது வாய்ச்சவடால் மூலம் மூடி மறைத்து விட முடியாது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.